ஸ்ரீ மதே சடகோபாய நமக
ஸ்ரீமதே ராமானுஜாய நமக
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வர வரமுநயே நமக
ஆச்சாரியன் ,பாகவதாள், தாயார் ,வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கிருபையால் ஸ்ரீ தெள்ளிய சிங்கர் ஸ்ரீ வைத்திய வீரராகவன்,ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திருப்பாணாழ்வார் கைங்கரியங்கள் செவ்வனே நடைபெறுகின்றன தற்போது ஐப்பசி திருவோணம் பிள்ளைகளோகாசாரியார் திருநட்சத்திரம் உள்ளதால் அன்றைய நாள் ஸ்ரீரங்கத்தில் 30/10/25 அன்று பால போகத்துடன் தொடங்கும் கைங்கர்யம் மதியம் அலங்கார தளிகையோடு முடிவடையும்.
காலை
7:00மணி-+திருப்பாவை கோஷ்டி
11:00மணி- கோஷ்டி தொடக்கம்
1::00மணி+ கோயில் திருவாய் மொழி, ராமானுஜ நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை சாற்றுமுறை,முதலாழ்வார்கள் திருநட்சத்திர சாற்றுமுறையுடன்.
-மகிழ்மாறன் பொன்னடி குழாம் -7695998995
29,பஜனை கோயில் தெரு,
கீழ அடையவளைந்தான்
கோரதம் பின்புறம்
ஸ்ரீரங்கம்
பிள்ளைலோகாச்சாரியார் தனியன்:
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:
தமிழாக்கம்:
லோக ஆசார்யராகிய குருவுக்கு, கிருஷ்ண பாதத்தின் மகனாகிய அவருக்கு, உலக வாழ்க்கையில் துக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜீவன்களுக்கு உயிர் வழங்கும் மருந்தாக விளங்கும் அவருக்கு நமஸ்காரம்.
திருவாய்மொழிக்கு ஈடுயருளிய வடக்குத் திருவீதிப்பிள்ளை சிறிது காலம் தர்ஸன ப்ரவர்த்தகாயிருந்துள்ளார். இவருக்கு நம்பிள்ளையின் பரிபூர்ண ஆசீர்வாதத்தினால், ஒரு ஞானக் குழந்தைப் பிறந்தது. (இந்த குழந்தை கர்ப்பவாஸத்தில் 12 மாதங்களிருந்தது என்பர்) அதற்கு தம் ஆச்சார்யரின் பெயரான ‘லோகாசாரியார்” என்று திருநாமமிடுகின்றார். (இவர் பிள்ளைலோகசாரியார் என்றழைக்கப்படுகின்றார்). நம்பிள்ளை ‘நாம் பெருமாள் பெயரிட உத்தேசித்திருந்தேன். நீர் நம்மைக் கேளாமல் என் பெயரினை இடலாமா? இப்படிச் செய்யலாமா?‘ என்று கேட்கின்றார். அதற்கு வடக்குத்திருவீதிபிள்ளை ‘தாங்கள் இன்னொரு குழந்தைக்கு ஆசீர்வதியுங்கள். அதற்கு தாங்கள் விருப்பம் போல் திருநாமமிடுங்கள்’ என்று பணிவோடு பிரார்த்திக்கின்றார்.
நம்பிள்ளை மீண்டும் ஆசீர்வதிக்கின்றார்.
இந்த லோகாசாரியாருக்கு ஒரு திருத்தம்பிப் பிறக்கின்றார். நம்பிள்ளை செய்தியறிந்து சந்துஷ்டராய், இப்போது பிறந்த பிள்ளைக்கு ‘அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்’ என்று நம்பெருமாளின் திருநாமமிட்டு வாழ்த்துகின்றார்.
நம்பிள்ளையின் பூர்ண ஆசீர்வாதத்தினால் பிறந்த குழந்தைகளாயிற்றே! ஞானத்திற்கா பஞ்சம்! அபாரஞானிகளாய் வளர்கின்றனர் இருவரும்!.
