꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
821 views
5 months ago
#🌎பொது அறிவு டிசம்பர் 04, 1829. உடன்கட்டை ஏறுதலைச் சட்டவிரோதமாக்கும் 'வங்காள சதி (உடன்கட்டை ஏறுதல்) தடுப்பு விதி 1829' என்பதை, வங்காள தலைமை ஆளுனராக இருந்த வில்லியம் பெண்ட்டிங்க் பிரபு கொண்டு வந்த நாள். இந்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. லண்டனில் இயங்கிய உயர் ஆலோசனைக் குழுவான ப்ரிவி கவுன்சில், 1832ல் இந்தத் தடைச்சட்டத்தை உறுதி செய்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்தத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும், இந்தியர்கள் ஆண்ட பகுதிகளில் தொடர்ந்தது. பெண்கள் சதியில் இருந்து தப்பி ஓடிய சம்பவமும், பிடிபட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதும் குறிப்புகளில் பதிவாகியுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னரும் 1987ல் ராஜஸ்தானின் தேவ்ராலா கிராமத்தில் ரூப் கன்வர் என்ற 18 வயதுப் பெண் சதியில் கொல்லப்பட்டது உலகம் எங்கும் எதிரொலித்த பின்னர், ராஜஸ்தான் அரசு, 1987ல் உடன்கட்டைத் தடைச் சட்டத்தை கொண்டுவந்தது. 1988ல் இச்சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. 🫂🫂🫂🫂kalaiselvan 🥰🥰🥰