வேல்மணி குமரா
2.5K views
5 days ago
**** முன் செய்த தீவினைகள் **** இது ஒரு இரட்டை கதை சம்பவம். இரண்டு வேறு கதைகள் ஆனால் கதையின் இறுதியில் இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சங்கமிக்கும். வாருங்கள் கதையை அறிய தொடங்கலாம் … ********** கதை ஒன்று ********** ஒரு குளக்கரையில் ஓர் அந்தணர் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்து கொண்டிருந்தார். ஒரு புலையன் பசுவை வெட்டும் பொருட்டுக் கத்தியைக் தீட்டிக் கொண்டிருந்தான். அப்பசு நம்மைக் கொல்லும் பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு குளக்கரை வழியே ஓடியது.பசு ஓடுவதை குளக்கரையில் காயத்ரி மந்திரம் ஜபிக்கும் அந்தணர் கண்டார். அந்த புலையன் பசுவைத் தேடிக் கொண்டு மூச்சி திணற குளக்கரை வந்தான்.மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அந்தணரை பார்த்து… “வணக்கம் சாமி இந்த பக்கம் ஏதாவது பசு ஓடுச்சா?” என்று மூச்சிறைக்க கேட்டான் புலையன். ஜபத்தில் ஆழ்ந்து இருந்த அந்தணர் இரு கரம் கரங்களையும் நீட்டி பசு ஓடிய திசையை காட்டினார். அவர் காட்டிய திசையை சென்று புலையன் தான் தீட்டிய கத்தி கொண்டு பசுவை கொலை செய்துவிட்டான். இதை நினைவில் கொள்ளவும் இரண்டாவது கதையை காணலாம்… ********* கதை இரண்டு ********* வட நாட்டில் சச்சன சாருகர் என்பவர் இருந்தார். சாருகர் என்ற குலத்தில் பிறந்த இவர், உயர்ந்த குணங்களை உடையவராகவும் மன்மதனை விட அழகு உடையவராக விளங்கினார். பெண்களை தாயாக மதித்தார். அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்து வந்தார். “பண்டரிநாதா! பண்டரிநாதா” என்று எப்போதும் கூறுவார். கரதாளம் இட்டு ‘விட்டல் விட்டல் ஜெய் ஜெய் விட்டல்” என்று தினமும் பஜனை செய்வார். பண்டரிபுரம் பூலோக வைகுந்தம் என்று கூறலாம்; அந்த அளவிற்கு சேத்திரத்தில் சதா தம்பூராவின் நாமும் முழக்கிக் கொண்டிருக்கும். பக்த ஜனங்கள் மொத்தம் முதலிய வாத்தியங்களை ஒலித்து ஆடியும் பாடியும் பரவசமடைவார்கள். பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாது. பண்டரி நாதனும் பக்தர்கள் வேண்டுவதை அளித்தார். சச்சன சாருகருக்குப் பண்டரி நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது. ஒரு இனிய நாளில் பண்டரி நாதனை தரிசிக்க பண்டரிபுரம் கிளம்பினார் சச்சன சாருகர். ரயில் பஸ் இல்லாத அந்த காலத்தில் நடந்து பஜனை பாடி உணவு பிச்சை எடுத்து உண்டு இரவு சத்திரம் தங்கி மறுநாள் மீண்டும் யாத்திரை துவங்குவார் சச்சன சாருகர்.இப்படி நிகழும் காலத்தில் இரவு ஒரு நகரத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பண்டரி நாதன் மந்திரம் உச்சரித்து கொண்டிருந்தார் சச்சன சாருகர். சச்சன சாருகர் அமர்திருக்கும் வீட்டில் கணவர்,மனைவி என இருவர் இருந்தனர். கணவன் தினமும் மனைவியை அடித்து சித்திரவதை செய்தான். மனைவியும் வாழ விருப்பம் இன்றி பொருமையுடன் வாழ்க்கை நடத்தி வந்தாள். