♦️♦️வைகாசி விசாகம் ஸ்பெஷல் 1
************************************
🌹வேலுண்டு ...வினையில்லை...
*************************************
தம் முன் நின்ற அந்த இளைஞனை ஏறிட் டுப் பார்த்தார் தமது பங்களாவின் முன் தோட்டத்தில் அமர்ந்து இருந்த அந்த பெரு ஞ் செல்வந்தர்.
நின்றவனுக்கு வயது குறைவாக இருந்தா லும ஆள் பார்ப்பதற்கு ஒன்றும் திட காத்தி ர மானவனாகவோ அல்லது சுறுசுறுப்பா ன ஆளாகவோத் தெரியவில்லை.
அவன் பவ்யமாக ஒரு கடிதம் எடுத்து அவரிடம் கொடுத்தான்.அதை வாங்கிப் பார்த்தவர் முகம் உடனே பிரகாசமானது. அவருக்கு மிகவும் வேண்டியவர் அதாவது யாரால் அவர் இந்த உயர்ந்த நிலைக்கு வந்தாரோ அவர் எழுதிய கடிதம்.
அந்த இளைஞனுக்கு ஒரு நல்ல வேலை கொடு த்து நல்வழிப் படுத்த சொல்லி இரு ந்தது அந்தக் கடிதத்தில்.
"தம்பி..உன் பேரு...?"
"வெள்ளையன்ங்க.."
" என்ன வேலை செய்வ...?"
"எனக்கு எந்த வேலையும் தெரியாது அய்யா..."
"கார் ஒட்டுவியா..?"
" சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது அய்யா.."
"சரி எதுவும் கணக்கு வழக்கு பார்ப்பியா...?"
"அய்யா ... அந்த கணக்குக்கு பயந்துதான் எட்டாங் கிளாசுக்கு மேல நான் படிக்கல..."
" சரி சங்கீதம்...அல்லது ஓவியம் வரையறது... சிலம்பு ஆட்டம்..அப்படி ஏதாவது கலை பயிற்சி இருக்கா...?"
"அய்யய்ய.. அதைப்போய் யார் கத்துக்குவா...?"
"சரி தம்பி...போய்ட்டு போவுது...ஏதும் கெட்ட ப்பழக்கம் இருக்கா..?"
அவன் பேசாமல் தலையை மட்டும் மெதுவாக ஆட்டினான்.உண்டா அல்லது இல்லையா என்று தெளிவடைய முடியாத சைகை மொழி அது.
அந்தப் பெரியவர் அவனைப் பார்த்தார். அந்த கடிதத்தை ப்பார்த்தார். "நாளையில் இருந்து வேலைக்கு வா தோட்டம் தாண்டி இருக்கிற கோயில சுத்தம் பண்ற வேலை பாரு. உள்ளே போய் கணக்கப்பிள்ளை கிட்ட நான் சொன்ன தா சொல்லி ஆயிரம் ரூபா பணம் வங்கிட்டு ப்போ..." என்றார். ஒரு கும்பிடு போட்டுவிட்டு ப்போனான் அந்த இளைஞன்.
நம்ப முடியவில்லை , இல்லையா. ஆனால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். நாம் அனை வருமே அந்த இளைஞனைப் போன்றவர் தாம்.
நம்முடைய அறிவு , திறமை , ஒழுக்கம் , வீரம் , கலை அத்தனையும் நாம் நாமே வரையரை த்துக் கொண்டு இருக்கும் ஒரு எல்லையை வைத்துக் கொண்டு நம்மை நாமே எடை போட்டுக் கொள்கிறோம்.
இந்தபிரபஞ்சத்தில் ஒரு புள்ளிபோல இருக்கு ம் இந்த பூமிப்பந்தின் ஒரு ஜீவராசியான நாம் ஒவ்வொருவராய் தனியேப் போய் அந்தப் பரம்பொருள் முன் நின்று அது கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்லி விட முடியுமா.
🌹அருணகிரி நாதர் பழனிமலை திருப் புகழ் பாடலை சிந்திப்போம்.
திடம்இலி , சற்குணம் இலி , நல் திறம் இலி, அற்புதம் ஆன
செயல் இலி , மெய்த் தவம் இலி , நல் செபம் இலி சொர்க்கமும் ஈதே
இடம் இலி , கைக் கொடை இலி , சொற்கு இயல்பு இலி, நல் தமிழ்பாட,
இருபதம் உற்று இருவினை அற்று, இயல் கதியைப் பெறவேணும்.
கெடு மதி உற்றிடும் அசுரக் கிளை மடியப் பொரும்வேலா!
கிரண குறைப் பிறை,அறுகு, அக்கு, இதழ் மலர் கொக்கு இறகோடே,
படர்சடையில் புனை, நடனப் பரமர் தமக்கு ஒருபாலா!
பலவயலில் தரள நிறைப் பழநிமலைப் பெருமாளே.
அருணகிரிநாதர் பழனிமலை முருகனின் முன் நின்று விண்ணப்பிக்கிறார். அதற்கு முருகன் வரிசையாக கேள்விகள் கேட்க , இவரோ ...
1.திடம்இலி ,
2.சற்குணம் இலி ,
3.நல் திறம் இலி,
4.அற்புதம் ஆனசெயல் இலி ,
5.மெய்த் தவம் இலி ,
6.நல் செபம் இலி
7.சொர்க்கமும் ஈதே இடம் இலி ,
8.கைக் கொடை இலி ,
9.நல் தமிழ்பாட சொற்கு இயல்பு இலி,
இலி என்றால் இல்லை எனப்பொருள். கிட்டத் தட்ட அந்த இளைஞன் மாதிரி ஒன்பது கேள்வி களுக்கும் இல்லை. பலம் இல் லை , குணம் இல்லை, திறமை இல்லை, அற்புதம் இல்லை , தவம் தெரியாது, ஜெப மும் தெரியாது , வாரி வழங்கும் ஈகையும் கிடையாது , நன்றாகத் தமிழில பாடவும் தெரியாது..
இத்தனையும் தெரியாது இல்லை என்று சொல்லி விட்டு என்ன கேட்கிறார் பாருங்கள்.
"தேவரீருடைய இரண்டு சரணார விந்தங்க ளை அடைந்து, நல்வினை தீவினை என்கிற இரண்டையும் நீக்கி மீண்டும் பிறவா வரமான, முத்தி வீட்டைத் தந்தரு ளல் வேண்டும்."
பிறவா வரம் கேட்க தேவைப்படும் ஒன்ப தும் இல்லையாம்..ஆனால் ஒரே ஒரு கோரிக்கை. வீடுபேறு.கேட்டது யாரிடம் முருகனிடம். அவரி டம் ஒரு சிபாரிசு கடிதம் வேறு கொடுக்கிறார்.
அறுகம்புல்லையும் , உருத்திராக்க மணியி னையும், ஒளி பொருந்திய, இளம் பிறைச் சந்திரனையும், இதழ்களையுடைய மலர் களையும், பறவையின் இறகுகளுடன், விரிந் த சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பவரும் பஞ்சகிருத்ய ஆனந்தத் தாண்டவம் புரிபவரு ம் ஆகிய, சிவபெருமானின் அன்புப் புதல்வரே என முதலில் கூப்பிடு விட்டு அதாவது சிவத்தி ன் புகழ் கூறி அதை தம் முதல் சிபாரிசாக வைக்கிறார். பின்,
தீயவை செய்தற்கே தூண்டுகின்ற புத்தியை உடையவர்களாகிய, அரக்கர் வம்சமே அழியு மாறு,போர் புரிந்த வேற்படையை உடையவ ரே! இது இரண்டாவது சிபாரிசு , இறுதியாக ,
ஒப்பற்ற புலவரே! குறைபாடின்றி பலனை த் தரும் வயல்களில், முத்துக்கள் நிறைந்துள்ள பழநிமலையின் மீது எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
என தங்கத்தமிழில் சிவத்தையும் திருமுருக னையும் புகழ்ந்து தமக்கு வீடுபேறு கேட்கிறா ர் , அருணகிரிநாதர்.
அவருக்கா கேட்கிறார்? நமக்குத்தான். நாம் அனைவருமே நம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ள முடியும். நமது வினைகள் ஒழிய அவனை விட்டால் நமக்கு வேறு வழி ஏது..?
'பாழான என்மனங் குவிய ஒரு தந்திரம்
பண்ணுவது உனக்கு அருமையோ
பார்க் குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரி பூரண ஆனந்தமே.'
எனத் தாயுமானவர் பாடுவார். சிவம் நினைத் து விட்டால் நமது பாழான மனம் சிவத்தின் பால் சேர்ந்து விடச் செய்வதற்கு எத்தனை நொடிப் பொழுது ஆகும்..?
நம்மிடையே நிறைய குறைபாடுகள் இருக்கி றது. உண்மைதான். ஆனால் நம்மிடம் சிவத்தி ன் சிபாரிசு கடிதம் எனும் அருளாளர்கள் அரு ளிய திருமுறைகள் இருக்கி றது. அப்புறம் முருகன் எப்படி நமக்குத் தர மாட்டேன் என்று சொல்லி விடுவார்.?
முருகா சரணம்... ஷண்முகா சரணம்...
25.05.2026.. நேசமுடன் விஜயராகவன்..
#அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #✡️ராசிபலன் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ARCHANA EdITZ.