ARCHANA 💙😻💃
3K views • 27 days ago
🙏🌺🌺🌺 🙏🙏**தீர்க்க சுமங்கலி ஆக வாழ மந்திரம் **🙏🌺🌺🌺 🙏🙏
🙏🌺🌺🌺 🙏🙏பெண்கள் தீர்க்கசுமங்கலி யோகம் பெற 🙏🌺🌺🌺 🙏🙏
🙏🌺🌺🌺 🙏🙏தீர்க்கசுமங்கலி மந்திரம் திங்கட்கிழமைகளில் இந்த வழிபாடு செய்ய வேண்டும்🙏🌺🌺🌺 🙏🙏
🙏🌺🌺🌺 🙏🙏**தீர்க்க சுமங்கலி ஆக வாழ மந்திரம் **🙏🌺🌺🌺 🙏🙏
ஓங்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி
வேதாம்பிகே நமஸ்துப்யம் அவதவ்யம் ப்ரயச்சமே||
பதிவ்ரதே மஹாபாகே பர்த்துச்ச பிரியவாதிநீ|
அவதவ்யம் ச சௌபாகியம் சௌமாங்கல்யம் ச தேஹிமே ||
தினமும் ஒன்பது முறை ஜபிக்க தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் .
ஜாதக பார்க்காமல் ,ஜாதக தோஷம் தெரியாமல்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் உள்ளவர்கள் ஜபிக்க சௌமாங்கல்ய தோடு வாழ்வாள் .
பெண்கள் தீர்க்க சுமங்கலி யோகம் பெற விரதங்கள், தானங்கள், குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடுதல், மற்றும் சடங்குகளைப் பின்பற்றுதல் போன்ற ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாச்சியார், விருத்தாசலம் விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபடுவது, காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொள்வது, மற்றும் பெண்கள் தலையில் பூ சூடி இருப்பது ஆகியவை சுமங்கலி யோகத்தைப் பெற உதவும்.
வழிபாட்டு முறைகள்
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாச்சியார் வழிபாடு:
ஒவ்வொரு வருடமும் கணவனுடன் சேர்ந்து ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க நாச்சியாரை வழிபடுவது மாங்கல்ய தோஷங்களைப் போக்கி, சுமங்கலி யோகத்தை அளிக்கும்.
விருத்தாசலம் விருத்தாம்பாள் வழிபாடு:
விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் தீர்க்க சுமங்கலி யோகம் பெற சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
காரடையான் நோன்பு:
திருமணம் ஆகாத பெண்களுக்கு மனம் மற்றும் கணவன் நீண்ட ஆயுள் பெற காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொள்ளலாம்.
பிற ஆன்மீக வழிமுறைகள்
தலையில் பூ சூடுதல்:
பெண்கள் தினமும் தலையில் பூ வைத்துக்கொள்வது தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்க உதவும்.
விரதங்கள் மற்றும் தானங்கள்:
வரலட்சுமி விரதம் போன்ற விரதங்களை மேற்கொள்வதன் மூலமும், தானங்களைச் செய்வதன் மூலமும் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம்.
கணவன் - மனைவி ஒற்றுமை:
சுமங்கலி யோகம் பெற கணவன் மனைவி ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ்வது அவசியம்.
பொதுவான குறிப்புகள்
இந்த பரிகாரங்கள் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையிலானவை, மற்றும் இவற்றின் பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம்.
🌺🌺🌺 🙏🙏படம் உதவி அன்பர் கோவை திரு சத்தியநாராயணன் அவர்களுக்கு நன்றிகள் 🌺🌺🌺 🙏🙏
பெண்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெற செய்ய வேண்டிய வழிபாடு:
இந்த வழிபாடை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வழிபாட்டை செய்யவில்லை என்றாலும் சரி, உங்களுடைய வீட்டில் சிவபெருமான் அன்னை பார்வதிதேவியுடன் இருக்க வேண்டும். இது குடும்ப ஒற்றுமைக்கு, கணவன் மனைவி ஒற்றுமைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த திருவுருவப்படம் இல்லை என்றால் முதலில் வாங்கி வைத்து விடுங்கள்.
