#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை சிந்தனை🙏*
🌷25.04.2026🌷
தவறும் சரியாகத் தெரியும் அதை உணராத வரையில்... உணர்ந்தும் தன்னோட இருக்கும் அதைத் திருத்தாத வரையில்...
சிலரின் கண்ணீர் கொண்டே இங்கே பலர் தாகம் தீர்க்கின்றனர்.
தொலைத்தப் பின்பு தேடாதீர்... மீண்டும் பழைய அன்பு கிடைக்காது...
இருக்கும் பொழுது தொலைக்காதீர்... மீண்டும் தேடிப் பெற்றிட முடியாது நீங்கள் தொலைத்ததை அப்படியே...
தன்னை மற்றவர் புகழ வேண்டும் என விரும்புவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களைப் புகழ்வதில்லை.
ஓர் உறவு ஆரம்பத்தில் கொடுக்கின்ற மரியாதையைக் கடைசி வரை தருமாயின், அதுவே மகத்தான உறவு...
மன்னிக்கத் தெரிந்தவர்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம்...
முகத்தில் இருக்கும் காயத்தையும், உள்ளத்தில் இருக்கும் சோகத்தையும் காட்டாமல் இருப்பதில்லை கண்ணாடி...
உண்மையான உறவுகள் உங்களிடம் நேசத்தையும் அன்பையும் தவிர.... வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை...
செல்வந்தராக வாழ நம் அனைவருக்குமே ஆசை தான். ஆனால் எப்படி என்பது தான் மிக முக்கியக் கேள்வி...
நம் கையில் உள்ள பணத்தை எப்படி செலவழிக்கிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம்...
நம் செலவினம் எப்படி மேற்கொள்கிறோம் என்பதை சற்றுக் கூர்ந்து அலசிப் பார்ப்போமே. அவசிய செலவுகள் அனைத்துமே செய்து தான் ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒவ்வொரு செலவையுமே இது அவசியம் தானா என ஒரு நொடி யோசித்தப் பின் அதனை செய்தால் போதும். நம் செலவினங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம்...
கோடி கோடியாய் செலவழிக்க நமக்குத் தகுதி இருக்கலாம்...
ஆனால் தேவையற்ற செலவுகளை செய்ய பழக்கப்பட்டு விட்டோமானால் அனைத்து செல்வமும் சில காலத்தில் காணாமல் போய் விடும் என்பதை உணர்ந்து நம் வரவு செலவு வழக்கங்களை ஒரு வரையறைக்குள் வைக்கப் பழகுவோம். இனிதாக வாழ்வோம்.
வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்.
😊😊😊