D Muthu Prakash, Kanchipuram 💐
707 views
#அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில் நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள் சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை . விளக்கம் ========= நீங்கள் ஏழுபேரும் இவ்வளவு காலமும் இந்த வனத்தில் தவமாய் இருந்து விட்டீர்கள். நானும் பரதேசியைப் பொல் இவ்வளவு காலமும் அலைந்து திரிந்து விட்டேன், நல்ல மக்களின் துயரத்தைக் கேட்க நாதியில்லை. அகிலம் ======= மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால் இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன் பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள் அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார் அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார் அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான் மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம் தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து தோசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல் நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே . விளக்கம் ========= நாதியற்றவர்கள் போல் துன்பப்படுகின்ற அந்த நல்ல மக்களின் துயரத்தைப்பற்றிக் கேட்பதற்காக நான் பூலோகத்திற்குப் போக வேண்டுமானாலும் எனக்கே இயல்பான இந்த ரூபத்தில் போகக் கூடாது. போனால் கலியர்களின் கபடமான செயல்கள் எம்மை அவர்களுக்குள் புகுந்து விடச் செய்து விடும். அத்துணைக் கொடிய கலிநீசர்களிடம் எப்படி போய் நம் மக்களைக் காப்பாற்றுவதென்றே புரியவில்லை என்று தன் நிலைப்பாட்டை சற்று சஞ்சலத்தோடு சப்தமாதர்களிடம் மகாவிஷ்ணு எடுத்துக் கூறினார். . அதைக் கேட்ட சப்த மாதர்கள் தலையில் அடித்துக்கொண்டு தரையில் விழுந்து அய்யகோ என்று அழுது புலம்பினர். எங்களுடைய ஏழு பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகளைச் சோழ மன்னன் கொன்றுவிட்டான் என்ற செய்து உண்மையோ பொய்யோ தெரியவில்லையே. கனனியர்களான எங்கள் கற்பெல்லாம் நீர் அழித்து, உத்தமமாய் நாங்கள் பெற்ற பிள்ளைகள் ஏழுபேரையும் ஒன்று போல் காத்து ரட்சிக்காமல் அவர்களில் இரண்டு பேரைச் சாகக் கொடுத்துவிட்டீரே. இது எங்கள் முன்வினைப் பயனோ? நாங்கள் செய்த பாவத்தின் சம்பளமோ? . நாங்கள் கற்பிழந்துவிட்டோமே என்ற கவலையை மறப்பதற்காக இப்பிழை நேர்ந்ததோ? இதுவும் எங்கள் தலைவிதி தானோ? . சிவபெருமானே எங்கள் பிள்ளைகளில் இரண்டு பேரைக் கொன்ற கொடுஞ் சோழனுடைய நாடு அழிந்து நாசமாகாதா? அந்த மாபாதகனாகிய சோழனுடைய சொந்த பந்தங்கள் யாவும் நெருப்பால் அழிந்து நீறாக மாட்டார்களா? எங்கள் பிள்ளைகளைத் துன்புறுத்தி அடித்த பகை வைராக்கியம் நிறைந்த கலிநீசர்கள் எல்லாரும் வாழ வழியற்றுச் சாகமாட்டார்களா? எங்கள் பிள்ளைகளைப் பலிகொண்ட சோழ நாடு அழிந்து காடாகி அந்த காட்டில் பகலில் நரி நடமாடாதா? சோழனின் வழிக் குலங்கள் யாவும் மாண்டு மீளா நரகத்தில் மூழ்கமாட்டார்களா? நீசக் குலங்களெல்லாம் கொடூரமான முறையில் அழிந்து மீளாப் புழுக்குழிக்குள் முங்கிப் போகமாட்டார்களா? பெற்ற அன்று முதல் எங்கள் பிள்ளைகளைக் காணாமல் எங்கள் மார்பகங்கள் எப்போதும் பால் சுரந்தவண்ணமாக இருக்கிறதே சிவபெருமானே…… . . அகிலம் ======= பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச் சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக் கதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல் ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல் இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும் ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம் . விளக்கம் ======== உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் அவரவர் விதியை அவர்களின் தலையில் எழுதுகின்ற சிவபெருமானே, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளின் பெருமைகளையோ, அவர்களின் நிறத்தையோ நாங்கள் கொஞ்சங்கூட அறிந்தது இல்லையே. . அந்தப் பிள்ளைகளைப் பெற்ற எங்கள் வயிறு பற்றி எரிகிறதே. எங்கள் கண்மணிகளைக் காணாமல் எங்கள் மனம் குமுறிக் கொந்தளிக்கிறதே. பாதகர்களால் பலிகொள்ளப்பட்ட இரண்டு பிள்ளைகளும் எங்களில் யார் பெற்ற பிள்ளைகளோ தெரியவில்லையே. . கோளுரைத்து எங்கள் பிள்ளைகளின் சாவுக்குக் காரணமாக இருந்த அந்தக் கொடியவன் கொடிய நரகத்தில் விழாமல் இன்னும் இருக்கிறானோ... செத்தானோ தெரியவில்லையே. அந்தப் பாதகன் ஒருவேளை செத்துச் சாம்பலாகப் போயிருந்தாலும் அவனுடைய உயிர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துத் தண்டிப்போம். . . தொடரும்…. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar