ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden Copper Plates) என்பவை முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகளாகும். நாகப்பட்டினம் அருகே உள்ள ஆனைமங்கலம் கிராமத்தை, கடார (மலேசியா/இந்தோனேசியா) மன்னன் ஸ்ரீமாற விஜயதுங்கவர்மன் கட்டிய புத்த விகாரத்திற்குத் தானமாக வழங்கியதை இவை பதிவு செய்கின்றன.
இந்தச் செப்பேடுகள் மொத்தம் 21 தகடுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மொத்த எடை சுமார் 30 கிலோ ஆகும்.
இச்செப்பேடுகளின் தொடக்கப் பகுதிகள் சமஸ்கிருதத்திலும், பெரும்பான்மையான நிர்வாக மற்றும் தான விவரங்கள் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சோழர்களின் கடல் கடந்த வணிக ஆதிக்கம், பௌத்த மதத்தின் மீதான சோழர்களின் மத சகிப்புத்தன்மை மற்றும் விரிவான நிர்வாகக் கட்டமைப்புகளை இந்தச் செப்பேடுகள் வெளிப்படுத்துகின்றன .
நீண்ட காலமாக நெதர்லாந்தில் (Leiden மியூசியம்) பாதுகாக்கப்பட்ட இச்செப்பேடுகள், வரலாற்றுத் தூதரக முயற்சிகளின் பலனாக இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டு தாயகம் திரும்புகின்றன.
#🤔தெரிந்து கொள்வோம்