சிவார்ப்பணம்
=================
இளநீர்
----------------
இளநீர்களின் சிறப்பு வரிசை
==================================
நான்கு வித இளநீர்கள்
------------------------------------------
"சகத்திரமான பச்சை தன்னிள நீரின்மிக்காய்
வகுத்தசெவ்விளநீர் ஒன்று மருவும் இன்னதும் அவ்வாறே
தொகுத்ததில் அதிகமாகும் சூரிய கௌளி ஒன்று
மிகுத்த ஆயிரம் இதற்கு மிக்கது சந்த்ரகௌளி."
பொருள்
=========
பச்சை இளநீர்,செவ்வளநீர்,சூரியகௌளி இளநீர்,சந்த்ரகௌளிஇளநீர்
ஆகும்.
ஒரு செவ்வளநீர் ஆயிரம் பச்சயிளநீருக்கு நிகரானது.(சமம்)
ஒரு சூரியகௌளி இளநீர் ஆயிரம் செவ்வளநீருக்கு நிகரானது
ஒரு சந்த்ரகௌளி இளநீர் ஆயிரம் சூரியகௌளி இளநீருக்கு நிகரானது
பச்சிள நீர் (பச்சைகலர் இளநீர்)
-----------------------------------------
"பச்சிள நீரை ஒன்று பரமனுக்கேற்றினோர்கள்
உச்சிதமான வித்தையுடையவராய் இருந்து பின்னர்
நச்சிய போகம் எல்லாம் நட்பொடும் அனுபவித்தே
எச்சமில் சாமீபத்தில் இருந்தின்பம் எய்திவாழ்வார்
உரை
=========
பச்சிள நீர் ஒன்றைச் சிவபெருமானுக்கு அர்ப்பணித்தவர்கள் ,தாங்கள் விரும்பிய கல்வியைப்பெற்று , விரும்பிய போகங்களை நண்பர் உறவினரோடும் நுகர்ந்து பின்பு குறைவில்லாத சாமீப பதவியை அடைந்து இன்புற்றிருப்பார்கள்
அர்ப்பணித்தல் என்பது இளநீரை அபிஷேகம் செய்தல்,நைவேத்யம் செய்தல் ஆகும்.
இளநீர் அபிஷேகம் ராஜ்யசுகத்தைத் தரும்
தொடரும்............🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐 #🙏ஆன்மீகம்