இந்த வடக்குத்திருவீதிபிள்ளையிடத்து ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ”ஆத்ம ஸ்வரூபமிக்கும் படியென்? (ஆத்மசொரூபத்தினையறிவது எப்படி?) என்கிறார்.
அதற்கு அவர் ‘அஹங்காரமாகிற ஆர்ப்பைத்(பற்றினை)
துடைத்தால்(ஒழித்தால்) ஆத்மாவிற்கு அழியாதபேர் ‘அடியேன்” என்றிறே!” என்றருளுகின்றார்.
“அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார் தம்மடியாரடியோங்களே(திருவாய்மொழி 3-7-10) என்ற ஆழ்வாரின் பாசுரத்திற்கொப்பயிருக்க வேண்டும்“ என்றருளுகின்றார்.
இந்த பாகவதசேஷத்தினால் பகவத்சேஷம் உண்டாகி ஆத்ம சொரூபத்தினையடையலாம் என்கிறார்.
இவர் , ”எல்லா வேதங்களையும், எல்லா சாஸ்திரங்களையும், ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், பூர்வாச்சாரியார்களின் வாதங்களையும் ஆராய்ந்து பார்த்தளவில் ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஆச்சார்ய அபிமானமொழிய மோக்ஷ உபாயம் வேறேதுமில்லை. (ஆச்சார்ய அபிமானமே மோக்ஷத்திற்கான வழி). அதுபோன்று மோக்ஷ விரோதி பாகவத அபசாரமே ஒழிய வேறில்லை’ என்று அருளுகின்றார்.
தமது அபாரஞானத்தினால் ஸர்வரையும் உஜ்ஜீவிப்பித்து கொண்டிருக்கும் இவர் தம் குமாரர்களாகிய பிள்ளை லோகாச்சாரியரையும், அழகியமணவாள நாயனாரையும் தர்சநபிரவர்த்தகராகும்படி நன்கு தயார்செய்து தமது ஆச்சார்யரான நம்பிள்ளைத் திருவடிகளைத் தியானித்தபடியே திருநாட்டுக்கெழுந்தருளினார்.
பிள்ளைலோகாசாரியரும் ப்ரஹ்மமேதத்தினால் சரமகைங்கர்யம் செய்து பள்ளிப்படுத்தி, அவப்ருதம் கொண்டாடி, வெகு நிறைவாக திருவத்யயனமும் கொண்டாடினார்.
ஸ்ரீஇராமனும் கோசலையின் வயிற்றில் 12 மாதம் கர்ப்பவாஸமிருந்தார்.
ஸ்வாமி பிள்ளைலோகாச்சாரியாரும் தம் தாயார் ஸ்ரீரங்கநாச்சியாரின் வயிற்றில் 12 மாதம் கர்ப்பவாஸமிருந்தார்.
ஸ்ரீஇராமனுக்கு இலக்குவன் போல் பிள்ளைலோகாச்சாரியரிடத்து அவரது திருத்தம்பி அழகியமணவாளப்பெருமாள் நாயானாரும்
தம்பியுடன் தாசரதியானானுஞ் சங்கவண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் – பொங்குபுனல்
ஓங்குமுடும்பை உலகாரியனும் அறந்
தாங்கு மணவாளனுமே தான்
என்னும்படி இணைபிரியாது புகழோடுயிருந்தனர்.
பிள்ளைலோகாச்சாரியார், தனிப்ரணவம், தனித்வயம், தனிசரமம், பரந்தபடி, ச்ரிய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுக்ஷூப்படி, ஸம்ஸாரஸாம்ராஜ்யம், ஸாரஸங்க்ரஹம், தத்வத்ரயம், தத்வசேகரம், ப்ரபந்தபரித்ராணம், ப்ரமேயசேகரம், அர்ச்சிராதி, அர்த்தபஞ்சகம், நவவிதஸம்பந்தம், நவரத்நமாலை, ஸ்ரீவசனபூஷணம் முதலான அநேக க்ரந்தங்களையருளிச்
செய்துள்ளார்.
