காலை சிவசிந்தனை
=====================
எந்த பிறவி எடுத்தால் என்ன?
சிவபக்தியே முக்கியம்
============================
ஆதிசங்கரர் சிவானந்த லஹரி
பாடல்=10
நரத்வம்....... தேன வபுஷா ||
மனிதப்பிறவியோ,தேவப்
பிறவியோ,அல்லதுமலைகளிலும்,காடுகளிலும்அலைந்துதிரியும்மிருகங்கள்,கொசு,பசு,புழு,பறவைபோன்றஎந்தப் பிறவியாயினும் ஏற்படட்டும்.பரமேஸ்வரா
எப்பொழுதும் உன்னுடைய திருவடித்தாமரைகளை விட்டுநீங்காமல்இருந்து தியானம் செய்து அந்தபேரானந்த வெள்ளத்தில் விளைய மகிழும் உள்ளம் மட்டும்வாய்க்குமானால்,
எத்தகையஉடலைப் படைத்தால்தான் என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது?
அப்பர் பெருமான்தேவாரம்
===========================
பாடல் எண்: 8
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கியிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச்
செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே-
பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார். 🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்