ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.2K views
4 months ago
தெவிட்டாத விட்டலா - 3 அபூர்வ விட்டல தரிசனம் 🌼🌼🌼🌼🌼🌼🌼 இன்று ஒரு சுவாரசியமான கதை காத்திருக்கிறது. பண்டரி புரத்தில் ஒரு பிராமணர். அவர் ஒரு தீவிர விட்டல பக்தர். குடும்பம் பெரியது என்பதால் அவருக்கு பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப்பட்டது. ஏழை பிராமணர்களுக்கு எப்போவுமே யார் கிட்ட போனால் நிறைய தக்ஷிணை கிடைக்கும் என்ற ஆவல், தீராத எதிர்பார்ப்பு உண்டே? ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு. குடும்பத்திற்கு கையில் ஏதோ கொஞ்சம் திரவியமும் கிடைத்தது . வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜாவின் பெயர் ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான் மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப்பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி " யார் நீங்கள்?" என்றான் "நான் பண்டரிபுரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன்.என்று ராஜாவிடம் சொல்லு" உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். .ராஜா அவரை உபசரித்தான். ' நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று தரிசனம் செய்து அங்கு அம்பாளுக்கு தானே பூஜை செய்து விட்டு புசிப்பது வழக்கம். தாங்களும் தரிசனத்துக்கு வாருங்கள்" '' ராஜா உபசரிப்போடு அவரை அழைத்து சென்றான். செல்லும் வழியில் ஒரு பெரிய நந்தவனம். "இதோ இந்த நந்தவனத்தில் தான் அம்பிகைக்கு தேவையான பூஜைக்குகந்த புஷ்பங்கள் தரும் செடி கொடி மரம் எல்லாம் வளர்க்கிறேன் .இது போன்ற செழிப்பான நந்தவனம் எங்குமே இருக்காதே! பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா?'' "ஆமாம் ராஜா" "இதோ கோவில் தெரிகிறது பாருங்கள்'. தக தக பள பள வென்று. முழுதும் வெள்ளியாலேயே சுவர்கள் கட்டப்பட்ட பிரம்மாண்டமாக அந்த அம்பிகை கோவில் உள்ளே நிறைய பிராமணர்கள் வேதகோஷம். பூஜைக்கு எல்லாம் ரெடியாக இருந்தது. அம்பாள் உயரமாக நின்று நிறைய ஆபரணங்கள் அலங்கார பட்டு வஸ்திரங்களோடு ஜக ஜோதியாக தரிசனம் தந்தாள் ராஜா பூஜைக்கு அமர்ந்தார் விஸ்தாரமாக பூஜை நடந்து நெய்வேத்யம் முடிந்து அனைவருக்கும் கை நிறைய பிரசாத விநியோகமும் ஆனது. ராஜாவும் பிராமணரும் சாப்பிட்டு முடிந்த பிறகு ராஜா பிராமணரை கேட்டான். " இது போல உசத்தியான கோவில், அம்பாள், அலங்கார பூஜைகள் எல்லாம் எங்காவது பார்த்ததுண்டா? நீங்கள் வசிக்கும் பண்டரிபுரத்தில் இப்படி எல்லாம் சிறப்பாக விட்டலனுக்கு பூஜை உண்டா?" "எதோ பாவம் சில ஏழை பிராமணர்கள் சேர்ந்து பூஜை பண்ணி அங்கே விட்டல நாம சங்கீர்த்தனங்கள் செய்து வருவதால் இந்த அளவுக்கு செல்வ செழிப்பாக அங்கே பூஜைகள் எப்படி நடக்க முடியும் இல்லையா?" பிராமணருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. விட்டல பக்தரல்லவா? . வராதா பின்னே ? "என்ன? விட்டலனும் பண்டரிபுர ஆலயமும் அவ்வளவு மட்டமாக போய்விட்டதா? '' : "ராஜா, நீங்கள் பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசனம் பண்ணினது உண்டா? "இன்னும் இல்லை" "அதால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள். விட்டலன் ஆலயம் பண்டரிபுரத்தில் தங்கத்தாலேயே கட்டப்பட்டது. நீங்கள் கட்டினது போல் வெறும் வெள்ளியால் அல்ல. இது நீங்கள் கட்டிய ஆலயம். அது தேவ சிற்பி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு நீங்கள் வழிபட்ட அம்பிகை அங்கு தினமும் வந்து விட்டலனை தரிசனம் செய்யுமுன் விட்டலன் சந்நிதியை தானே பெருக்கி சுந்தம் செய்கிறவள். இங்கு சில காசு ஆசை பிடித்த பிராமணர்கள் மட்டும் தானே வைத்திருக்கிறீர்கள் ? அது இந்திராதி முப்பத்தி முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி நிற்கும் புனித ஸ்தலம். சந்திர பாகா என்று ஒரு நதி ஓடுகிறதே கேள்விபட்டிருக்கிறீர்களா? அதில் ஸ்நானம் செய்தால் பல ஜென்மங்களின் பாவம் ஒழியும். இங்கு ஒரு