Makkal Mugam
541 views
1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 பேவர் பிளாக் அமைத்து தர மேயரிடம் தூத்துக்குடி பிரஸ் கிளப் கோரிக்கை தூத்துக்குடி, ஜூன். 03 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் சாலையில் பிரஸ் கிளப் பல ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஏராளமானோர் முழுநேரமாக பணியாற்றி வருகின்றனர். பிரஸ் கிளப் அருகில் உட்புறத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதன் உள்பகுதி தாழ்வாக உள்ளதால் மழை காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதாரகேடு உண்டாகி நோய்தொற்று' பரவும் சூழ்நிலை உள்ளது அதேபோல் முன் பகுதியில் மாநகராட்சி சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் உயரமாக உள்ளதால் மழைநீர் பிரஸ் கிளப் சுற்றுபுற பகுதியில் மழைநீர் தேங்குகிறது. எனவே அந்த பகுதி சகதிகளாக உள்ள நிலையில் உள்ளது. எனவே இந்த இடைப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பேவர்பிளாக் பதித்து பத்திரிகையாளர்களின் கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மேயர் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார் நிகழ்வில் கெளரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர் முத்துராமன், உறுப்பினர்கள் மாரிமுத்து, திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளர் ரவீந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.