நடந்து வரும் போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலால மிதிச்சுடுறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடுறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே. சாமி, வேண்டாம்னு வெறட்டவா செய்றா? எல்லாம் மனசு தாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும்.
அக்கினி பிரவேசம் என்கிற கதையில் வரும் வரிகள் இவை...எனக்கு ஜெயகாந்தன் என்றாலே நினைவில் வரும் வரி இது தான்..இவரின் நாவல்களுக்குள் இன்னும் செல்லவில்லை.விகடன் வெளியிட்டு இருந்த முத்திரைக் கதைகள் தொகுப்பை மட்டும் வாசித்து இருக்கிறேன்...சில கதைகளில் முரண்பாடுகள் இருந்தாலும் அத்தனையும் கனமான விஷயங்களை பேசக்கூடியதாக இருந்தது .என்னுடைய வாசிப்பு அனுபவத்தை வைத்துச் சொன்னால் கதைகளுக்குள் குறிப்பாக பெண்களை நிறைய உரையாட வைத்து இருக்கிறார்.பெண் சுதந்திரம் குறித்து நிறைய கருத்துக்களை பெண்கள் வழியாகவே பேசி இருக்கிறார்.
சமூக சிக்கல்களை மட்டுமே தொடர்ந்து தன்னுடைய கதைகளில் அதிகம் பிராதனப்படுத்தி எழுதி இருக்கிற ஜெ கா வின் எழுத்துக்கள் பெரிதும் வாசிப்பதற்கு எளிமையான மொழி நடை கொண்டவை ....
இன்றைய நாளில் ஜெ.கா வை நினைவு கூறுவோம் ! 🌹🌹🌹
#உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#