#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் பழைய அரசு பள்ளியின் கதவை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு
கமுதி, ஜூலை1:
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தில், பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு பள்ளிக் கட்டிடத்தின் கதவு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம மக்கள் அளித்த புகாரின்படி, சங்கிலி மகன் சின்னதம்பி (எ) மாரிமுத்து என்பவர் மதுபோதையில் அரசு பொதுச் சொத்தான பழைய பள்ளிக் கட்டிடத்தின் கதவை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.