D Muthu Prakash, Kanchipuram 💐
763 views • 10 days ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து
சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து
மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார்
குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள்
.
விளக்கம்
---------------
வெண்தாமரைப் பூவிலிருக்கும் கலைவாணியிடம் எல்லா உயிரினத்திடமும் பொருந்தி எல்லாக் கலைகளையும் கொடுத்துத் தருமபூமியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா என்று அருள் புரிந்தார். கலைவாணியும் கைகுவித்து வணங்கி அங்கே தங்கினாள்.
.
.
அகிலம்
--------------
கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும்
சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக
வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து
என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப்
பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று
நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார்
.
விளக்கம்
----------------
கங்கை முதல் உயர்வான இரத்தினங்களிடம் இனி நீங்கள் வெளியே தோன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வாருங்கள் என்று சொல்லி வரமும் கொடுத்தார். என்ன என்ன பாக்கியங்கள் உள்ளனவோ அவற்றை எல்லாம் பெற்றுத் தழைத்துப் பொன்னம்பலமாக எண்ணிக் கூடி இருந்து அன்புடன் வாழ்ந்து வாருங்கள் என்று வரம் கொடுத்தார்.
.
.
அகிலம்
-------------
வைகுண்ட மாமணிக்குத் திருமுடியும் திருமணமும்
-------------------------------------------------------------------------------------------------
வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து
நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு
வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச்
செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே
.
விளக்கம்
---------------
மிகவும் வல்லமையுள்ள தருமபூமிக்கு நிலைத்த வாழ்வும் வரமும் கொடுத்தார்.
நாராயணருடைய மகனும் குருநாதனும் ஆகிய நல்ல வைகுண்ட மாமணிக்கு உயர்வு பெற்ற திருமுடியும் பொடுத்து அருமையான திருமணம் செய்ய வேண்டும் என்று எல்லாரும் நினைத்தனர்.
.
.
அகிலம்
--------------
வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு
மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு
நாதக் குருவான நாரா யணமணிக்கு
சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை
கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து
மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து
.
விளக்கம்
----------------
இலட்சுமிதேவியையும் தெய்வக் கன்னிகளையும் இன்னும் பல பெண்டிர்களையும் நல்ல முறையில் கல்யாணம் முடித்து வைத்தனர். பிறகு பொன்னம்பலத்தை ஆட்சி புரிந்த சிவனுக்கும் பெரிய பொருளான திருமாலுக்கும் தன்னில் பெரியவனான பிரம்மனுக்கும், இன்னும் நாதன்மாருக்கும் நல்ல மாலை அணிவித்துத் திருமணம் முடித்தனர்.
.
.
அகிலம்
--------------
பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும்
தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும்
நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து
மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும்
ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும்
இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச்
.
விளக்கம்
----------------
பிறகு மாதவர்களான தேவாதிகளுக்கும், சூரியன் தானான அரிகேசவருக்கும் இப்படியே எல்லாருக்கும் திருமணம் முடித்து வாழ்த்து மங்களங்கள் பாடினர். செம்மை வாய்ந்த மனைவியர் எல்லாரும் தத்தமது கணவருக்கு மாலை அணிவித்து ஒன்றாகச் சேர்ந்து ஒற்றமையுடன் வாழ்ந்தனர்.
இவ்வாறு திருமணம் புரிந்து மங்களக் காட்சி கொண்டாடினர்ஃ
.
.
அகிலம்
-------------
செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே
சரசு பதிமாது தண்டரள சுந்தரியும்
விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும்
வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும்
ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும்
வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே
தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும்
.
விளக்கம்
----------------
சரசுவதி தேவியும் குளுமையான முத்துக்களை அணிந்த சுந்தரியும், அழகும் நெருங்கிய கரிய கூந்தலுமுடைய வீர மகாஇலட்சுமியும் அழகு வாய்ந்த பகவதியும் நிலைத்து வாழுகின்ற பார்வதியும், உயர்வு பொருந்திய புகழ் பெற்ற இளமையான கூந்தலையுடைய தெய்வக்கன்னிமார் ஏழு பேரும், சக்தியும், வள்ளியும், தெய்வானை நாயகியும், அழகிய வாயையுடைய ஈஸ்வரியாளும் மிகுந்த சக்தி பொருந்தி பராபரை சக்தியும், அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு.
12 likes
1 comment • 13 shares