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வீட்டு திண்ணையில் சச்சன சாருகர் அமர்ந்து பண்டரி நாதன் மந்திரம் கூறிக்கொண்டு இருந்தார். வெளியில் யார் இருப்பது என காண வீட்டில் இருந்து வெளிவந்தாள் மனைவி. சச்சன சாருகரை கண்டாள்; அவர் அழகில் மயங்கிய அவள் “தாங்கள் பார்க்க பூலோக மன்மதன் போல் காட்சி தருகின்றீர் தாங்கள் யார்” என்று கேட்டாள். “அம்மா நான் யாத்ரீகன், என் பெயர் சச்சன சாருகர், பண்டரிபுரம் போகிறேன், இரவு ஆனதால் இங்கு அமர்ந்து மறுநாள் செல்கிறேன்” என்றார் சாருகர். “என் உள்ளத்தை கொள்ளை கொண்ட உத்தமரே! தங்கள் அழகில் நான் அடிமை ஆகிவிட்டேன், தாங்கள் என்னை மணத்துக்கு கொள்ள வேண்டும்” என்றாள் அவள். “அம்மா இது பெறும் பாவம், தாங்கள் திருமணம் ஆகியவர் தங்கள் கணவருடன் வாழ்வது உத்தமம், நான் ஒரு பிரம்மசாரி அம்மா. கற்பு நெறியில் நிற்பது தான் புண்ணியம் அவநெறியில் புக வேண்டாம் தாயே” என்றார் சாருகர். தீடீரென அவள் என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை வெறிபிடித்தவளைப் போல தலைமுடியை கலைத்து “நாம் சேர என் கணவன் தடையாக உள்ளான் எனில் நான் அவனை கொல்கிறேன், இனி நீர்தான் என் கணவன்” என்று கூறிவிட்டு அயர்ந்து தூங்குகின்ற தனக்கு பல கொடுமைகள் செய்த கணவனுடைய தலையை கோடாரியால் வெட்டினாள் மனைவி. கணவன் உடல் மற்றும் தலை இரு துண்டுகளாகி இறந்துவிட்டான். இந்த கொடுஞ்செயலை கண்டு சாருகர் நடுநடுங்கினார் “ஐயோ கணவனாரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பேயா? பூதமா?” என்று கூறிக்கொண்டே திண்ணையை விட்டு எழுந்து ஓடினார். அந்த பெண்ணும் சச்சன சாருகரை பின் தொடர்ந்து ஓடிவந்தாள். இருவரையும் பார்த்த அந்த நாட்டு அரசு காவலர்கள் இருவரையும் பிடித்து அரசரிடம் அழைத்து சென்றனர்.விடிந்தது அரசவை கூடியது அரசரும் இது பற்றி விசாரிக்க அரசவை வந்தார். முதலில் கணவனை கொலை செய்த பெண்ணிடம் விசாரித்தார் அரசர் அப்போது “அரசரே இந்த பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான், நான் யார் என்று காண வெளியே வந்தேன். என் கணவனை வெட்டிவிட்டு பணத்தை திருட முயற்சி செய்தான் நான் வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் என்னிடமிருந்து தப்பிக்க முயன்றான்; அப்போது நான் அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்தேன்; அந்த சமயம் அரசகாவலர்களால் பிடிபட்டு விட்டான் கயவன்” என்று தப்பித்துக் கொள்ள பொய்யுரைத்தாள். பின் அரசர் சச்சன சாருகரிடம் விசாரித்த போது நடந்த உண்மையை கூறினார். அரசர் மற்றும் அரசவை புலவர்கள் யாரும் சச்சன சாருகர் கூறிய உண்மையை நம்பவில்லை. இதனால் அரசர் சச்சன சாருகருடைய இரண்டு கரங்களையும் வெட்ட உத்தரவிட்டார். சச்சன சாருகர் “அனைத்தும் பண்டரிநாதன் அறிவான்” என்று கூறி அரசனின் ஆணையே ஏற்றுக் கொண்டார். அரசரின் ஆணையின் படி சச்சன சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. கணவனை கொன்ற பெண்ணுக்கு