இவரது திருவடிகளில் கூரகுலோத்துமதாஸர் நாயனும், மணப்பாக்கத்து நம்பி, கொல்லிகாவலதாஸன், அழகிய மணவாளப்பெருமாள் பிள்ளை, கோட்டூர்வண்ணர், திருமலையாழ்வார், விளாஞ்சோலைப்பிள்ளை மற்றும் திருமலையாழ்வாரின் திருத்தாயார் முதலானோர் உள்பட ஏராளமானோர் ஆஸ்ரயித்திருந்தனர்.
பிள்ளைலோகாச்சாரியார் ரஹஸ்யார்த்தங்களை தம்முடைய சீடர்களுக்கு, அந்தகாலத்தில் மிக மிக ஏகாந்தமாயிருந்துள்ள ஸ்ரீகாட்டழகியசிங்கர் கோவிலில் தம் சீடர்களுக்கு உபதேசித்துள்ளார்.
(இந்த காட்டழகியசிங்கர் கோவில் ஸ்ரீரங்கம் ரயில்வேநிலையத்தின் அருகேயுள்ளது. ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் பிரதிஷ்டை ஆவதற்கு முன்னமேயே தோன்றிய கோவிலிது. அக்காலத்தில் ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன் பல முனிவர்கள் தபஸ், யாகம் முதலானவற்றைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது வனாந்திரமாகயிருந்தபடியால் யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தினைக் கட்டுபடுத்த இந்த நரஸிம்ஹரை பிரதிஷ்டைச் செய்ததாகச் சொல்லுவர். வரப்ரஸாதி இவர். இப்போது சுமார் 10 வருடங்களாக கூட்டம் பெருகியுள்ளது. முன்பெல்லாம் ஏகாந்தமாக மிக மிக அமைதியாயிருக்கும். அடியேன் நிறைய நாகங்களை இங்கே கண்ணுற்று இருக்கின்றேன். யானைக்கூட்டத்தினை அடக்கவந்து நாகக்கூட்டத்தினைப் பெருக்கச்செய்தாரோ என்று எண்ணுவேன்! பிள்ளைலோகாச்சாரியாரின் காலத்தில் எப்படியிருந்திருக்கும்?)
மணற்பாக்கம் என்ற ஊரில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் (மணற்பாக்கம்நம்பி..ok?) பேரருளானிடத்தில் அபாரபக்தி. இந்த நம்பியின் கனவில் அருளாளன் தோன்றி விசேஷ கடாக்ஷம் செய்கிறான்.
மேலும் ”நீர் போய் இரண்டாற்றுக்கு நடுவேயிரும்! இன்னமுமக்கு சிலமுக்கிய ரஹஸ்யார்த்தங்களை விசேஷமாக நாமங்கேச் சொல்லுகிறோம்” என்று சாதித்தருளினார்.
அவர் ஸ்ரீரங்கத்திற்கு வந்து இந்த கோவிலையும் அறிந்து ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹரை தரிசிக்கின்றார். வெளியே பிரதட்சிணமாகவருகையில் அங்கு பிள்ளைலோகாசாரியார் ரஹஸ்யார்த்தங்களை அருளிச்செய்து கொண்டிருக்கின்றார். இவருக்கு இவையாவும் தமக்கு பேரருளாளன் அருளிச்செய்ததிற்கு இணையாகயிருக்க திகைக்கின்றார். போரவித்தராய் இவர்தம் திருவடிகளில் வீழ்ந்து ‘அவரோ நீர்?(அந்த பேரருளாளன் நீர்தானே?)
என்று வினவுகின்றார். ‘ஆவது எது?” என்று புரியாமல் பிள்ளைலோகாசாரியார் கேட்கின்றார். இவர் தமக்கு இவ்வர்த்ததினை ஒரு வார்த்தைக்கூட தப்பாமல் பேரருளாளன் அருளியதையும் மேற்கொண்டு இங்கு அருளுவதாக கூறியதையும் சொல்லி மெய்சிலிர்க்க விவரிக்கின்றார் நம்பி! வியக்கின்றார் பிள்ளை!.
அவரையும் அபிமாநித்து அவருக்கும் ரஹஸ்யார்த்தங்களை அருளுகின்றார்.
