SHEIK 🌺KSN🌺
9.2K views
1 months ago
உஹத் போருக்குப் பிறகு, முஸ்லிம்கள் காயங்களுடன் மதீனா திரும்பினார்கள். அப்போது அபூ ஸுஃப்யான் தலைமையிலான மக்கா காஃபிர்கள் மீண்டும் படையெடுத்து வருவதாக வதந்தி பரவியது. மக்களை பயமுறுத்தி, "மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டுள்ளனர், அவர்களை அஞ்சுங்கள்" என்று சிலர் கூறினார்கள். அப்போது நபி ஸல் அவர்களும், ஸஹாபாக்களும் பயப்படவில்லை. மாறாக அவர்களின் ஈமான் அதிகரித்தது. அவர்கள் கூறினார்கள்: "ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்"- "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" "அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், மேன்மையுடனும் திரும்பினார்கள். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை" [அல்குர்ஆன்3:174] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️