N.ராஜாமுனியப்பன்
640 views
15 hours ago
உலக நாடுகளின் கடன் சுமை இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் கடன் சுமையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் சமீபத்திய "தங்கம் வாங்காதீர்கள்" மற்றும்விடுமுறை செல்லாதீர்கள் , "வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள்" என்ற வேண்டுகோளுக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதாரச் சதி ஒளிந்திருக்கின்றது. இன்று உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தாங்கள் ஈட்டும் வருமானத்தை விடப் பல மடங்கு கடன் பெற்றுள்ளன. இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்படும்போது, உலகப் பொருளாதாரத்தை முழுமையாக மாற்றி அமைக்கும் 'The Great Reset' என்ற திட்டம் World Economic Forum ஆல் (WEF) முன்வைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே, திட்டமிடப்பட்ட பொருளாதார மந்தநிலை (Planned Recession) உருவாக்கப்படுகிறது. தற்போது உலகம் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு (Inflation), திட்டமிடப்பட்ட ஒரு கருவியாகப் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் போர்ச் சூழலைச் சாக்காக வைத்து வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன. இது நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தியை அழித்து, அவர்களைக் கடனில் தள்ளுகிறது. இதனால் எதிர்காலத்தில் ஒரு பெரும் பொருளாதார மந்த நிலை ( Recession) உருவாகலாம். அதன் போது மக்கள் கடனைத் திருப்ப முடியாமல் போகும்போது, அவர்களின் சொத்துக்கள் (வீடு, நிலம்) வங்கிகளால் எளிதாகக் கையகப்படுத்தப்படும். அங்கு தான் “The Great Taking” என்ற கோட்பாடு மக்களுக்கு தெரியவரப் போகின்றது. The Great Taking' என்பது மக்களின் சேமிப்பு மற்றும் சொத்துக்களைச் சட்டப்பூர்வமாக அரசாங்கமும் வங்கிகளும் அபகரிக்கும் ஒரு நுட்பமான வழிமுறையாகும். தற்கால வங்கிச் சட்டங்களில் (Bail-in laws) கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் அபாயகரமானவை. அதாவது வங்கி திவாலானால், பணத்தினை deposit செய்தவர்களுக்குப் பணம் தருவதற்குப் பதில், அந்தப் பணத்தை வங்கியைக் காப்பாற்றப் பயன்படுத்திக் கொள்ளலாம். The Great Taking' விவரிப்பது போல, உங்கள் பங்குகள் (Shares) மற்றும் பத்திரங்கள் (Bonds) உங்களுக்குச் சொந்தமானவை அல்ல; அவை ஒரு பெரிய Centralised அமைப்பின் கணக்கில் "உரிமை கோரப்படாத பிணையாக" வைக்கப்பட்டுள்ளன. அதாவது நாம் வங்கியில் வைத்திருக்கும் deposit மற்றும் பங்குகள் , வீட்டுக்கடன் பத்திரங்கள் அனைத்தும் மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் கடன்களுக்குப் பிணையாக மாற்றப்பட்டுள்ளன. பொருளாதார சரிவு ஏற்படும் பொழுது உங்கள் பணத்தினை , சொத்துக்களை , அந்த நிதி நிறுவனங்கள் தம் வசப்படுத்திக் கொள்ளும். அதற்கும் மோடியின் தங்கம் வாங்காதீர்கள் என்பதற்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கலாம். "தங்கம் வாங்காதீர்கள்" என்று பிரதமர் மோடி கூறுவதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் இதுதான்: தங்கம் என்பது ஒரு தனிமனிதனின் மிகச்சிறந்த தற்காப்புச் சொத்து (Hard Asset). காகிதப் பணம் அல்லது டிஜிட்டல் பணம் மதிப்பற்றதாக மாறும் போது, தங்கம் மட்டுமே கை கொடுக்கும். மக்கள் தங்கத்தை வாங்கினால், அவர்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. பொருளாதார மந்தநிலையின் போது காகிதப் பணம் மற்றும் டிஜிட்டல் எண்கள் மதிப்பிழக்கும். அப்போது தங்கம் வைத்திருப்பவர்கள் மட்டுமே சுதந்திரமாகச் செயல்பட முடியும். உங்கள் பணம் வங்கியில் இருக்கும் வரைதான் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதை எடுத்து நீங்கள் தங்கமாக மாற்றினால், உங்களைச் சார்ந்திருக்கச் செய்யும் அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடையும். தங்கத்தை வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் CBDC (டிஜிட்டல் கரன்சி) கட்டுப்பாடுகளுக்குள் வராமல் பண்டமாற்று முறையில் தப்பித்துவிட முடியும். இந்தியாவின் கடன் சுமையைச் சமாளிக்க, மக்களின் சேமிப்பை (Savings) ஏதோ ஒரு வழியில் அரசாங்கம் பயன்படுத்த விரும்புகிறது. உங்கள் சேமிப்பு தங்கமாக மாறினால், அவர்களால் அதை எளிதில் கையாள முடியாது. திட்டமிடப்பட்ட ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் மீண்டும் "Work from Home" மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைப் பிரதமர் வலியுறுத்துவது, மக்களை முடக்கி வைத்து அவர்களின் பொருளாதாரச் செயல்பாடுகளைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே பார்க்கப்படுகிறது. இது Agenda 2030 இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. மக்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் "அவர்கள் உங்கள் சேமிப்பை விரும்புகிறார்கள், ஆனால் நீங்கள் அதைத் தங்கமாகச் சேமிப்பதை விரும்பவில்லை." பொருளாதாரச் சரிவு ஏற்படும் போது, வங்கிகளில் இருக்கும் உங்கள் டிஜிட்டல் எண்கள் மாயமாகலாம். ஆனால், கையில் இருக்கும் தங்கம் உங்களைக் காப்பாற்றும். பிரதமரின் இந்த வேண்டுகோள் நாட்டின் நலனுக்காகவா அல்லது உலகளாவிய 'மாஸ்டர்களின்' (Globalist / Illuminati ) ஸ்கிரிப்ட் படி செயல்படுகிறாரா என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் கையில் இருக்கும் தங்கம் மற்றும் நிலம் மட்டுமே இந்த "திட்டமிடப்பட்ட பொருளாதாரச் சரிவில்" இருந்து உங்களைக் காப்பாற்றும் கவசங்கள். அதைத் தவிர்க்கச் சொல்வது, உங்களை முழுமையாகப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியே ஆகும். "அவர்கள் எதைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்களோ, அதைச் செய்வதே உங்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி." முகிந்தன் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