உணவின் உளவியல் 🫡
பயத்தின் ஆற்றலா அல்லது பேரின்பமா? 😇
🗓️ நாம் அனைவரும் சரியாக உண்போம் தினம் (Let’s All Eat Right Day). உணவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது நம் மனநிலையையும், நம் விழிப்புணர்வையும் தீர்மானிக்கும் ஒரு ஆற்றல் என்கிறார் ஓஷோ. 🍲
பாவ்லோவ் செய்த அந்த ஆச்சரியமான ஆய்வை ஓஷோ இங்கே விளக்குகிறார்:
“ரஷ்யாவில் பாவ்லோவ் என்ற ஒரு சிறந்த உளவியலாளர் இருந்தார். அவர் விலங்குகளை வைத்து சில சோதனைகளைச் செய்து ஓர் அற்புதமான முடிவுக்கு வந்தார். அவர் ஒரு பூனைக்கு உணவளித்து, அதன் வயிற்றில் என்ன நடக்கிறது என்பதை எக்ஸ்-ரே கருவி மூலம் கவனித்தார். 🩻
பூனை உணவை உண்டதும், அதன் வயிற்றில் செரிமான நீர் உடனடியாகச் சுரக்க ஆரம்பித்தது. 🐈
அதே சமயம், ஜன்னல் வழியாக ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. பயத்தினால் பூனையின் வயிற்றில் செரிமான நீர் சுரப்பது நின்றது. 🐕🧪
அதன் வயிறு சுருங்கியது. பிறகு நாய் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது, ஆனால் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு அந்த வயிறு அதே நிலையில்தான் இருந்தது.📉
உணவு செரிக்கும் செயல்முறை மீண்டும் தொடங்கவே இல்லை; ஆறு மணி நேரமாக உணவு செரிக்காமல் அப்படியே இருந்தது.” ⏳
— ஒஷோ ✨
ஒரு சாதாரண பயமே பூனையின் செரிமானத்தை நிறுத்தும்போது, வன்முறை கலந்த உணவுகள் நம்மை என்ன செய்யும்? 🤔
வன்முறை உணவை ஓஷோ இவ்வாறு வரையறுக்கிறார்:
“அசைவ உணவை உண்பது மட்டுமல்ல வன்முறை; கோபத்துடன் உணவை உணவதூம் ஒருவித வன்முறை உணவே. இவை இரண்டுமே வன்முறை உணவுகள் தான். 😡
கோபத்திலும், கவலையிலும் உணவை உண்ணும்போது மனிதன் வன்முறையையே உட்கொள்கிறான். இன்னொரு உயிரின் மாமிசத்தை உண்ணும்போது அவன் எப்படி வன்முறையாளனாக இருக்கிறானோ, அதேபோல கோபத்தினால் தன் சொந்த தசைகளே உள்ளுக்குள் எரியும்போது அங்கும் வன்முறை இருக்கிறது. 🔥
அப்படிப்பட்ட நிலையில் அவன் உண்ணும் உணவு அஹிம்சையானதாக இருக்க முடியாது.”
நாயின் குரைப்பிற்கே பூனையின் வயிறு சுருங்கிப் போனது என்றால்; பயத்திலும் வலியிலும் கொல்லப்பட்ட ஒரு உயிரினத்தின் ரசாயனம் நம் உடலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்? 🧪
🌱 தாவர உணவைநாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் அமைதியான ஆற்றலைத் தேர்ந்தெடுக்கிறோம். வன்முறை இல்லாத உணவை (நனிசைவம்) உண்பது, நம் உடலை ஒரு தியான கூடமாக மாற்றும் முதல் படி. 🧘♂️
நம் வாழ்வை ஒரு பிரார்த்தனையாக மாற்றுவோம். விழிப்புணர்வை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம். ✨
OshO
#👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்#