திங்கட்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 27 திங்கட்கிழமை சிவபெருமான் அன்னை பார்வதிதேவிபாதங்களில் ஒரு மஞ்சள் கயிறை வைத்து விட்டு, குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி, மனப்பூர்வமாக கணவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு இரண்டு கற்கண்டு நெய்வேதியம் ஆக வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். குங்குமத்தை நெற்றியிலும் மாங்கல்யத்திலும் இட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு திங்கட்கிழமை இந்த வழிபாடு முடிந்தவுடன் அந்த மஞ்சள் கயிறை எடுத்து டப்பாவில் போட்டு சேகரிக்கவும். இதே போல 27 திங்கட்கிழமைகள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இடையே மாதவிடாய் நாட்கள் வரும்போது பூஜை செய்ய வேண்டாம். அதை தவிர்த்து விட்டு அடுத்த பூஜையை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக 27 வாரம் திங்கட்கிழமை பூஜை முடிந்திருக்கும். 27 மஞ்சள் கயிறு சேர்ந்திருக்கும் அல்லவா.
இந்த திருமாங்கல்யகயிறு கொண்டு போய் கோவிலில் நின்று அந்த கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பூ, பழம், மஞ்சள் குங்குமம், கூடவே இந்த திருமாங்கல்யகயிறையும் வைத்து தானம் கொடுத்து விட்டால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.
உங்களுக்கு மாங்கல்யம் தோஷம் இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்தால், கணவரின் ஆயுள் நீடிக்கும். நீங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
ஒரு பெண்ணிற்க்கு கணவன் கண் போன்றவன் என்பர். அப்படியாக ஒரு பெண் தான் தீர்க்கசுமங்கலியாக இருக்கவேண்டும் என்று தினம் கணவனை நினைத்து இறைவனை பிராத்தனை செய்வதுண்டு.
சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram
மேலும் பெண்கள் தான் சாவித்திரி போல் மனஉறுதியோடு வாழ வேண்டும் என்று எண்ணுவதுண்டு.
அதாவது உயிர் பிரிந்த தன் கணவனை அழைத்து செல்ல எமதூதர்கள் வந்த போதிலும் தன் அன்பு கணவனை விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்க அவர்களால் சாவித்திரியை நெருங்கமுடியாமல்,
எமனே நேரில் வந்து சாவித்திரியிடம் உயிர் பிரிவது இயல்பு என சொல்லி சத்யவானை அழைத்து சென்ற போதிலும் விடாது, கணவனை பிரிய மனம் இல்லாத சாவித்திரி எமனை பின் தொடர்ந்து சென்று ,
என் ஆசை கணவனை இப்படி பிரித்து கூட்டி செல்கின்றீர்களே நியாயமா ?
இந்த பிரபஞ்சம் இதற்கு கருணை காட்டக்கூடாதா ?
சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram
எமதர்மராஜனே, ஒரு ஆசை மனைவியின் பிடிவாத வேண்டுதலுக்கும், கணவனின் மீது கொண்ட பக்திக்கும் மனம் இறங்க கூடாதா என்று வேண்ட எமதர்மராஜாவும் சாவித்திரியின் பக்தியை பார்த்து சத்யவானுக்கு மீண்டும் உயிர் கொடுத்த சம்பவம் அனைத்து பெண்களுமே அறிந்திருப்பர்.
சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram
இப்படி பக்தியாக பிடிவாதமாக உண்மை அன்பு வைக்க எமனும் எவரும் நம்மை நெருங்க அஞ்சுவார்கள் என்பதற்க்கு இவர்கள் சாட்சி,
அப்படியாக சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும்.
ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
அவைதவ்யம் ஸௌபாக்யம்
தேஹித்வம் மம ஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே.
இந்த மந்திரத்தின் ,தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் இவைகளை தரித்துக் கொண்டிருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரீ எனும் ஸாவித்ரி தேவீ.
தங்களுக்கு நமஸ்காரம். கணவனை விட்டுப் பிரியாதிருத்தல் எனும் தீர்க்க சுமங்கலி வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும் பதிவ்ரதையும் மிகுந்த பாக்யசாலியும், பர்தாவிற்குப் பிரியமான சொல் சொல்கிறவளும், பக்தர்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி!
என்னை விதவை ஆகாதவளாகச் செய்ய வேண்டும். சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை காரடையான் நோன்பன்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வர தீர்க்கசுமங்கலி பலனும் வரமும் கிடைக்கும்.
🌺🌺🌺 🙏🙏🙏🌺🌺🌺 🙏🙏 #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #✡️ராசிபலன் #ARCHANA EdITZ.
77 likes
10 comments • 21 shares