🙏🌹திருச்சிற்றம்பலம்🌹🙏
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் அருளிய பிரார்தனைப் பத்தில், இறைவன் மீது கொண்டுள்ள மிக்க அன்பை வெளிப்படுத்தும் பாடல் இது.
உண்மையான அடியார்கள் கூட்டத்தில் இணைந்து, அணைத்து ஏனைய பற்றுகள் இன்றி, உன்பால் பேரன்பு கொண்டு, உன்னை எப்போதும் நினைந்து உருகும் நிலையே, உன்னை அடைய சிறந்த வழி என மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டுகிறார்.
🌺🌺🌺🌿🌿🌿🌺🌺🌺🌿🌿🌿🌺🌺🌺🌿🌿🌿
பாடல்-6
அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும்;
புறமே கிடந்து, புலை நாயேன் புலம்புகின்றேன்; உடையானே!
பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியா, பிரிவு இல்லா,
மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே!
விளக்கம்
🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌺🌺🌺🌺
⚛️அறவே பெற்றார், நின் அன்பர்:
உன்னுடைய மெய்யன்பர்கள், உன்னை முழுமையாக (அறவே) அடைந்துவிட்டார்கள்
⚛️அந்தம் இன்றி, அகம் நெகவும்:
அவர்கள் எல்லையற்ற பேரின்பத்தில் திளைத்து, உள்ளம் உருகி உன்னோடு ஒன்றிவிட்டார்கள்
⚛️புறமே கிடந்து, புலை நாயேன் புலம்புகின்றேன்:
ஆனால், கீழ்மையான நாயைப் போன்ற நான், உன்னை அடையாமல் வெளியே நின்று அழுது புலம்பிக் கொண்டிருக்கிறேன் .
⚛️உடையானே!:
என்னைத் அடிமையாகக் கொண்ட இறைவனே!
⚛️பெறவே வேண்டும், மெய் அன்பு:
நானும் அந்த உண்மையான பக்தியைப் பெற வேண்டும் .
⚛️மாளா, இன்ப மா கடலே!:
அழியாத இன்பக் கடலாக இருப்பவனே! அந்த அன்பு எப்படிப்பட்டது தெரியுமா?
⚛️பேரா:
உன்னை விட்டு நீங்காதது.
⚛️ஒழியா:
ஒருபோதும் குறைந்து போகாதது.
⚛️பிரிவு இல்லா:
உன்னிடமிருந்து பிரியாதது.
⚛️மறவா, நினையா:
மறதி என்பதும் கிடையாது, வேண்டுமென்றே நினைப்பதும் கிடையாது (அதாவது, மூச்சுக் காற்று போல இயல்பாகவே உன்னுடன் கலந்திருப்பது).
⚛️அளவு இலா:
எல்லைகளற்றது .
பொருள்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
"இறைவா! உன் அன்பர்கள் உன் திருவடி இன்பத்தில் திளைக்கிறார்கள். ஆனால் பாவியாகிய நான் இன்னும் வெளியே நின்று புலம்புகிறேன். அழியாத இன்பக் கடலே! உன்னை விட்டு நீங்காத, எப்போதும் மறக்காத அந்தப் பேரன்பை எனக்குத் தந்தருள வேண்டும்" என்று மாணிக்கவாசகர் வேண்டுகிறார்.
(இதனால், இறைவன் இன்பத்தின் நிலை கூறப்பட்டது.)
🙏🌹திருச்சிற்றம்பலம்🌹🙏
ஹர ஹர மஹாதேவா.....
ஓம் நமசிவாய ...
ஓம் நமசிவாய .....
ஓம் நமசிவாய .....
🕉🙏🙏🌿🌿🌹🌹🌹🌹🌹🌿🌿🙏🙏🕉
#ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