ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.2K views
1 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் திருமந்திர பாடல்-2500. உள்ளமும் இல்லை உருவில்லை தானே….! உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும் உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப் பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை உள்ளமும் இல்லை உருவில்லை தானே. விளக்கம்:- உள்ளமே உருவம் என்றும், உருவமே உள்ளம் என்றும் கூறுவதன் உண்மையை அறிந்து கொண்டு, உள்ளத்துக்கும் உருவத்துக்கு உள்ள உண்மைத் தொடர்பை உணர்ந்து கொண்டவர் ஞானியர். இவர்களுக்கு துன்பம் தரும் நரகமும் இல்லை; இன்பம் தரும் சுவர்க்கமும் இல்லை. இவர்களுக்கு முப்பாழ்கள் இல்லை. உள்ளம் இல்லாததால், உலகியலில் நாட்டமும் இல்லை. இவர்கள் உடலைக் கடந்து விளங்குவர். ஆயிரம் கனவுகள்,ஆக்ரோஷப் போர்கள்.. இறுதியில் எஞ்சுவதோ ஒரு பிடி சாம்பல்! ஒரு வாளி நீர் போதும் உன் வாழ்நாள் சுவடுகளைத் துடைத்தெறிய. கரையப்போகும் சாம்பலுக்காக எதற்கு இந்த வேடங்கள்? மரணத்தின் மௌனத்திற்கு முன்னால் நம் வாழ்வு ஒரு வெற்று நாடகம்🖤💕 எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை யாகம் செய்தாலும் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் வாழ்க்கை என்பது வெற்றிடங்களின் தொகுப்பு அல்ல,எங்கோ ஒரு மூலையில் மலரும் சிறு நம்பிக்கையின் தொடர்ச்சி.காரணங்கள் தீர்ந்து போகலாம்,ஆனால் தேற்றி கொள்ளும் அந்த ஒற்றைத் திமிர் தீராது,ஆயிரம் முட்கள் தைத்தாலும் வீழக் காரணங்கள் கோடி இருந்தாலும் வாழ கிடைக்கும் ஒரே ஒரு புன்னகை போதும் எனக்கு! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள் எத்தனை பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் திருவிழாக் கூட்டத்தின் நடுவே அநாதையாய் நிற்பது போல் இருக்கு இந்த வாழ்வு!சுற்றிலும் கேட்கும் சிரிப்பொலிக்கு நடுவே, இருந்துமில்லாமல் போன நொடிகளை எண்ணி உறைந்து கிடக்கிறது சுயம்.சாகத் துணிந்தும் சாக முடியாமல் போனவனின் அந்தக் கழுத்துத் தழும்பைப் போல் கனத்துக் கிடக்கிறது நெஞ்சம்🖤💕 சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏 நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருநாள், அதே நினைவு மீண்டும் வருகிறது. ஆனால் இந்த முறை அது காயப்படுத்தவில்லை. அமைதியாக அருகில் அமர்கிறது. அப்போது புரிகிறது; காலம் நினைவுகளை அழிப்பதில்லை. அவற்றின் கூர்மையை மட்டும் மழுங்கச் செய்கிறது! சில இரவுகளில் தூக்கம் வராமல் விழித்திருக்கும்போது, உன்னை இழந்த துக்கத்தைவிட உன்னை உண்மையென்று நம்பிய என்னை நினைத்துத்தான் அதிகமாக அழுகிறேன்! பகல் முழுதும் ஆயிரம் முகங்களுக்குப் பதிலளிக்கும் இவர்கள், இருள் கவிழ்ந்ததும் தங்கள் சுயத்தைத் தேடி அழுகிறார்கள். யாரும் இல்லாத அந்த நான்கு சுவர்களுக்குள் பக்குவம் என்பது கழற்றி வைக்கப்படும் ஒரு பாரமான உடை! அங்கே அவர்கள் வெறும் துண்டு துண்டாய் உடைந்த மனிதர்கள்🖤💕 #சிவசிவ #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #திருப்பந்தனைநல்லூர். ஆறாம் திருமுறை பதிகம் #பாடல் ஏறேறி யேழுலகு மேத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார் நீறேறு மேனியார் நீல