திருகோகர்ண நாயகி அம்மை ஆச்சியின் அமுது செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 79வது திருத்தலம்
திருக்கோகரணம்
அருள்மிகு கோகர்ணநாயகி உடனுறை மகாபலநாதர்
மரம்: வில்வம் கோடி தீர்த்தம்
பாடல் எண் 5பண்சாதாரி
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சிய தபோதன் எம்
ஆதி பயில்கின்ற பதியாம்
படைத்தலை பிடித்து
மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமி குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீர
நல்கு கோகரணமே.
பொழிப்புரை:
சிவபெருமான் தலைமாலை அணிந்தவர். சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்களையும் அணிந்தவர். எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும்.
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