தோசை பிரியர்கள்....
இட்லியை விட தோசைக்கு ஆசைப்படுபவர்களும் அடிமையானவர்களும்தான் இங்கு அதிகம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தோசை விரும்பிகளாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் தோசையின் ருசி அதன் வாசனை அதன் வடிவம் ஆகும். தோசை இந்த அளவுக்கு பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவாக இருப்பதற்கு காரணம் நம்ம ஊர்களில் பெருகிவிட்ட உணவகங்கள் தான். பல வகைகளில் தோசைகளை செய்து பொதுமக்களை வீழ்த்தி விட்டார்கள்.
தோசைக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறது. தோசைக்கும் கண்ணுக்கும் கண்ணாடி போடுவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. சிறுவயதில் கண்ணாடி அணிபவர்களில் பெரும்பாலானவர்கள் தோசை பிரியர்களாக இருக்கிறார்கள். இரவில் தோசை சாப்பிடுவது செரிமான சிக்கலை கொடுக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கிறது. இன்னும் பெருவாரியான உடல்நல சிக்கலுக்கு இந்த தோசை காரணமாக இருக்கிறது. தோல் வியாதி, சிறுநீரக கல்,நீரிழிவு என்று சொல்லக்கூடிய சர்க்கரை வியாதி, பித்தப்பையில் வரும் பிரச்சனைகள், மலச்சிக்கல், புரோஸ்டேட் வீக்கம்,பாலிசிஸ்டிக் ஓவரி, தைராய்டு பிரச்சனை, முடி கொட்டுதல், முடி நரைத்தல் உடல் இளைத்து ஒல்லியாக இருத்தல், காலில் வரும் பிரச்சினைகள்,தலைவலி சம்பந்தமான பிரச்சனைகள் என பல வியாதிகளை சொல்லலாம். குடல் புற்று நோய்க்கும் தோசை போன்ற உணவுகள் காரணமாக இருக்கலாம்.
தோசையிலிருந்து கார்பன் டை ஆக்சைடு தான் வருமே தவிர ஆக்சிஜன் வராது. தோசை சாப்பிட்டவர்களுக்கு தாகம், சோர்வு,மயக்கம், அமிலத்தன்மை, நெஞ்சு கரிப்பு, பசிமந்தம், புளித்த ஏப்பம் என எல்லாமே விரைவில் வந்து விடுகிறது. அடிக்கடி தோசை சாப்பிடும் இளைஞர்கள் பலர் நோயாளிகளாக இருக்கிறார்கள். உடல் நலம் தரும் உணவுகள் எங்குமே விற்கப்படுவதில்லை. இதுதான் உலகமெங்கும் உள்ள நிலை. என்றாவது ஒருநாள் தோசை சாப்பிடுவதில் தவறில்லை. அடிக்கடி தோசை சாப்பிடுவது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நல்ல உணவுகளை நாமாகதான் தேடிப் பெற வேண்டியதிருக்கிறது.
நமது வீட்டில் செய்யப்படும் உணவுகள் தான் நல்ல தரமான உணவாக இருக்க முடியும்.
சில நல்ல உணவகங்களும் இருக்கலாம். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வீட்டில் சமையல் செய்வதற்கு சமையல் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்ல வேண்டும். அந்த காலத்து பாட்டிமார்கள் அதை ஒரு வேலையாக செய்யவில்லை விருப்பமாக செய்தார்கள். இன்றைக்கு இருப்பவர்கள் அதை ஒரு வேலையாக பார்ப்பதால் அதை தவிர்க்கவே நினைக்கிறார்கள்.தன்னுடைய உடல் நலனிலும் தங்களது குழந்தைகளின் உடல் நலனிலும் அக்கறை இருப்பவர்கள் தரமான உணவுகளை தேடி தேடி பெறுகிறார்கள்.
சுபம்.
#food
#homemade
#happylife
#magalir mattum, velai matrum thagavalgalum, unavu, udalnalam, #udalnalam #udalnalam #udalnalam #udalnalam👏👏