꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
636 views
21 hours ago
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.ஜூன்.29 தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு தினம் இன்று. இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நல்ல தகுதியுடைய, நீதி, நேர்மையோடு பணிசெய்த எவரையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ இன்று நீதி, நேர்மை செத்துப்போய் விட்டது. வ.ஐ.சுப்ரமணியம் தன் பதவிகாலத்தில் எந்த அரசியல்வாதிகளையும் பல்கலைக்கழக வளாகத்தில் மூக்குநுழைக்க அனுமதிக்க வில்லை. மேலும் அவர் பணியிலிருந்த காலத்தில் தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை தன் மேஜையின் மீது வைத்திருந்தவர். தன் மரணத்திற்கு பின் தன் அஸ்தியை பல்கலைகழக வளாகத்தில் தூவவேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர். அப்படியென்றால் தான் பணிசெய்த பல்கலை கழகத்தின் மீது எவ்வளவு பெரிய அன்பும் ஈடுபாடும் இருந்ததை எத்தனைபேர் அறிந்திருப்பார்கள்? கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் குப்பம் என்கிற பகுதியில் "திராவிடியன் யூனிவேர்சிட்டி" என்கிற பெயரில் பல்கலைகழகத்தை உருவாக்கி, பிற்பாடு கேரள அரசிடமே ஒப்படைத்து விட்டார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற மனிதரை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?