சிறு தோட்டம் போல ஒரு நந்தவனம் காட்டினீர்கள் . அங்கே விட்டலன் ஆலயம் செல்லும் வழியில் காட்டில் நினைத்ததை எல்லாம் தரும் கல்ப தருக்களும் மனோபீஷ்ட செடி கொடி மரங்கள் நிறைய உண்டு. அங்கு ஒவ்வொரு பசுவுமே காமதேனு. சந்திர பாகாவில் கிடைக்கும் ஒவ்வொரு சாளிக்ராமமுமே நினைத்ததை தரும் விசேஷமான மனோபீஷ்ட சித்தி மந்திர கல். சமுத்ரத்தை பார்க்காதவனுக்கு அவன் ஊர் குட்டை பெரிய நீர் நிலையாகத்தானே தெரியும்" ஏதோ வெறி வந்தவன் மாதிரி பிராமணர் இவ்வாறு பொரிந்து தள்ளினதை கேட்ட ராஜாவுக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் வந்தது. இந்த பிராமணனுக்கு கடுந்தண்டனை கொடுக்க முடிவெடுத்தான். "நீ சொல்வது உண்மையா" "நான் சொன்னது கொஞ்சம் தான்" ராஜா உடனே மந்திரியை அழைத்தான் பண்டரிபுரம் செல்ல ஏற்பாடுகள் செய்ய சொன்னான். ஒரு சிறிய படையே நிறைந்து விட்டது. ராஜாவின் பின்னால் பிராமணன் அழைத்து செல்லப் பட்டான் ஹே விட்டலா, நான் உன் மீது உள்ள பக்தியால் உன் ஆலயத்தை குறைத்து சொன்னதை தாங்கமுடியாமல் ஏதேதோ உளறிவிட்டேனே. ராஜா கிளம்பிவிட்டான். நான் சொன்னது போல் பண்டரிபுரம் இல்லையென்று தெரிந்தவுடன் என் கழுத்தை வெட்ட போகிறான். வெட்டட்டும்!, பரவாயில்லை உன்னை குறை கூறி அதை கேட்டுக்கொண்டிருப்பதை காட்டிலும் என் தலை போவதே சிறந்தது. இந்த ராஜாவுக்கு நீயே வழிகாட்டு" வழியெல்லாம் விட்டலனை தியானம் பண்ணிக்கொண்டே ராஜாவின் கூட்டத்தோடு நடந்தார் பிராமணர். ராஜாவின் சேனை பண்டரிபுரம் வந்து சேர்ந்தது. யானை மீது அமர்ந்திருந்ததால் தூரத்திலேயே விட்டலன் ஆலயம் கண்ணில் பட்டது. ராஜா திகைத்தான். "அடாடா!!, என்ன திவ்ய தரிசனம் இது? பிராமணன் சொன்னது போலவே இருக்கே!. தங்கத்தால் கட்டப்பட்ட கோவில் கோபுரம் கண்ணை குருடாக்குகிறதே!. சுற்றிலும் அடர்ந்த பசுமையான காடு நிறைய பூத்து குலுங்கும் வித விதமான புஷ்பங்கள், பழங்கள், வெள்ளி தகடாக ஜொலிக்கும் சந்திரபாகா நதியில் எண்ணற்ற வைஷ்ணவர்கள் நீரில் இருந்து நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்கிறார்கள். நதியில் தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் எல்லாம் ஸ்நானம் செய்வதையும் ராஜா பார்த்து அதிசயித்தான்.". ராஜா யானைமீதிருந்து கீழே இறங்கினான். நடந்து வந்த பிராமணரிடம் ஓடி வந்தான். "சுவாமி நீங்கள் சொன்னது அத்தனையும் அப்பட்ட உண்மை. உங்களால் தானே எனக்கு பண்டரிபுர யாத்ரை இன்று கிடைத்தது" பண்டரிபுரம் ஆலயம் செல்லுமுன் சந்திரபாகா நதியில் பிராமணருடன் ஸ்நானம் செய்தான் ராஜா. உள்ளே விட்டலன் சிரித்துக்கொண்டு காட்சி தந்தான். " என்ன அழகு என்ன திவ்ய ஆபரணங்கள்?" என்ன அலங்காரம்? . விட்டலனை சுற்றி அஷ்ட மகா சித்தி தேவதைகளும் ஒன்றாக கூடி பூஜை செய்கிறார்களே!!. அடடே அதோ என் இஷ்ட தேவதை அம்பிகையும் அவர்களோடு நின்று விட்டலனுக்கு பூஜை பணிவிடை செய்கிறாளே!" என்ன பாக்கியம் எனக்கு!. இதோ நாரதர் தும்புரு எல்லாம் நின்று கானம் பொழிகிறார்களே!" ராஜா திணறினான் ஆனந்தத்தில். பக்தனல்லவா? . விட்டலனை நமஸ்கரித்தான். பிராமணரை இறுக கட்டிக்கொண்டான் அவர் காலில் விழுந்தான். "விட்டலா!, என்னே உன் கருணை? . இந்த ஏழை பிராமணனின் வார்த்தை பொய்க்க கூடாது என்று என்னமாக நான் கற்பனை பண்ணியபடியே தரிசனம் கொடுத்தாய்? . நான் பாக்யவான்" என்று நெஞ்சுக்குள்ளேயே கதறினார் பிராமணர். அவர் காலடியிலேயே ராஜா உறுதி மொழி எடுத்தான். "இனி நீங்களே என் சத்குரு. இந்த பாபிக்கு கண் திறந்தீர்களே. நீங்கள் சொன்னதைவிட பல மடங்கு சொல்லமுடியாத அற்புதங்களை நான் இன்று கண்டு மகிழ்ந்தேன். இந்த பண்டரிபுரத்தை போன்று ஒரு தேவலோக ஸ்தலத்தை வேறெங்கு எவர் காண முடியும்?" என்றான் ராஜா. கடைசியாக ராஜா ஊருக்கு திரும்பு முன் விட்டலனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான் அது என்ன என்பதை அடுத்த கதையில் பார்ப்போமா? இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #ஸ்ரீ பாண்டுரங்கன் தரிசனம் #பாண்டுரங்கன் 🙏🙏🙏🌹