🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
939 views
கேடு களைகள், மனித வாழ்வுக்குக் கேடு அவனது ஆசைகள்" மரணத்தின் போது நமது உடைமைகள் என்று கருதிக் கொண்டிருக்கும் எதையுமே நம்முடன் எடுத்துச் செல்ல முடியாது. இதை நன்றாக அறிந்தும் கூட வாழும் சொற்பக் காலத்தில் ''இது எனது, இது எனது" என்று சொல்லி சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்! வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம்­ அது தான் காரணம்." உங்களால் முடியும்...!! வெற்றி பெறுவதற்கு முதல் தகுதி என சாதனையாளர்கள் சொல்வது 'உங்களை நம்புங்கள். நீங்கள் பிறந்தது விபத்து கிடையாது. நீங்கள் முக்கியம் என்பதால் தான் இந்தப் பிரபஞ்சம் உருவாக்கியுள்ளது. நம்மால் முடியும் என்று சொல்லிக் கொண்டே ஒரு காரியத்தில் ஈடுபடும் போது நமது மூளைக்கு, அந்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கிடைப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..... சிக்கல்கள் என்பவை, ... ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.... அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.... அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகி விடும். இது தான் வாழ்க்கை...!!! சிந்தித்து செயலாற்றுங்கள்.... 😊😊😊 #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு