அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏
14K Posts • 4M views
ARCHANA 💙😻💃
3K views 27 days ago
🙏🌺🌺🌺 🙏🙏**தீர்க்க சுமங்கலி ஆக வாழ மந்திரம் **🙏🌺🌺🌺 🙏🙏 🙏🌺🌺🌺 🙏🙏பெண்கள் தீர்க்கசுமங்கலி யோகம் பெற 🙏🌺🌺🌺 🙏🙏 🙏🌺🌺🌺 🙏🙏தீர்க்கசுமங்கலி மந்திரம் திங்கட்கிழமைகளில் இந்த வழிபாடு செய்ய வேண்டும்🙏🌺🌺🌺 🙏🙏 🙏🌺🌺🌺 🙏🙏**தீர்க்க சுமங்கலி ஆக வாழ மந்திரம் **🙏🌺🌺🌺 🙏🙏 ஓங்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி வேதாம்பிகே நமஸ்துப்யம் அவதவ்யம் ப்ரயச்சமே|| பதிவ்ரதே மஹாபாகே பர்த்துச்ச பிரியவாதிநீ| அவதவ்யம் ச சௌபாகியம் சௌமாங்கல்யம் ச தேஹிமே || தினமும் ஒன்பது முறை ஜபிக்க தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் . ஜாதக பார்க்காமல் ,ஜாதக தோஷம் தெரியாமல்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் உள்ளவர்கள் ஜபிக்க சௌமாங்கல்ய தோடு வாழ்வாள் . பெண்கள் தீர்க்க சுமங்கலி யோகம் பெற விரதங்கள், தானங்கள், குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடுதல், மற்றும் சடங்குகளைப் பின்பற்றுதல் போன்ற ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாச்சியார், விருத்தாசலம் விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபடுவது, காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொள்வது, மற்றும் பெண்கள் தலையில் பூ சூடி இருப்பது ஆகியவை சுமங்கலி யோகத்தைப் பெற உதவும். வழிபாட்டு முறைகள் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாச்சியார் வழிபாடு: ஒவ்வொரு வருடமும் கணவனுடன் சேர்ந்து ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க நாச்சியாரை வழிபடுவது மாங்கல்ய தோஷங்களைப் போக்கி, சுமங்கலி யோகத்தை அளிக்கும். விருத்தாசலம் விருத்தாம்பாள் வழிபாடு: விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் தீர்க்க சுமங்கலி யோகம் பெற சிறந்த பரிகார ஸ்தலமாகும். காரடையான் நோன்பு: திருமணம் ஆகாத பெண்களுக்கு மனம் மற்றும் கணவன் நீண்ட ஆயுள் பெற காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொள்ளலாம். பிற ஆன்மீக வழிமுறைகள் தலையில் பூ சூடுதல்: பெண்கள் தினமும் தலையில் பூ வைத்துக்கொள்வது தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்க உதவும். விரதங்கள் மற்றும் தானங்கள்: வரலட்சுமி விரதம் போன்ற விரதங்களை மேற்கொள்வதன் மூலமும், தானங்களைச் செய்வதன் மூலமும் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம். கணவன் - மனைவி ஒற்றுமை: சுமங்கலி யோகம் பெற கணவன் மனைவி ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ்வது அவசியம். பொதுவான குறிப்புகள் இந்த பரிகாரங்கள் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையிலானவை, மற்றும் இவற்றின் பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். 🌺🌺🌺 🙏🙏படம் உதவி அன்பர் கோவை திரு சத்தியநாராயணன் அவர்களுக்கு நன்றிகள் 🌺🌺🌺 🙏🙏 பெண்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெற செய்ய வேண்டிய வழிபாடு: இந்த வழிபாடை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வழிபாட்டை செய்யவில்லை என்றாலும் சரி, உங்களுடைய வீட்டில் சிவபெருமான் அன்னை பார்வதிதேவியுடன் இருக்க வேண்டும். இது குடும்ப ஒற்றுமைக்கு, கணவன் மனைவி ஒற்றுமைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த திருவுருவப்படம் இல்லை என்றால் முதலில் வாங்கி வைத்து விடுங்கள். திங்கட்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 27 திங்கட்கிழமை சிவபெருமான் அன்னை பார்வதிதேவிபாதங்களில் ஒரு மஞ்சள் கயிறை வைத்து விட்டு, குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி, மனப்பூர்வமாக கணவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு இரண்டு கற்கண்டு நெய்வேதியம் ஆக வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். குங்குமத்தை நெற்றியிலும் மாங்கல்யத்திலும் இட்டுக் கொள்ளுங்கள். ஒரு திங்கட்கிழமை இந்த வழிபாடு முடிந்தவுடன் அந்த மஞ்சள் கயிறை எடுத்து டப்பாவில் போட்டு சேகரிக்கவும். இதே போல 27 திங்கட்கிழமைகள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இடையே மாதவிடாய் நாட்கள் வரும்போது பூஜை செய்ய வேண்டாம். அதை தவிர்த்து விட்டு அடுத்த பூஜையை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக 27 வாரம் திங்கட்கிழமை பூஜை முடிந்திருக்கும். 27 மஞ்சள் கயிறு சேர்ந்திருக்கும் அல்லவா. இந்த திருமாங்கல்யகயிறு கொண்டு போய் கோவிலில் நின்று அந்த கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பூ, பழம், மஞ்சள் குங்குமம், கூடவே இந்த திருமாங்கல்யகயிறையும் வைத்து தானம் கொடுத்து விட்டால் மாங்கல்ய தோஷம் நீங்கும். உங்களுக்கு மாங்கல்யம் தோஷம் இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்தால், கணவரின் ஆயுள் நீடிக்கும். நீங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். ஒரு பெண்ணிற்க்கு கணவன் கண் போன்றவன் என்பர். அப்படியாக ஒரு பெண் தான் தீர்க்கசுமங்கலியாக இருக்கவேண்டும் என்று தினம் கணவனை நினைத்து இறைவனை பிராத்தனை செய்வதுண்டு. சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram மேலும் பெண்கள் தான் சாவித்திரி போல் மனஉறுதியோடு வாழ வேண்டும் என்று எண்ணுவதுண்டு. அதாவது உயிர் பிரிந்த தன் கணவனை அழைத்து செல்ல எமதூதர்கள் வந்த போதிலும் தன் அன்பு கணவனை விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்க அவர்களால் சாவித்திரியை நெருங்கமுடியாமல், எமனே நேரில் வந்து சாவித்திரியிடம் உயிர் பிரிவது இயல்பு என சொல்லி சத்யவானை அழைத்து சென்ற போதிலும் விடாது, கணவனை பிரிய மனம் இல்லாத சாவித்திரி எமனை பின் தொடர்ந்து சென்று , என் ஆசை கணவனை இப்படி பிரித்து கூட்டி செல்கின்றீர்களே நியாயமா ? இந்த பிரபஞ்சம் இதற்கு கருணை காட்டக்கூடாதா ? சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram எமதர்மராஜனே, ஒரு ஆசை மனைவியின் பிடிவாத வேண்டுதலுக்கும், கணவனின் மீது கொண்ட பக்திக்கும் மனம் இறங்க கூடாதா என்று வேண்ட எமதர்மராஜாவும் சாவித்திரியின் பக்தியை பார்த்து சத்யவானுக்கு மீண்டும் உயிர் கொடுத்த சம்பவம் அனைத்து பெண்களுமே அறிந்திருப்பர். சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram இப்படி பக்தியாக பிடிவாதமாக உண்மை அன்பு வைக்க எமனும் எவரும் நம்மை நெருங்க அஞ்சுவார்கள் என்பதற்க்கு இவர்கள் சாட்சி, அப்படியாக சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும். ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே. பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி அவைதவ்யம் ஸௌபாக்யம் தேஹித்வம் மம ஸுவ்ருதே புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம் ஸௌமங்கல்யம் ச தேஹிமே. இந்த மந்திரத்தின் ,தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் இவைகளை தரித்துக் கொண்டிருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரீ எனும் ஸாவித்ரி தேவீ. தங்களுக்கு நமஸ்காரம். கணவனை விட்டுப் பிரியாதிருத்தல் எனும் தீர்க்க சுமங்கலி வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும் பதிவ்ரதையும் மிகுந்த பாக்யசாலியும், பர்தாவிற்குப் பிரியமான சொல் சொல்கிறவளும், பக்தர்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி! என்னை விதவை ஆகாதவளாகச் செய்ய வேண்டும். சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை காரடையான் நோன்பன்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வர தீர்க்கசுமங்கலி பலனும் வரமும் கிடைக்கும். 🌺🌺🌺 🙏🙏🙏🌺🌺🌺 🙏🙏 #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #✡️ராசிபலன் #ARCHANA EdITZ.
