திருநீற்றுச் சுவடு
615 views
6 days ago
*🔥திருச்சிற்றம்பலம்🔥* இன்று தை மாதம் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை இந்நன்னாளில் நாம் காணப் போகும் சிவத்தலம் 🛕🪔🛕🪔🛕🪔🛕 *பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்* *திருஞானசம்பந்தரால்* தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடின் *விழுப்புரம் மாவட்டம்,* விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் இது *20வது தலமாகும்* . தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இது *231வது* சிவத்தலமாகும் 🪔☘️🪔☘️🪔☘️🪔 மூலவர் திருநாமம் *பனங்காட்டீஸ்வரர்* ,பனங்காட்டீசன் (நேத்ரோதாரகேஸ்வர சுவாமி) தாயார்: *சத்யாம்பிகை* , மெய்யாம்பிகை, புறவம்மை தல விருட்சம்: *பனை மரம்* தீர்த்தம்: *பத்ம தீர்த்தம்* பனை மரம் தல விருட்சமாக உள்ள கோயில்கள் மொத்தம் ஐந்து உள்ளன. அவை 🌺🌿🌺🌿🌺🌿🌺 ☘️ *பனையபுரம்* 🌹 *திருமழப்பாடி* ☘️*திருப்பனந்தாள்* 🌹 *திருவோத்தூர்* (செய்யாறு) ☘️*திருக்கன்றாப்பூர்* (கண்ணாப்பூர்) 🌺🌿🌺🌿🌺🌿🌺 *தல வரலாறு* சிவபெருமானை நிந்தித்துத் (தான் நடத்திய வேள்விக்கு அழைக்காமல்) தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட சூரியன் மற்றும் அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான் தான் செய்த தவறுக்கு வருந்தி சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றார் சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார்பனங்காட்டூரும் ஒன்றாகும். *தல பெருமை* பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் ஐந்தனுள் இதுவும் ஒன்று பிற தலங்களினின்றும் வேறுபாடறிவதற்காக காடுகளால் சூழ்ந்த பகுதியாக இத்தலம் விளங்கியமையின் (புறவு சோலை, காடு) ' *புறவார் பனங்காட்டூர்* என்றழைக்கப்பட்டது முல்லை நிலக் காடுகளால் சூழப் பெற்று இத்தலம் விளங்கியதால் புறவார் பனங்காட்டூர் என வழங்கப்படுகிறது. *சிபிச்சக்ரவர்த்தி* தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காத்தற்காகத் தன் கண்களைப் பறித்தளிக்க இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சி தந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார் அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் *நேத்ரோதாரகேஸ்வர சுவாமி* என பெயர் ஏற்பட்டது. ☘️🌹☘️🌹☘️🌹☘️ *கோயில் அமைப்பு* கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம் பலிபீடம் நந்தி ஆகியவை வெட்டவெளியில் காணபட்டதை வணங்கினோம். வெட்டவெளியில் உள்ளதால் காற்று அடிக்கும் போது கொடிமரத்தில் உள்ள சிறு மணிகள் ஆடி அசைந்து மங்கல ஒலியை எழுப்பி கொண்டே இருந்தது மகிழ்ச்சியை தந்தது. கோவிலை வலம் வருகையில் தல விருட்சம் பனை மரங்களும் அதன் கீழ் நம்ம சுவாமி லிங்க வடிவில் காட்சி தருகிறார். அடியேன் சுவாமிக்கு அருகே சென்று கொண்டு சென்ற பூக்களில் ஒன்றை சுவாமிக்கு சாற்றி வழிபட்டோம். வழக்கம்போல் இன்றும் இந்த கோவிலிலும் அடியேன் குடும்பத்தை தவிர வேறு யாரும் இல்லை... பிறகு சன்னதியில் உள்ளே நுழைந்ததும் கருவறையின் மேல் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், இத்தலத்தில் சுவாமியை வணங்கியபடி சூரிய பகவான் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் காட்சி தருகிறார்கள். சுவாமியை பஞ்ச புராணம் பாடி வணங்கினோம். உட்பிரகாரத்தை வலம் வரும் போது உள்பிரகாரங்களில் விநாயகர், ஆறுமுகர், சனிபகவான், நவக்கிரகம், சூரியன், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், இடபாரூடர், திருமால், கஜலஷ்மி, நால்வர், பிக்ஷடனீர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் இருந்தது . அனைத்து தெய்வங்களையும் வணங்கினோம். இவற்றுள் *திருநீலகண்ட நாயனார்* தம் மனைவியுடன் கூடி இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும். பிறகு அம்பாளை அபிராமி அந்தாதி பாடி வணங்கினோம். பனங்காட்டூர் போன்ற தலங்களில், பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட சிவாலயங்கள் பனை மரங்களின் அடிப்பாகத்தில் தெய்வம் உறையும் சிறப்புடன் உள்ளன. #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🙏ஏகாதசி🕉️

More like this