#🙏கோவில் #ஆன்மிகம் #👏Inspirational videos #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 3, 2026
*திருச்சிற்றம்பலம்*
*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய சேத்திரத் திருவெண்பா பதினோராம் திருமுறை பாடல்.*
*பாடல்* :
*தொட்டுத் தடவித்*
*துடிப்பொன்றுங் காணாது*
*பெட்டப் பிணமென்று*
*பேரிட்டுக் - கட்டி*
*எடுங்களத்தா என்னாமுன்*
*ஏழைமட நெஞ்சே*
*நெடுங்களத்தான் பாதம் நினை.* - 11.006.07
*பொருள்* :
*மனிதன் உயிர்நீத்ததும், உறவினர்கள் அவன் உடலைத் தொட்டுத் தடவி நாடித்துடிப்பு ஏதுமில்லாததைக் கண்டு, அவனை 'பிணம்' என்று பெயர் சூட்டி, "கட்டி எடுங்கள் (எடுத்துச் செல்லுங்கள்)" என்று சொல்வதற்குள், அறிவற்ற ஏழை நெஞ்சமே! நீ திருநெடுங்களம் என்னும் ஊரில் உறையும் சிவபெருமானின் திருவடிகளை நினைவாயாக! என்று ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வலியுறுத்துகிறார்.*
*திருச்சிற்றம்பலம்*
*அருள்தரும் ஒப்பிலாநாயகி அம்மை உடனாகிய அருள்மிகு திருநெடுங்களநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!!*