இப்போது அரங்கன் நம்பியின் கனவில் தோன்றுகின்றான். ‘பிள்ளையருளிச் செய்யும் இவ்வர்த்தங்கள் மறந்து போகாதபடி இவற்றையெல்லாம் ஒரு ப்ரபந்தஸ்தமாக்கச் (ப்ரபந்தம் போன்று ஏடுபடுத்த) சொன்னோமென்று நீர் பிள்ளையிடத்துச் சொல்” என்று கட்டளையிடுகின்றார்.
நம்பி பிள்ளையிடத்து இதனை விண்ணப்பிக்க, ‘ஆனால் அப்படியேச் செய்வோம்” என்று பிள்ளை மிகவும் உகந்தருளியதுதான் ஸ்ரீவசனபூஷணம்.
அரங்கனின் ஆணையினால் அருளப்பட்டது.
இந்த ஸ்ரீவசனபூஷண ஸ்தாபனார்த்தமாக, இவரின் திருத்தம்பி ‘ஆச்சார்யஹ்ருதயம்” என்னும் க்ரந்தத்தினை அருளிச்செய்துள்ளார். இதனைத் தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலைச் சொன்னாற்போன்று அரங்கனிடத்து விண்ணப்பம் செய்கின்றார். பெருமாள் ச்ரோதவாய் (கேட்பவராய்) அழகிய மணவாளப்பெருமாள் வாக்தவாக (சொல்பவராய்) ஆகின்றார்கள்.
அரங்கன் மிகவே உகந்து தம் ஸர்வபரிஜனங்கள், பரிச்சதங்களோடே ப்ரம்ஹரதம் பிரஸாதித்து இவரை கௌரவித்து இவர்தம் திருமாளிகைக்கு அனுப்புகின்றார். இதனைக்கண்ட பிள்ளைலோகாச்சாரியார் ‘வளர்த்ததினால் பயன் பெற்றேன்” என்று அதிசந்தோஷத்துடன் ஆலிங்கனம் செய்துக் கொள்கின்றார் தம் திருத்தம்பியை.
பிள்ளைலோகாச்சாரியாரும் அவர்தம் திருத்தம்பி அழகிய மணவாள பெருமாள் நாயனாரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே, பிரஹ்மச்சாரிகளாய், அரங்கனே கதியென்று அன்போடு இருந்தளவில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது 100வது வயதில்
(பிறந்தது கி.பி. 1208 விபவ மார்கழி அவிட்டம் – திருநாடு அலங்கரித்தது கி.பி.1308ஆம் வருடம்) திருநாடு அலங்கரித்தார்.
அவரை விட மூன்று வயது மூத்தவரான, ஆனால் பெற்றோரைப் போன்று அன்பு செலுத்தி பேணிக் காத்தவரான பிள்ளைலோகாச்சாரியார் அவர்தம் திருமுடியை தம் மடியில் வைத்துக்கொண்டு தம்பியின் பிரிவினைத் தாங்கமுடியாமல் மிகவும் சோகார்த்தராய் கண்ணீர் விட்டு கதறுகின்றார்.
மாமுடும்மை மன்னு மணவாள வண்ணலொடு
சேமமுடன் வைகுந்தஞ்சென்றக்கால் – மாமென்று
தொட்டுரைத்த சொல்லுயந்துயந்தன்னினாழ் பொருளும்
எட்டேழுத்து மிங்குரைப்பாரார்.
என்கிறபடியே பலவாறு புலம்பி கலங்குகின்றார். தமது 103வது வயதில் தம் திருத்தம்பிக்கு சரமகைங்கர்யஞ் செய்து திருவத்யயனமும் நடத்தியருளுகின்றார்.
பிள்ளை லோகாசாரியார் மற்றும் அவர் கோஷ்டிக்கு மங்களாசாசனம்
வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம் வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள்
1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி
2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல்
- முமூஷிப்படி
3,சுயஅபிமானம் அறவே கூடாது
-முமூஷிப்படி
4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம்
5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர்
6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்
7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்),
திதி தர்பணாதிகள்
அகங்கார, மமகாரம்
தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல்.
-முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்)
8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களைவிட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி
9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர்
10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை
11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள்
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே
--
#கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA