Makkal Mugam
463 views
17 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஈரோடு மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு, மே.15 ஈரோடு மாவட்டம், பவளத்தான் பாளையம், ஏஈடி பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை, பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதில் தனியார் பள்ளிகளில் செயல்படக்கூடிய வாகனங்களில் அரசின் விதிமுறைகளின்படி, வாகனங்களின் பிளாட்பாரமம், இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி கதவு, தீயணைப்பு கருவி, படிகட்டுகள், முதலுதவி பெட்டி, முதலுதவி உபகரணங்கள், வாகனத்தில் முன், பின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, மேலும், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் மேற்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆய்வுகளில் வாகனங்களில் புத்தகப்பை வைக்கும் தனி இடம், பள்ளியின் சின்னம் (எம்பலம்), காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண்கள், படிகட்டு உயரம், லாக்புக், ஜன்னல் கம்பிகள், ஓட்டுநர் கேபின், கதவுடன் இடதுபக்க வழி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, ஆகிய பகுதிகளில் உள்ள 100 பள்ளிகளைச்சேர்ந்த 1,096 வாகனங்களுக்கு வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. மேலும், ஒரு வாரத்திற்குள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வருகின்ற 19.05.2026 அன்று கோபி பகுதிகளில் உள்ள 60 பள்ளிகளைச்சேர்ந்த 463 வாகனங்களுக்கும், 20.05.2026 அன்று பவானி பகுதிகளில் உள்ள 35 பள்ளிகளைச்சேர்ந்த 358 வாகனங்களுக்கும் வருடாந்திர கூட்டாய்வு நடைபெறவுள்ளது. 1.10.2023 முதல் பதிவு செய்யப்படும் புதிய பள்ளி வாகனங்களில் AIS 135 (All India Standard) தரத்தின்படி தீயணைப்பு கருவி உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் வாகனத்தின் உள்பகுதியில் செயல்படக் கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய தரத்தின் படி பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட SML நிறுவனம் மற்றும் Force Motors நிறுவனங்களின் மாதிரி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிந்துஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. மான்விழி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.நடராஜன் (ஈரோடு), திருமதி.பூங்குழலி (பெருந்துறை), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.தனசேகர், திரு.முத்துசாமி, திருமதி.நித்யா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.