வெற்றிகளைத் தரக்கூடிய இரண்டு ஒழுக்கச் செயல்பாடுகள் எவையாக இருக்க முடியும்?...
வாழ்வில் மிகப்பெரும் வெற்றிகளைக் குவித்த தொழிலதிபர்களிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்ட போது பல வித்தியாசமான, வேறுபட்ட பதில்கள் வந்தன...
ஆனால், பெரும்பாலானவர்கள் தங்களிடம் இருப்பதாக ஒத்துக் கொண்டவை இரண்டு நல்லொழுக்கங்கள்...
அவை... ஒன்று, நம்பிக்கை... எதிர்காலம் நமக்கு இன்னும் மிகச்சிறந்த வகையில் அமையப் போகிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்குமானால், அந்த இலக்கை நோக்கி நாம் நம்பிக்கையோடு பயணம் செய்வோம். என்னென்ன முயற்சிகள் செய்தால் அந்த இலக்கை வெகுசீக்கிரம் அடைந்து விடுவோம் என யோசித்து அதை ஊக்கத்துடன் மேற்கொள்வோம். இதைப் பல மனோதத்துவ அறிவியல் ஆய்வுகளும் கூட உறுதி செய்துள்ளன...
அடுத்த விஷயம் ஆற்றல், செயலாற்றும் திறமை!!... இலக்கை நிர்ணயம் செய்த பின் அதனை நோக்கிய நம் இடைவிடாத பயணத்திற்கு, ஓட்டத்திற்கு ஆற்றலும், திறனும் தானே தேவை?...
எனவே, எதிர்காலம் ஒளிமயமாக இருக்குமளவிற்கு இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி நம்பிக்கையுடனும், ஆற்றலுடனும் பயணிப்போம்...
வாழ்த்துகள்... 😊😊😊
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்