#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம்
*அபிராமி அந்தாதி*
🔱🌷🔱🌷🔱🌷🔱🌷🔱🌷
*பாடல் வரிகள்*82*
*🇩🇦🇹🇪: 17-2-2026*
மன ஒருமைப்பாடு அடைய
அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.
பொருள்:
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே – வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.
அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற – எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.
ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் – அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்
களியாகி – பெருமகிழ்ச்சி பெருகி
அந்தக்கரணங்கள் விம்மி – உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி
கரை புரண்டு – உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு
வெளியாய்விடில் – வெளியேயும் பெருகி நிற்கின்றது.
எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – உனது பேரறிவினை எப்படி மறப்பேன்
(உரை): வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் எழுந்தருளிய தேவி, சகல அண்டங்களும் நின் ஒளியாகப் பரவி நிற்கக் காரணமான, பிரகாசிக்கும் அழகிய நின்றன் திருமேனியைத் தியானிக்குந்தோறும் என் அந்தக்கரணங்கள் ஆனந்த மயமாகிப் பூரித்துத் தத்துவ எல்லைகளைக் கடந்து பரவெளியாகி விடுவதாயின், நீ இயற்றிய இந்த அதிசய உபாயத்தை எவ்வாறு அடியேன் மறப்பேன்?
“வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்றபார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை” (19) என்றார் முன்னும். தியானத்தால் அந்தக் கரணத்தில் இன்பம் உண்டாவதையும் தியானம் வலிபெறப் பெறக் கருவி கரணம் கழன்ற நிலையில் பரவெளியில் லயித்துச் சிவானந்த அனுபவம் பெறுதலையும் கூறினார்.
கமலத் தணங்கு: 1,5,20,58,80. அகிலாண்டமும் நின் ஒளி: ” இறைவி யொளிவெளி எங்குமே” (தக்க. 166); “சகல நின்றிருச் சொரூபமென் றோலிடும் சதுர்மறைப் பொருள்” (மீனாட்சி. நீராடல். 3): “அனைத்துந்தன் மயமெனுஞ் சுருதி” (முத்துக்குமார. செங்கீரை. 2) வெளியாதல் – அதீத நிலையை அடைதல்.
விளக்கம்:
ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக்
கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).
*தொடரும்..*
*ပகி𑂞ᮀவு*
*ဖᩃໍ᪙᭄ᤌη*🌹
╚╩══• •✠•❀ 🦚❀•✠ • •══╩╝
#👪 cute family members 👪 #பொழுது போக்கு