77 likes
10 comments 21 shares
ARCHANA 💙😻💃
62K views 1 months ago
🚩நல்லதை படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்🚩 வாழ்க்கையின் ஆறு தத்துவங்கள்... முதலில் நம்பு... பிறகு ஆண்டவனிடம் வேண்டு முதலில் பேசுவதை கேள்... பிறகு பேசு முதலில் சம்பாதி... பிறகு செலவு செய் முதலில் யோசி..பிறகு எழுது முடியாது என விடுவதற்கு முன்பு... முயற்சி செய் சாவதற்கு முன்பு... வாழ்க்கை வாழ்ந்து பார். சில கேள்விகளுக்கு, நாம் என்ன தான் சிந்தித்தாலும் அதற்கான விடையை முழுமையாக ‘தெரிந்து’ கொள்ள முடியாது. ஆனால், ஆனால் அந்த கேள்விகளுக்கான விடையை ‘புரிந்து’ கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு தான், இந்த பதிவின் மூலம் பதிலை, புரிந்து கொள்ளப் போகின்றோம். ‘இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்! நல்லதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, எதற்காக கெட்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’? என்றாவது இந்த கேள்வியை நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? இன்றைக்கு கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமா? ஒரு சிறிய கதையோடு! பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துதான் இருக்கிறது...!!! சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெல்ல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது... சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும் போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் நம்மையும் ஒட்டிக் கொள்கிறது. குருவிடம் ஒரு மாணவன், இதே கேள்வியை கேட்டான்! அதற்கு, அந்த குரு என்ன விளக்கம் அளித்தார்? என்பதை நாம் தெரிந்து கொண்டால், தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? அந்த குரு, சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார். சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு தட்டில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு, பின்வருமாறு விளக்கம் அளித்தார். ‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’ பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம். சாணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம். இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார். இறைவன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது. புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றோம். இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது. அனைவரும் சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் . #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #✨பிரதோஷம்🕉️ #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #✡️ராசிபலன்
738 likes
4 comments 1086 shares
ARCHANA 💙😻💃
1K views 10 days ago
குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். மூலவர் - பிரசன்ன வெங்கடாஜலபதி உற்சவர் - ஸ்ரீனிவாசர் தீர்த்தம் - காவிரி, பாபவிநாசம் ஆகமம்/பூஜை - வைகானஸம் புராண பெயர் - பத்மசக்கரபட்டணம் இந்தக் கோவிலில் உள்ள பெருமாள், தரைதளம் விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். கோவிலின் அருகில் காவிரி நதியும் எதிர்ப்பக்கத்தில் பாபவிநாச அருவியும் உள்ளது. இந்த கோவிலில் தாயார் சன்னிதி கிடையாது. உற்சவரான ஸ்ரீநிவாசப்பெருமாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றார். புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் சுவாமி, குணசீலருக்கு காட்சியளித்த வைபவம் நடக்கும்... மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது. தல வரலாறு குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசிலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசிலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது. ஞானவர்மன் என்ற பெயர் கொண்ட மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான். மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது. குணசீல மகரிஷிக்கு முன்பாக திருப்பதி இறைவன் தோன்றினார் என்பதால், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் குணசேலனைப் பார்வையிட முடியுமென்று நம்புகிறார்கள். கோவில் அமைப்பு கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார். கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். திருவிழா: சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி. பிரம்மோற்ஸவத்தின் முக்கியத் திருவிழா, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் – அக்டோபர்) 11 நாட்களுக்கு ஒன்பது நாள் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு. பலன்கள் உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜர் சீடர் சுருதிதேவனும், பகுவிராஜ மன்னன் கால் பாதிக்கப்பட்ட போதும் இந்தக் கோவிலுக்கு வந்து குணம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், வாய்பேச முடியாத நிலையில் இந்த கோவிலுக்கு வந்து பேசும் சக்தியைப் பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தரிசன நேரம்: காலை 6.30AM – 12.30PM மாலை 4.00PM – 8.30PM கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யப்படுகின்றன; விஸ்வரூபம் – 6:30am. காலசந்தி – 8:30am. உச்சிகாலம் – 12:30pm. திருமல்வடை – 5:30pm. சாயரக் ஷை – 6:30pm. அர்த்தஜாமம் – 8:30pm. ஒவ்வொரு சடங்குகளும் நான்கு படிகள் உள்ளன – அபிஷேக (புனிதமான) குளியல், அலங்காரம், நெய்வேத்யம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை. முகவரி: அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில், குணசீலம் 621 204, திருச்சி மாவட்டம். #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #✡️ராசிபலன் #🙏ஆன்மீகம் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
11 likes
8 shares