#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 அம்பாள் உடனுறை பெரியாண்டவர் திருக்கோயில்* திருக்கழுக்குன்றம் திருநிலை கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம்
*சிவபெருமான் மனித வடிவில் வந்ததால் அவர் காலடிகள் நேரடியாகப்பட்ட தலம் இது*
சிவபெருமான் மனித வடிவில் உலகை வலம் வந்தபோது, அவருடன் 21 சிவகணங்களும் எவர் கண்ணிலும் படாமல் மறைந்து சென்றன. அங்காள பரமேஸ்வரி சூலாயுதத்தை எறிந்தபோது, மண்ணில் மறைந்திருந்த சிவகணங்கள் மண்கட்டிகளாக தெறித்து விழுந்தன.
பின்னர் ஈசன் சுயவடிவை அடைந்ததும் அவையும் சிவகணங்களாக வெளிப்பட்டன. இதைக் குறிக்கும் வண்ணம் இங்கே 21 சிவகணங்களும் லிங்க வடிவில் உள்ளன. சிவனுடன் நந்தியும் மனித வடிவில் சென்றது.
எனவே இங்குள்ள நந்தி மனித உடலுடன் காணப்படுகிறது. இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தத் திருநீற்றைப் பூசி, உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும்; கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். பல சித்தர்களும் முனிவர்களும் கண்ணுக்குப் புலப்படாமல் இந்த சிவபெருமானை வணங்கிச் செல்கின்றனராம்.
லிங்க வடிவில் உள்ள 21 சிவகணங்கள் மூலவரான பெரியாண்டவரை தினமும் பூஜிப்பதாக ஐதீகம் உள்ளது. சிவபெருமான் மனித வடிவில் வந்ததால் அவர் காலடிகள் நேரடியாகப்பட்ட தலம் இது.
அசுரர்கள் தங்கள் தவ பலத்தால் பல்வேறு வரங்களைப் பெற்று, பின்னர் அனைவருக்கும் இன்னல்கள் விளைவிப்பது தொடர்கதையாகி வந்த நிலையில், அத்தகைய அரக்கர் கூட்டத்தை அழிக்க வேண்டிய சூழல் ஈசனுக்கு வந்தது.
அரக்கர்களின் வரத்தின் காரணமாக, ஈசன் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் வாழ்ந்தால்தான் அவர்களை அழிக்க முடியும் என்னும் நிலை இருந்தது. இறைவனின் திருவிளையாடலின்படி, அதன் காரணமாக சிவபெருமான் பூமியில் வந்தார். இதனால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன.
தேவர்கள் மனம் கலங்கினர். அவர்கள் அனைவரும் பார்வதி தேவியிடம் சென்று, ஈசனை ஆட்கொண்டு உலகை உய்விக்க வேண்டும் என்று வணங்கி நின்றனர். அதையேற்ற பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரியாக பூவுலகம் வந்து, சிவனைக் கண்டு , தன் சூலாயுதத்தை ஓரிடத்தில் வீசியெறிந்தாள். பூமியில் பதிந்த அந்த சூலாயுதத்திலிருந்து ஒளி தோன்ற, அங்கே சிவபெருமான் வந்து தன் பாதங்களை ஒரு நிலையாய்ப் பதித்து திருநிலையாய் நிற்க, அவரை பரமேஸ்வரி வணங்கினாள்.
அப்போது ஒரு நாழிகைப் பொழுது நிறைவுற, சிவபெருமான் மனித உருவம் நீங்கி தன்நிலை அடைந்தார். பெரிய மனிதராய் உலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிர் பெரியாண்டவர் என்னும் பெயரில் வழங்கப் பெறுவீர்கள் என்று உமாதேவி கூற, தேவர்கள் அனைவரும் பெரியாண்டவரே என்று சொல்லி ஈசனின் பாதங்களைப் பணிந்தனர்.
அங்கேயே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். இத்தகைய நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் திருநிலை.
இவ்வாலயத்தின் அருகிலுள்ள சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு, சிவபெருமானையும் அம்மனையும் தொடர்ந்து ஆறு வாரங்கள் வணங்கி வந்தால் நடக்காத காரியங்களும் நடைபெறும் என்கின்றனர்.
மகப்பேறு கிட்ட பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. பல்லாயிரம் பேர் இந்த சிவனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்கள் 21 மண் உருண்டைகளை சிவலிங்கத்தைச் சுற்றி வைத்து வணங்கிச் செல்கின்றனர். அனைவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றும் தெய்வங்களாக விளங்குகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநிலை கிராமம்