⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
1.1K views
9 days ago
*ஶ்ரீகந்த புராணம் ~~~~~~~~~~~~~~~~~* முருகப்பெருமானின் புகழ் பாடும் திருக்கோவில்கள்..... *பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாண ஸ்வாமி திருக்கோவில்.......1* ★திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட்டிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலும் பெரம்பலூருக்கு தெற்கே சுமார் 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது செட்டிகுளம். இந்த ஊரில் உள்ள மலையின் மீது அமைந்திருக்கிறது பால தண்டாயுதபாணி கோவில். பொதிகை மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் இத்தலத்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் வளையல் விற்கும் செட்டியாராக காட்சி தந்தார். அதனால் இத்தலத்திற்கு செட்டியார் குளம் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்திற்கு வடபழநிமலை என்ற பெயரும் உண்டு. ★திருச்சி உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் ஆட்சி செய்த காலம் அது! இந்த ஊரைச் சேர்ந்த வணிகன் ஒருவன், வடக்கு நோக்கி பயணப்பட்டான். வழியில், இருள் சூழத் துவங்கியது. அங்கே இருந்த கடம்ப வனம் ஒன்றில் தங்குவது என தீர்மானித்தவன், ஆலமரம் ஒன்றின் மீதேறி, கிளையில் படுத்துக் கொண்டான். ★நள்ளிரவு... திடீரென தீப்பிழம்பு போல் வெளிச்சம்; வெப்பத்திலும் ஒளியிலும் கண் திறந்து பார்த்தவன், சிலிர்த்துப் போனான். தேவர்களும் முனிவர் பெருமக்களும் சூழ... தீப்பிழம்பின் நடுவே அழகிய சிவலிங்கம் ஒன்று இருந்தது! விடிந்தும் விடியாததுமாக அரண்மனைக்கு ஓடி வந்து, பராந்தகச் சோழனிடம் தான் கண்ட காட்சியைத் தெரிவித்தான். இதைக் கேட்ட பராந்தகச் சோழனும் விருந்தாளியாக வந்திருந்த குலசேகர பாண்டியனும் பரவசமானார்கள்; பதட்டமும் குதூகலமும் சூழ, பரிவாரங்களுடன் கடம்ப வனத்துக்கு விரைந்தனர். சிவலிங்கத்தைத் தேடினர். எங்கே தேடியும் கண்ணில் தென்படவில்லை. ★அயர்ச்சியும் சோகமும் ஒன்றுசேரத் தவித்தனர். அப்போது, கையில் செங்கரும்பை ஏந்தியபடி, வயது முதிர்ந்த கிழவர் ஒருவர் அந்த வழியே வந்தார்; மன்னர்களிடம் சென்று, ‘சிவலிங்கத்தை தேடுறீங்களா? எங்கே இருக்குதுன்னு காட்டட்டுமா?’ என்று சொல்லியபடி நடந்தார். மன்னர்களும் படைவீரர்களும் முதியவரைப் பின்தொடர்ந்தனர்.விறுவிறுவென இளைஞனைப் போல் படுவேகமாக நடந்த முதியவர், சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் காட்டினார்; தகதகவென மின்னும் ஜோதியாக லிங்கத்தைக் கண்டு சிலிர்த்தனர்; வணங்கினர். நிறைந்த மனதுடன் முதியவருக்கு நன்றி சொல்லத் திரும்பினர். அவரைக் காணோம்! ★நாலாதிசையெங்கும் பார்வையை வீச... அருகில் இருந்த மலையில், அந்த முதியவர் நின்று கொண்டிருந்தார். அந்த நிமிடமே... அழகனாக, குமரனாக, தண்டாயுதபாணியாக திருக்காட்சி தந்தார்... கையில் முதியவர் வைத்திருந்த அதே செங்கரும்புடன்! தந்தை சிவனாரின் அருளும் மைந்தன் முருகப் பெருமானின் அருளும் ஒருசேரக் கிடைக்க, விருந்தினராக சோழ தேசத்துக்கு வந்திருந்த குலசேகர பாண்டியன், மலை அடிவாரத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலையும், மலை மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயமும் எழுப்பினான். ★பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம். இங்கே... ஊருக்குள் ஸ்ரீகாமாட்சியம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைந்திருக்க... மலையில் அழகுறக் காட்சி தருகிறது ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயம். பழநியைப் போல், தண்டாயுதபாணியாக, ஆனால் கையில் கரும்பு ஏந்தியபடி தரிசனம் தருகிறார் செட்டிகுளம் முருகப்பெருமான் ஓம் முருகா போற்றி போற்றி 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #🕉️கந்த சஷ்டி கவசம் #🌺 சஷ்டி விரதம் 🙏