சிந்தனை.*.( 18.03.2026)..
...........................................
*' எதுவும் நிரந்தரமில்லை '', .*
…………………………………
இங்கே பல துயரங்களுக்குக் காரணம்..எல்லாமே நிரந்தரம் என எண்ணிக் கொள்வது தான்.....
ஒரு துன்பம்..ஒரு பிரச்சனை வந்து விட்டால் போதும்... எல்லாவற்றையும் வெறுத்து அப்படியே ஜடம் போல் ஆகி விடுகிறார்கள்....
சாப்பிடப் பிடிக்காது.. தூக்கம் வராது.. யாரோடும் மனமொத்துப் பேச முடியாது.எப்பொழுதும் எதையோ இழந்தது போல் சோகக் காட்சி தான்....
இங்கே நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, துக்கங்கள் எப்படி நிரந்தரமில்லையோ,... அதுபோல நிலையற்ற இந்த உலகில் நிலையானது.. நிரந்தரமற்றத் தன்மையே...
இன்று ஆயிரம் ரூபாயைத் தொலைத்து விட்டால்.. எல்லாமே முடிந்ததா என்ன... நாளையே கூட... புதிய வருமானங்கள் வந்து சேரலாம்..
புதிய வாய்ப்புகள். எதிர்பாராத சொத்துக்கள் வந்து சேரலாம்..இங்கே எல்லாமே எதிர்பார்ப்பு தான்..... எதிர்பார்த்தலில் தான் நம்பிக்கையோடு காலம் நகர்கின்றது....
இந்த நிமிடத்திற்கும்... அடுத்த நிமிடத்திற்கும் இடையே எது வேண்டுமானாலும் நடந்தேறி விடலாம்....
ஒரு எதிர்பார்ப்போடு, ஈர்ப்போடு,ஆனந்தமாக.
உற்சாகமாக,அடுத்து என்ன ..அடுத்து என்ன... என்ற உந்துதலோடு. நமது அன்றாடக் கடமைகளை... ஒரு சஸ்பென்ஸ் நாவல் படிப்பது போல்.. அட்டகாசமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்க வேண்டுமே அல்லாமல் கவலைப்பட்டு இருக்கக் கூடாது..
எதற்காக இந்த குறுகிய கால வாழ்க்கையில் எப்பவும் ஒரே சோக வயலின் இசைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கொண்டு... கண்ணீர் விட்டுக் கொண்டு வாழ வேண்டும்.?
ஆற்றில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டு இருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.
அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.
ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.
அங்கு இருந்த ஒரு பெரியவர்,”அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததைப் பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?” என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
பெரியவர் சொன்னார், ”அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.
ஆற்றில் கைத்தடி மிதந்து வந்தது.
இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.
அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்து இருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா? ” என்றார்..
*ஆம்.,நண்பர்களே..,*
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.
ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கு எல்லாம் அது தான் காரணம்.🌺🙏🏻🌹
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு