ரவிசங்கர் ராஜா, ஆரணி
922 views
13 hours ago
AI indicator
காலை சிவசிந்தனை ==================== சிவானந்த பூமி =================== ஆனந்தக் களிப்பில் தாயுமானவர் அருளால் பாராது அறிவால் பார்த்தபோது விளையுஞ் சிவானந்த பூமி - அந்த வெட்ட வெளிநண்ணித் துட்ட இருளாங் களையைக் களைந்துபின் பார்த்தேன் - ஐயன் களையன்றி வேறொன்றுங் கண்டிலன் தோழி - சங்கர (பொ - ள்) தோழியே! மாறா இன்பம் விளையும் சிவப்பேரின்பப் பெருநிலம். அது திருச்சிற்றம்பலமென்னும் வெட்டவெளி; திருவருளால் அவ்வறிவுப் பெருவெளியினைப் பொருந்திப் பேரின்பம் விளைய வொட்டாது மறைத்து நிற்கும் கொடிய இருளாகிய களையைக் களைந்து நோக்கினேன். விழுமிய முழுமுதல்வனின் களையெனப்படும் திருஅழகினையல்லாமல் வேறொன்றுங் கண்டிலேன். களை - அழகு. நம் ஹ்ருதயத்தில் ப்ரகாசிக்கும் பஞ்சாக்ஷரம் ============================================ நம் ஹ்ருதயமாகிய வயல் வெளியில் பஞ்சாக்ஷரம் எனும்சிவக்ஞான விதையை அங்கு விதைத்து ,ச்ரத்தை என்னும் நீரைப்பாய்ச்சி ,மும்மலங்களால் ஏற்படும் (அக்ஞானம்) அறியாமை என்ற களைகளை நீக்கி தபஸ்என்ற வேலியை அமைத்து ( விபூதி,ருத்ராக்ஷ தரித்து பஞ்சாக்ஷரத்தை ஜபித்தல்) நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும். பஞ்சாக்ஷரம் நமது ஹ்ருதயத்தில் எப்போதும் நீங்காமல் சிவமாக ப்ரகாசிக்கும் அதனால் சிவகதி ஏற்படும் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்