Nethaji
536 views
5 days ago
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #👏Inspirational videos #🙏கோவில் #ஆன்மிகம் 28, 2026 *திருச்சிற்றம்பலம்* *திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறை - தேவாரம்* *திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி - பதிகம்* *பாடல்* : *மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்* *மணிமிழலை மேய மணாளர் போலும்* *கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும்* *கொடுகொட்டி தாளம் உடையார் போலும்* *செழுங் கயிலாயத்துஎம் செல்வர் போலும்* *தென்அதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்* *அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்* *அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.* - 6.009.10 *பொருள்* : *எப்போதும் மங்காத திருநீற்றை அணிந்த மார்பை உடையவர்.திருவீழிமிழலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் மணாளர். அழகிய குவளை மலர் மாலையை அணிந்த உமையம்மைக்குத் தலைவரானவர்.கொடுகொட்டி வாத்தியத்தின் தாளத்தை உடையவர்.வளமான திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் எம் தலைவரானவர். திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியவர். துன்பப்படுபவர்களின் ஐயங்களைத் தீர்த்து அருள்பவர். அவரே அழகிய திருமேனியைக் கொண்ட திருஆமாத்தூர் ஐயனார் ஆவார்.* *திருச்சிற்றம்பலம்* *அருள்தரும் அழகியநாயகியம்மை உடனாகிய அருள்மிகு ஆமாத்தீஸ்வரர் திருவடிகள் போற்றி! போற்றி!!*