#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 செய்து கொண்டிருக்க வேண்டிய
ஐந்து செயல்கள்
சிவபக்தர்கள் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
அவைகளாவன:
1) விபூதி அல்லது திருநீறு தரித்தல்,
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.
இது ஒரு வர்ம சாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,
அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்,
அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம்.
மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,
ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும்
அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.
இதை திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
2. ருத்ராட்சம் அணிதல்,
ருத்ராட்சத்தின் பெருமை மிக அதிகம். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள்.
மற்ற மரங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.
இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராட்சம் ஒன்றுதான். இந்த ருத்ராட்சம் நேபாளத்தில் விளைகிறது
3. பஞ்சாட்சர மந்திரம்
நான்கு வேதங்களுள் யஜுர்வேதம் முக்கியமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் முக்கியமானது.
மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் முக்கியமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாட்சரமாகிய “சிவாய நம” பிரதானமானது.
பஞ்சாட்சரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவ்னாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு எளுத்துக்கள்.
பஞ்சாட்சர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளமாக சொல்லலாம்.
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்
4. வில்வ தளத்தால் சிவ பெருமானை பூசித்தல்.
5. இருதயத்தில் சதா சிவதியானம் செய்தல்
சிவ தியானப் பூஜையின் சுருக்கம்
சிவபெருமானைப் பத்மாசனத்திலெழுந்தருளச் செய்து அபிஷேகஞ் செய்து, ஆசனத்தையும், மூர்த்தியையும், வித்தியா தேகத்தையும் பூசிக்க வேண்டும்.
பின்னர்ப் பரமசிவனை ஆவாகனஞ் செய்து ஸ்தாபனம் சன்னிதானம் முதலியவற்றால் பூசித்து மனத்தால் அபிஷேகஞ் செய்வித்து வஸ்திரம் உபவீதங்களைத் தரிக்க வேண்டும்.
பின்னர் சந்தனம், புஷ்பம், ஆபரணங்களால் அலங்கரித்துத் தூபதீபம் சமர்ப்பித்து அதன் பின்னர் ஆவரணபூசை செய்து நைவேத்தியம், முக வாசம், தாம்பூலம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்துத் தூபம் ஆராத்திரிகஞ் செய்து, பவித்திரஞ் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் வெண்மையான விபூதியைத் தரித்துக் கண்ணாடி முதலியவற்றால் உபசாரஞ்செய்து, அதன் பின்னர் பலிகொடுத்து பாத்திய முதலியவற்றாலும் சந்தனம் புஷ்பங்களாலும் உபசாரஞ் செய்யவேண்டும்.
பின்னர் செபம், தோத்திரம் நமஸ்காரம், பிரதட்சணங்களைச் செய்து அட்ட புட்பங்களால் அருச்சித்து விசேஷ அர்க்கியத்தால் பூஜைசெய்ய வேண்டும்.
பின்னர் ஆவரண தேவதைகளுடன் சிவபெருமானைப் பராங்முகார்க்கியத்தால் எழுந்தருளச்செய்து உரிய காலத்தில் மனத்தின்கண் சிவபெருமானை இருத்தி நிவேதனஞ் செய்த அன்னத்தை உட்கொள்ளல் வேண்டும்.
இதை மானசீகமாக செய்ய வேண்டும்.
🪔🪔🪔🪔🪔🪔🪔