#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! #சர்வதேச செய்தி. வெனிசுலா Issue : உலகில் எண்ணெய் வளம் மிகுந்த இடங்கள் கனடா, அரேபியா, ரஷ்யா, வெனிசுலா கடல்பரப்பு, கிழக்காசியாவின் புருனே பகுதிகள், சில ஆப்ரிக்க பகுதிகள் என சில உண்டு
இங்கு அபரிமிதமான எண்ணெய் வளம் ரஷ்ய கனடாவில் உண்டு, அரேபியா அடுத்த இடத்துக்கு வரும், வெனிசுலாவின் எண்ணெய் கிட்டதட்ட மூன்றாமிடம் அது பெரிய வளம் ஆனால் அதன் அடர்த்தி அதிகம் இதனால் கச்சா எண்ணெயினை பிரிக்கும் செலவும் அதிகம் இன்னொன்று இது கடலடி பிரதேசம் என்பதாலும் செலவு அதிகம்
வெனிசுலா அமெரிக்காவின் கட்டுபாட்டில் வந்ததாக டிரம்ப் நம்புவதை அடுத்து இனி வெனிசுலா எண்ணெய் அவர்களுக்கு , அப்படியே நாட்கள் எண்ணபடும் ஈரானிய தலைமை முடிந்தால் ஈரானிய எண்ணெய்வளம் அவர்களுக்கு
ஆனால் இப்படி பெரிய எண்ணெய் குவியலை வைத்து கொண்டு டிரம்ப் உருளை கிழங்கு பொரிக்கமுடியாது, தலையில் தேய்க்கவும் முடியாது இவற்றை பணமாக்க சந்தை வேண்டும்
அந்த இந்திய சந்தையினை குறிவைக்கின்றார் டிரம்ப், ரஷ்ய எண்ணெய் நிறுத்தபட்டால் அந்த இடத்தில் அமெரிக்க எண்ணெய் பாயும் இது அமெரிக்க வியாபாரத்தை பெருக்கும்
மோடி அரசு என்ன செய்யும் என நினைக்கின்றீர்கள்?
இது மிக மிக ராஜதந்திரமான அரசு, ரஷ்யா அமெரிக்கா என இருதரப்பாலும் நாட்டுக்கு என்ன லாபம் என்றே கணக்கிடும் அதனால் இருபக்கமும் பேரம் பேசி இந்தியாவில் எண்ணெய் விலையினை இன்னும் குறைக்கத்தான் செய்யும் இருவரையும் பகைக்காமல் அதே நேரம் யாரோ ஒருவர் கையில் முழுக்க விழாமல் நாட்டுக்கு எது நலமோ அதை சரியாக செய்யும்
விரைவில் பெட்ரோல் விலை 80 ரூபாய்க்கு வரலாம், அந்த சரித்திர சாதனையினை மிக சாதுர்யமாக மோடி அரசு செய்யும் இருந்து பாருங்கள்
இப்போதே ரஷ்ய மலிவு விலை எண்ணெயால் மோடி அரசால் விலையினை குறைக்க முடியும், ஆனால் இது மக்களுக்கான பயனாக வரும் என்றாலும் இந்தியாவின் பொதுதுறை எண்ணெய் ஊழியர் சம்பளம், பெட்ரோல் பங்க் எனும் விநியோகிஸ்தர்களுக்கான கமிஷன் என எல்லாமும் அப்போது குறையும்
இந்திய அரசு ஊழியரின் சம்பளமும் அப்போது குறையும், டீலர் கமிஷனும் குறையும் இது பெரிய குழப்பமாகும் எதிர்கட்சிகளுக்கு சாதகமாகும் என்பதால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை என்பதை அறிந்தே மோடி அரசு கவனமாக நகர்கின்றது, விரைவில் டிரம்ப்-ன் அட்டகாசத்தில் அதற்கான காலம் விரைவில் வரலாம்
எல்லோரும் நினைப்பது போல் டாலர் வலுபெற்று இந்திய பணம் வீழவில்லை, டாலர் நிஜத்தில் சரிகின்றது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு முதல் பல சிக்கல்கள் டாலரை தள்ளாட செய்கின்றன
இதனால் அமெரிக்க டாலருக்கு டிரிப்ஸ் ஏற்றவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது அதனால் உலக எண்ணெய் வியாபாரத்தை முழுக்க கையில் எடுத்து டாலரை உயர்த்தும் இக்கட்டான நிலையில் டிரம்பர் உள்ளார், வெனிசுலா ஈரான் என அவர் வரிந்து கட்டுவது அதனாலேதான் ஆனால் அவரின் திட்டம் முழுக்க பலிக்குமா இல்லை நோபல் பரிசுக்கு ஆசைபட்டு இப்போது ஆள் கடத்தல் விமான சங்கர், ஆள் கடத்தும் அமெரிக்க வீரப்பன் என பட்டம் மட்டும் பெறுவாரா என்பது இனிதான் தெரியும். From பிரம்மரிஷியார் FB