ரவிசங்கர் ராஜா, ஆரணி
745 views
19 hours ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #வேஷமும் #நிஜமும் செய் தவ வேடம் மெய்யில் தாங்கி, கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும், வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு உய்வது கிடைத்தனன், யானே உய்தற்கு ஒரு பெரும் தவமும் உஞற்றிலன், உஞற்றாது எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பின், கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம் கொண்டதற்கு ஏற்ப நின் தொண்டரொடு பயிறலின் பூண்ட அவ்வேடம் காண்தொறும் காண்தொறும் நின் நிலை என்னிடத்து உன்னி உன்னிப் பல்நாள் நோக்கினர் ஆகலின், அன்னவர் பாவனை முற்றியப் பாவகப் பயனின் யான் மேவரப் பெற்றனன்போலும்! நூல்: #சிதம்பர #மும்மணிக் #கோவை பாடியவர்: #குமரகுருபரர் நான் ஒரு பெரிய தவ ஞானியைப்போல் என் உடல் எங்கும் வேஷம் போட்டுக்கொண்டேன். ஆனால், எனக்குள் நிறைந்திருந்தது மொத்தமும் பொய், புரட்டு, வஞ்சகம். அதன்பிறகு, வட திசையில் உள்ள மேரு மலை வாய் பிளந்ததுபோன்ற அம்பலத்தில் #சிவபெருமான் நிகழ்த்தும் திருநடனத்தைப் பார்த்தேன். பிறவிப் பயனை அடைந்தேன். இந்தப் பெரிய பெருமையை அடைவதற்காக நான் எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் எனக்கு அந்தப் பேறு கிடைத்தது. ஏன்? ஒரே காரணம்தான்.நான் தவறான பழக்கங்களைக் கொண்டிருந்தாலும், உன்னுடைய பக்தனாக வேஷம் போட்ட காரணத்தால், உனது மற்ற (நிஜமான) அடியவர்களுடன் பழகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் நானும் கொஞ்சம் திருந்தினேன். தவிர, நான் போட்ட வேஷத்தை மக்கள் தினம் தினம் பார்த்தார்கள். என்னை ஓர் உண்மையான பக்தன் என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள். சொல்லப்போனால், அவர்கள் என்னில் உன்னைப் பார்த்தார்கள். இப்படி அவர்கள் தொடர்ந்து பல நாள் எனக்குள் உன்னைப் பார்த்துவந்ததால், ஒருகட்டத்தில் அந்த பாவனையே உண்மையாகிவிட்டதோ? அதனால்தான் எனக்கு இந்தப் பெரிய அதிர்ஷ்டம் கிடைத்ததோ? ஒரு பிரபலமான கதை கேட்டிருப்பீர்கள். திருடன் ஒருவன் போலிஸிடமிருந்து தப்பிப்பதற்காக சாமியார் வேஷம் போடுவான். அப்போது அவனை அரசன் தொடங்கி எல்லாரும் வணங்க, ‘வெறும் வேஷத்துக்கே இத்தனை மரியாதை என்றால், நிஜமாகவே நான் துறவி ஆகிவிட்டால் என்ன?’ என்று யோசித்துத் திருந்துவான். கிட்டத்தட்ட அதேமாதிரி ஒரு கருத்தைக் குமர #குருபரரின் இந்த வரிகளும் வெளிப்படுத்துகின்றன #வேஷத்திலிருந்து #நிஜம் #பிறப்பதா? இந்தக் காலத்துல இதெல்லாம் சாத்தியமே இல்லை’ங்கறீங்களா? அதுவும் உண்மைதான்! #திருச்சிற்றம்பலம் திருமூலரின் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், நமது உடலை ஆலயமாகப் போற்றிப் புகழ்ந்துள்ளது. சித்தர்கள் உடலை வேள்வித் தீயாக உருவகப்படுத்தி, அதனுள் இறைவன் உறையும் தத்துவத்தை இப்பாடல் விளக்குகிறது. பாடல்:- ******* உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே விளக்கம்:- ******* மனித உடல் அசுத்தமானது என நினைத்திருந்த நிலையில், அதற்குள் இறைவன் கோயில் கொண்டிருப்பதையும், மெய்ஞ்ஞானப் பொருளையும் உணர்ந்துகொண்டதாக திருமூலர் கூறுகிறார். இதனால், உடம்பை ஒரு புனிதமான கோயிலாகக் கருதி பேணிப் பாதுகாக்கிறேன் என இப்பாடல் விளக்குகிறது. . . ஓம் நம சிவாயமே🙏🙏🙏 திருமூலரின் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், நமது உடலை ஆலயமாகப் போற்றிப் புகழ்ந்துள்ளது. சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது ஏழு ஏழ் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது சிவ காலை வணக்கம் ஆசைப்பத்து பாடல் எண் : 2 *************** மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல்போர்த்த குப்பா யம்புக் கிருக்ககில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னா ரமுதேயோ அப்பா காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே பொழிப்புரை: *************** அம்மானே! நரம்பு முதலானவற்றால் செய்யப்பட்ட இந்த உடம்பில் தங்கி இருக்க மாட்டேன். என்னை அழைத்துக் கொள்ள வேண்டும். எவ்வகைப் பெருமை உடையார்க்கும் அறிய இயலாத என் ஆரமுதே! அப்பனே! உன்னைக் காண ஆசைப் பட்டேன். #மறக்காதீர்கள் வெற்றிகரமான வாழ்வை விட, #மனநிறைவானவாழ்க்கையே சிறந்தது. ஏனெனில் வெற்றி என்பது பிறரால் நிர்ணயிக்கப்படுவது, மனநிறைவு என்பது உங்களால் முடிவு செய்யப்படுவது. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க தயங்காத நீங்கள், செய்யாத தவறுக்கு உங்கள் மீது பழி சொல்பவர்களை இழந்தாலும் பரவாயில்லை என்று உங்களின் #சுயமரியாதை #நிலைநிறுத்துங்கள். அதுவே உங்களை #பெருமைக்குரியவர் ஆக்கும் காரணத்தை உருவாக்கி உங்களை வெறுக்கும் இவர்கள் எதிர்மறையான மனிதர்கள். இவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்னையை காண்பவர்கள். இத்தகைய எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள் காரணம் இல்லாமல் உங்களோடு விசுவாசிகளாக தொடருபவர்களை கடைசிவரை மறக்காதீர்கள் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