முண்டார் நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார் ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார் பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. #பொழிப்புரை பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர் . தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர் . நீறணிந்த மேனியர் . விடத்தை உண்டவர் . வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர் . உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர் . கங்கை தங்கு சடையினர் . ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர் . தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர் . புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர் . #திருச்சிற்றம்பலம் #வாழ்க்கை #ஒரே #போராட்டமா #இருக்கு..." என்ற எண்ணம் வரும் போதெல்லாம்... ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்... அதே நொடியில், யாரோ ஒருவர் ஒரு மருத்துவமனையின் படுக்கையில் இன்னும் சில நிமிடங்கள் உயிரோடு இருக்க _வேண்டும் என்பதற்காக மூச்சு விடவே போராடிக் கொண்டிருக்கிறார்.. நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பல விஷயங்கள், மற்றொருவரின் மிகப் பெரிய கனவாக இருக்கலாம். அதனால்... இருப்பதை எண்ணி நன்றியோடும், இல்லாததை நோக்கி நம்பிக்கையோடும் வாழ்வோம். நாம் நினைப்பதை விட #ஆசீர்வாதங்கள் #நிறைந்த #வாழ்க்கையைத்தான் #வாழ்ந்து #கொண்டிருக்கிறோம். #இலக்கை_நீங்கள் பற்றும் முன்னமே !! #இலக்கு_உங்களை பற்றி விடுகிறது !! இலக்கிடம் இலக்கு அற்று சிக்கி கொண்டே பின்னே தான் .. இலக்கு உங்களிடம் சிக்கின்றது !! இதில் வெற்றி பெற்றது இலக்கு தான் !! நீங்கள் அல்ல .. இலக்கை நீங்கள் அடையும் வரை, நீங்கள் இழப்பதோ ஏராளம் என்பதே மெய் .. இலக்கற்று இருங்கள் .. அடைவதை எல்லாம் அனுபவித்து வாழவந்தார்கள் தான் நீங்கள் .. #பிறப்பிற்க்கு_முன்னும் ?? #இறப்பிற்க்கு_பின்னும் ?? என்ன நடக்கும் .. என்ன நடந்தால் தான் என்ன ?? அங்கே நீ என்ற ஒன்றே இல்லை .. பிறப்பிற்கு முன்னே நீ என்ற அடையாளம் அற்று !! பிரபஞ்சத்தின் துகளாக !! இப்பிரபஞ்சமே உடலாக !! இது தான் நீ என்று சுட்டிக்காட்ட முடியாத வண்ணம், பிரபஞ்சமாகவே எல்லை அற்று, பிரபஞ்ச பேராற்றல் என்ற இறையோடு அதை இசைவுக்கு இசைந்தவண்ணம் நானற்று இருந்தாய் .. இறப்புக்கு பின்னே !! இது என் உடல் ?? உறவு ?? சொத்து ?? ஆற்றல் ?? திறமை ?? என்று உடல் என்னும் சிறைக்குள் சிக்கி !! அந்த சிறையை வசதியாக்க ?? சக சிறைவாசிகள் ஆதரவு தேடி ?? பாசம் தேடி ?? காதல் தேடி ?? அதில் எல்லாம் பக்கவுபட்டு !! இது தான் நான் ?? இவ்வளவு தான் நான் ?? என்ற தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் சிறையில் இருந்து விடுபட்டு .. பெற்றதை பெற்ற இடத்தில் !! அதை பெற பிறத்தவர்களிடம் கொடுத்துவிட்டு !! இது எதுவும் நான் இல்லை என்ற சுவடு அற்று !!! மீண்டும் எல்லையற்ற தன்மையுள் கலந்து விடுவாய் .. இங்கே என்ன நடக்கும் என்றால் ?? அதை பார்க்க ?? கேட்க ?? தெரிந்துகொள்ள ?? அடிப்படையாக ஓர் நான் என்ற அடையாளம் வேண்டும் தானே !! அதுவே இல்லதாபோது !! என்ன நடந்தால் தான் என்ன ?? 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய