🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️

7K Posts • 7M views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3K views 1 months ago AI indicator
*திருநீறு செய்யும்* *அற்புதங்கள்* *விபூதியின்* *முக்கியத்துவம்* *உணர்த்தும்* *புராண வரலாறு* ‘கிரேதா யுகத்தின்' ஒரு காலத்தில் வாமதேவர் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரும் பண்டிதரும் மகா யோகியும் ஆவார். தினமும் அவர் தனது உடல் முழுவதும் விபூதி எனப்படும் பஸ்மத்தை பூசிக் கொண்டு இருப்பார். ஒருநாள் அவர் வனத்தின் வழியே சென்று கொண்டு இருந்தபோது ஒரு பிரும்ம ராக்ஷசன் உண்பதற்காக அவரைப் பிடித்துக் கொண்டான். அவர் தப்பி விடாமல் இருக்க அவரை நன்றாக கட்டிக் கொண்டு நின்ற போது அவர் உடல் முழுவதும் பூசியிருந்த விபூதி அந்த பிரும்ம ராக்ஷசன் உடலிலும் ஒட்டிக் கொள்ள அவன் அப்படியே மனித உருவை எடுத்து அவர் முன் நின்றான். அவருடைய கால்களில் விழுந்து வணங்கி தான் செய்த செயலுக்கு மன்னிப்பைக் கோரினான். அவனை ஆச்சர்யத்துடன் பார்த்த வாமதேவர் அவன் யார் என்றும் அதனுடைய பூர்வக் கதை என்ன என்றும் கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த மனிதன் அவரது கருணையினால்தான் தான் சாப விமோசனம் அடைந்து மனித உருவைப் பெற்றதாக கூறி விட்டு, தனக்கு 25 வருடங்களின் பூர்வ ஜென்மக் கதை நினைவுக்கு வருகிறது என்றும், தான் முன்னர் ஒரு பிறவியில் துர்ஜயா எனும் பெயரில் கொடுமைக்கார மன்னனாக இருந்தவர் எனவும், மிகக் கேவலமான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருந்தவர் நன்கு குடித்து விட்டு ஒன்றும் அறியாதப் இளம் பெண்களைக் கடத்திச் சென்று பலவந்தமாக அவர்களை தமது ஆசைநாயகிகளாக வைத்துக் கொண்டதாகவும் இப்படியாக பல கொடுமைகளைப் புரிந்து கொண்டு இருந்தபோது ஒருநாள் இறந்த பின்பு நரகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது என்றும், அதன் பின் நூறு வருட காலத்துக்கு நரியாக, பேயாக, மிருகங்களாக பிறப்பு எடுத்து கேவலமான வாழ்வை மேற்கொண்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் கூறினான். அதன் பின்பு பல பிறவிகள் எடுத்து முடிவாக பிரும்ம இராட்சசனாக 25 வருடங்கள் வாழ்ந்து வந்து கொண்டு வந்ததாகவும் தற்போது வாமதேவரின் அருளினால் சாப விமோசனம் கிடைத்ததாகக் கூறி அவருக்கு நன்றி செலுத்தினான். ஆனால் தனக்கு எப்படி திடீர் என சாப விமோசனம் கிடைத்தது என்பது தெரியவில்லை என்றும் அதைக் கூறுமாறும் அவருடைய கால்களில் விழுந்து கேட்டான். நான் எப்படி பாப விமோசனம் பெற்றேன் என்று வாமதேவரைக் கேட்டதும் அவர் கூறினார் ‘ராக்ஷசனே, நீ என்னைப் பிடிக்க முயன்றபோது நான் தப்பாமல் இருக்க நீ என்னை கட்டிப் பிடித்தாய். அப்படி என்னை கட்டிப் பிடித்தபோது என் உடம்பில் இருந்த விபூதி உன் உடலில் ஒட்டிக் கொண்டது. அதுதான் உனக்கு விவேகத்தைக் கொடுத்தது. விபூதிபஸ்மத்தின் மகிமையைக் கூற இயலாது. அதனால்தான் சிவபெருமான் கூட தன் உடல் முழுவதும் விபூதியை பூசிக் கொண்டு இருக்கிறார்’. என்றதும் விபூதியை பூசிக்கொண்டு உள்ள சிவபெருமானின் கதையைக் கூறுமாறு வேண்டிக் கொள்ள வாமதேவர் அவனுக்கு அந்தக் கதையைக் எடுத்துரைத்தார். ‘முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் பிராமணர்கள் அனுஷ்டிக்க வேண்டிய நியமங்களை கடை பிடிக்காமல் இருந்து வந்தான். அதோடு கேவலமான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டு இருந்தான். ஆகவே அவன் மீது பொறாமைக் கொண்டவர்கள் அவனைக் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் தூக்கிப் போட்டு விட்டார்கள். அவன் உடலை தெரு நாய் ஒன்று வந்து கடித்துக் குதறத் துவங்கியது. அந்த நாய் மயானங்களிலும் சென்று அங்குள்ள பிணங்களை தின்னும் பழக்கம் கொண்டது. அன்று அதற்கு மயானத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதினால் மயானத்தில் உருண்டு புரண்ட பின்பு அங்கு வந்திருந்தது என்பதினால் அதன் உடல் முழுவதும் சுடுகாட்டின் பஸ்மம் ஒட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே அந்த நாய் கொலையுண்டுக் கிடந்தவனைக் குதறியபோது அவன் உடம்பின் மீதும் அந்த பஸ்மம் விழுந்தது. அதே நேரத்தில் யம தூதர்கள் இறந்து கிடந்தவனை யமலோகத்திற்கு கொண்டு செல்ல வந்தனர். அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் இருந்து சிவ தூதர்களும் வந்து அந்த மனிதனை கைலாயத்துக்கு கொண்டு செல்ல அங்கு வந்தனர். இறந்து போனவனின் உயிரை எடுத்துச் செல்வதில் சிவ கணங்களுக்கும் யமதெதர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. யமதூதர்கள் யம லோகம் சென்று யமதர்மராஜனிடம் அது பற்றிக் கூறினர். அதனால் யமதர்மனே நேரடியாக அங்கு சென்று ஒழுக்கம் கெட்டவனை சிவகணங்கள் எப்படி சிவலோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என சிவகணங்களை கேட்க அவர்கள் எங்களுக்கு சிவபெருமான் கொடுத்துள்ள உத்தரவின்படி இறந்து போனவர்களில் எவன் உடலில் பஸ்மம் உள்ளதோ, எவன் உடலில் ருத்திராட்ச மாலை சூட்டப்பட்டு உள்ளதோ அவர்களது ஆத்மாக்களை சிவலோகத்திற்கு நாங்கள் அழைத்துப் போக வேண்டும். ஆகவே இவனை சிவலோகத்துக்கே அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அப்படி கூறிய பின் யமதேவரால் அவர்களை தடுக்க முடியவில்லை என்பதினால் இறந்து கிடந்தவனின் ஆத்மாவை அவர்கள் சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அது முதல் இறந்து போனவர்கள் உடலில் பஸ்மம் பூசுவதோ, ருத்திராட்ச மாலைகளை அணிவிப்பதோ கூடாது என்ற நியமம் ஏற்பட்டது’. வாமதேவர் கூறியக் கதையைக் கேட்ட ராக்ஷசனும் அவரிடம் கேட்டது ‘ஸ்வாமி, பஸ்மம் என்பது என்ன? அதன் மகிமை என்ன ?’.என்பதை கூறுமாறு கேட்டான். அதற்கு வாமதேவர் கூறினார் ‘பஸ்மம் என்பது நான்கு எரிக்கப்பட்ட புனித பொருள் ஆகும். அதில் பசுவின் சாணம், ஹோமங்களில் எரிக்கப்படும் பொருட்கள், யக்யங்களில் எரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இறந்து போனவர்களது உடல் கூட அடக்கமாகும். மந்தார மலை மீது ஒருமுறை தேவ கணங்கள் கூடி இருந்தார்கள். அந்த கூட்டத்தில் பார்வதியும் சிவபெருமானும் பங்கேற்றனர். அதில் சிவபெருமானின் சேவகர்கள், எட்டு கோடி தேவதைகள், அஷ்ட திக்குப் பாலகர்கள், 12 ஆதித்தியர்கள், எட்டு வசுக்கள் என அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். ஏழு பிரபைகள் என்ற பொருட்களான தங்கம், இரத்தினம், நீலமணி, புஷ்பராகம், முத்து, வைடூரியம், பச்சை கற்கள் போன்றவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டு இருந்த ஆசனத்தில் பத்து கரங்களுடன் சிவபெருமான் அமர்ந்து இருக்க, அவருடைய உடல் முழுவதும் பஸ்மம் தீட்டப்பட்டு இருக்க, மிருகத்தின் தோலினால் ஆன ஆடை, கழுத்தைச் சுற்றி மாலையைப் போல பாம்பு, கங்கையும் பாதி நிலவும் கொண்டையில் இருக்க, வேல், உடுக்கை, கத்தி, பாசுபதாஸ்த்திர, அம்புக்கள், அங்குசம் போன்ற ஆயுதங்களும் மற்ற கைகளில் இருந்தன. அப்போது அங்கு வந்த சனத் குமரர்கள் சிவனிடம், ‘மஹாதேவப் பெருமானே, உத்தமமான மனித குல மேம்பாட்டிற்கு தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நான்கு நிலைகளைத் தந்துள்ளீர்கள். அவற்றை எளிதில் பயில முடியாது என்பதினால் உங்கள் அருளைப் பெற்றுக் கொண்டு அவற்றை எளிதில் பயின்று எப்படி சமஸ்காரம் என்ற பந்தத்தில் இருந்து வெளி வர முடியும் என்பதை எங்களுக்கு விளக்குவீர்களா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார்கள். அதற்க்கு சிவபெருமான் கூறினார் ‘நான் மூன்று வரிகளைக் கொண்ட பஸ்மத்தை நெற்றியிலும், உடம்பெங்கும் பூசி உள்ளதைக் கவனித்தீர்களா? அப்படி நீங்கள் அனைவருமே அதை பூசிக் கொண்டு இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து போகும். பசுவைத் திருடியவன் , தங்கத்தை திருடியவன், பொய் கூறி வஞ்சித்தவன், மற்றவர்களின் மனைவியை அபகரித்தவன் என குற்றம் புரிந்தவர்களது பாவங்கள் கூட இந்த விபூதி எனும் பஸ்மத்தை பூசிக்கொள்ளும்போது அழிந்து விடும். அதை அணிபவர்களுக்கு முக்தி கிடைக்கும்’. இப்படியாக பஸ்மத்தின் மகிமையை அந்த பிரும்ம ரக்ஷசனுக்கு கூறிய வாமதேவர் அந்த பிரும்ம ராக்ஷசன் மீது சிறிதளவு வீபுதியை தூவ அந்த பிரும்ம ராக்ஷசனும் தன்னுடைய பழைய உருவைப் பெற்று அவருடைய கால்களில் விழுந்து வணங்கினான். அவனுடைய பாபங்கள் அன்றோடு அழிந்தன. வாமதேவர் சிவபெருமானின் அவதாரமாகப் பிறந்தவர். குருவை மிஞ்சிய கடவுள் இல்லை என்பதினால் பிரும்ம ராக்ஷசனும் மோட்ஷத்தை அடைந்தான். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
28 likes
24 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
749 views 1 months ago AI indicator
*இன்று*(15-6-26) மாதப்பிறப்பு* *ஷடசீதி புண்ய காலம்*! உபய ராசிகளான மிதுனம், கன்னி,தனுசு,மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் ஆனி ,புரட்டாசி மார்கழி ,பங்குனி ஆகிய தமிழ் மாதபிறப்பு நாட்களில் செல்லும் காலம் ஷடசீதி புண்ய காலம் எனப்படும். இன்று(15-6-26)ஆனி மாதப்பிறப்பில் சூரியன் மிதுன ராசியில் செல்லும் காலம் ஷடசீதி புண்ய காலமாகும். ஆனி மாதம் சூரியன் மிதுன ராசியில் வரும் நேரத்திற்கு பின்னர் 24மணிநேரம் ஷடசீதி என்ற புண்ணிய காலமாகும். மிதுன ராசி உபயராசியாகும் சிவனுக்கு “ஷடாங்கன்”என்று பெயர். ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும். சிவபெருமானுக்கு மிகப்பிரியமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். இக்காலத்தில் சிவன் சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு தரும். ஆற்றலையும் மனம் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. அதாவது அன்று சிவனையும் பார்வதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும் இந்த ஷடசீதி புண்ய காலம் தேவர்கள் சிவனை வழிபடும் காலமாகும். இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவன் கோவில்,ஜீவ சமாதிகள் அமைந்துள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. 'திரு’ என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை இன்று வழிபட்டு வருவது மிகுந்த சிறப்பாகும். இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவனை வழிபட்டு பிரார்த்தனை வேண்டுதல் வைத்தால், வேண்டுதல் வைப்பவர்களின் பிரார்த்தனை,வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். இன்றைய தினம் முழுவதும் முடிந்த வரை சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இன்றைய ஷடசீதி புண்ணிய நாளில் நாம் சிவபெருமானிடம் வேண்டுவது நிச்சயம் நிறைவேறும். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் பித்ருக்களின் ஆசியும் அருளும் நிச்சயம் கிடைக்கும். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #ஆனி #ஆனி மாதம் தொடக்கம்! #வெல்கம் ஆனி
9 likes
4 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 1 months ago AI indicator
*அனைத்து வளங்களை* *அருளும் ஆனி மாத* *சிறப்புகள்* தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமான ஆனி மாதம் தேவர்களின் 'மாலைக்காலம்' என்று போற்றப்படுகிறது. சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. ஆனி மாதம் இளவேனிற் காலம் எனப்படும். இந்த மாதத்தில் கடுங்கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசி நம்மை குளிர்விக்கும். ஆனி மாதத்தில்தான் தேவர்களைக் காப்பாற்ற திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் தேய்பிறை துவாதசியன்று வருகிறது. பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து மந்தார மலையைத் தாங்கி தேவர்கள் அமிர்தம் கடைந்தெடுக்க உதவிய அவதாரமே கூர்மாவதாரம். ஆன்மீக வழிபாட்டிற்கும், சிவபெருமானின் அபிஷேகத்திற்கும், இயற்கை சார்ந்த ஆன்மீக திருவிழாக்களுக்கும் இந்த ஆனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி மாதத்தின் முக்கிய சிறப்புகள் ஆனித் திருமஞ்சனம்: ஆனி மாதத்தின் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜ பெருமானுக்கு நடத்தப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த அபிஷேகம் மற்றும் ஆராதனை 'ஆனித் திருமஞ்சனம்' என்று அழைக்கப்படுகிறது. ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி மாத உத்திர நட்சத்திரன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. சிவபெருமானின் நடனக் காட்சியை தரிசிக்க இது மிக உகந்த நாளாகும். ஆனி மாதம் நடக்கும் நடராஜப் பெருமானின் ஆனித் திருமஞ்சன மகிமைகள்: ஆனித் திருமஞ்சனத்தின் போது ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். எல்லா சிவாலயங்களிலும் மாலை நேரத்தில் ஆனி மாத திருமஞ்சனம் நடைபெறும். வைணவத்தலங்களில் தலை சிறந்த ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். குருபூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பூர்ணிமா வருவதும் இந்த ஆனி மாதத்தில்தான். இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெற திருவருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும். பொதுவாக நிறைய கோவில்களின் கும்பாபிஷேகம் ஆனி மாதத்தில்தான் நடைபெறும். திருப்புகழை நமக்களித்த மகான் அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில்தான் பிறந்தார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிறது. 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அருமையான திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார். தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பரம் தலத்தில் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டற கலந்தார். இதையொட்டி சிதம்பரத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏகாதசிகள் அனைத்துமே விசேஷமானவை என்றாலும், ஆனிமாத தேய்பிறை ஏகாதசி 'யோகினி ஏகாதசி' என்ற பெயருடன் விஷ்ணு வழிபாட்டுக்கு சிறந்து விளங்குகிறது. அன்று தான் அழாகாபுரி மன்னனான குபேரன் ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு தன் நோயைப் போக்கிக்கொண்டான் என்று கூறப்படுகிறது. ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது. 'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள். காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த நிர்மலா ஏகாதசி விரதமிருக்கலாம். ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். பெருமாள் கோவில்களில் மூலவருக்குச் சாத்தப்படும் கவசங்களைக் களைந்து, வருடாந்திர தூய்மைப் பணிகளைச் செய்து சிறப்பு திருமஞ்சனம் செய்யும் வைபவம் (ஜேஷ்டாபிஷேகம்) இந்த ஆனி மாதத்தில்தான் நடைபெறுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும். பொதுவாகவே நிறைய கோவில்களில் ஆனி மாத பௌர்ணமியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம். திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்த வெளியில் கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகம் செய்வார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பக்தர் களுக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுவார்கள். இதேபோல திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோவிலிலும் ஸ்ரீ தாயுமானவர் சுவாமிக்கு வாழப்பழத்தார்கள் சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழவேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜை நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார். காரைக்கால் மாங்கனித் திருவிழா: உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் வரலாற்றோடு தொடர்புடைய மாங்கனித் திருவிழா இந்த ஆனி மாதத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி தெப்பத்திருவிழாவும் நடைபெறும். முக்கியமாக மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத்திருவிழா ஆனி பௌர்ணமி அன்று நடைபெறும். வராகி நவராத்திரி: ஆனி அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை நாட்களில் வராகி அம்மனை வழிபடுவதற்குரிய வராகி நவராத்திரி தொடங்குகிறது. சாவித்திரி விரதம்:  பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் ஆனி மாத பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்கின்றனர் ஆனி உத்திராடம் & கேட்டை: பெரியாழ்வார் மற்றும் அருணகிரிநாதர் போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் அவதரித்த மாதமாகவும் இது அறியப்படுகிறது. ஆன்மீக பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் விரதங்கள் மற்றும் வழிபாடுகள் மூலம் மன அமைதியும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 🚩🕉🪷🙏🏼 #ஆனி மாதம் தொடக்கம்! #ஆனி #வெல்கம் ஆனி #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #🙏ஆன்மீகம்
15 likes
12 shares