பொற்காசுகள் அளிக்கப்பட்டது. கரம் துண்டிக்கப்பட்ட சச்சன சாருகர் வலி ஒருபுறம் இருக்க பண்டரிநாதனை தரிசிக்க வேண்டும் என்ற அவா ஒருபுறம் இருக்க மனதை திடப்படுத்திக் கொண்டு பண்டரிபுரம் நடந்தது செல்ல தன் யாத்திரை வலியில் அழுதுக் கொண்டே மீண்டும் தொடர்ந்தார். சச்சன சாருகர் ஆலயம் வருவதை கண்ட பகவான் பரம தயாளன் பண்டரிநாதன் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஊரில் உள்ள தக்கார்களின் கனவில் சென்று “எனது பரமபக்தன் சச்சன சாருகர் இரு கரங்களையும் இழந்த நிலையில் மனம் தளர்ந்து வருகிறான்; அவரை மகிழ்விக்க பரிவட்டம் கட்டி, பூரண கும்பம், பாத பூஜை, குடை மற்றும் தம்பூரா, மத்தளம் முழங்க ஆலயம் வரவேற்க வேண்டும்” என்று கூறினார். ஊர் மக்களும் பண்டரிநாதன் கூறியபடி அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு காத்திருந்தனர். பண்டரிபுரம் அடைந்த சச்சன சாருகருக்கு பகவான் பண்டரிநாதன் கூறிய படி பரிவட்டம் கட்டி, பூரண கும்பம், பாத பூஜை, குடை மற்றும் தம்பூரா, மத்தளம் முழங்க ஆலயம் வரவேற்றனர். சச்சன சாருகர், பக்தர்கள் கனவில் பண்டரிநாதன் கூறியதையெல்லாம் கேள்வியுற்று அழுதார். மூலஸ்தானத்தில் சென்று பண்டரிநாதனை வழிபட்டார் அப்போது… “தேவ தேவா! என்னை உன் அடியான் என்று கூறி உபசரிக்குமாறு கனவில் கூறினார் அருள்புரிந்தனையே. ஆனால் அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆணையிட்டபோது அசரீரியாக ‘இவன் குற்றமற்றவன்’ என்று ஒரு சொல் கூறியிருக்கக் கூடாதா? அன்று என்னை கைவிட்டிரே! உன்னைத் தரிசித்தும் உன்னை கட்டித் தழுவவோ, உன் திருப்பாதம் அடைய, உன்னை கரம் கூப்பி வணங்கவோ கரம் அற்ற பாவியாகி விட்டேனே இனி இந்த உயிர் இருந்து என்ன பயன்” என்றார் பண்டரிநாதன் திருப்பாதத்தில் விழுந்து அழுதார். அப்போது அசரீரியாக பண்டரிநாதன் “அன்பனே அழாதே அவரவர் முன் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். நீ முன் பிறவியில் ஒருவன் காமதேனுவாக மதிக்கதக்க பசுவை வதைக்க காரணமாக இருந்தாய், அதனால் உன் கரங்களை இழந்தாய்; இந்த பிறவியில் நீ செய்த புண்ணியத்தின் பலனாக இதோ மீண்டும் கரங்களை பெருவாய்” என கூறினார். சச்சன சாருகர் கண்களை திறந்து மூடுவதற்க்குள் மீண்டும் பண்டரிநாதன் அருளால் இழந்த இரு கரங்களையும் பெற்றார். பண்டரிநாதன் மலர் பாதங்களை தன் கரங்களால் தொட்டு வணங்கினார் சச்சன சாருகர்… இப்போது அனைவரும் யுகித்திருப்பிர்கள் குளக்கரையில் ஓர் அந்தணர் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்து கொண்டிருந்தாரே அந்த அந்தணர் தான் அடுத்த பிறவியில் சச்சன சாருகராக பிறந்தார். ஒரு புலையன் பசுவை வெட்டும் பொருட்டுக் கத்தியைக் தீட்டிக் கொண்டு பசுவை துரத்தினானே அவனே அடுத்த பிறவியில் கணவனாகவும், அவனால் வெட்டப்பட்ட பசு மனைவியாக பிறந்தனர். புலையன் பசுவைக் கொலை செய்ய பசு ஓடிய திசை கேட்கும் போது இரு கரங்களையும் நீட்டி பசு ஓடிய திசையை காட்டிய காரணத்தால் அந்தணர் அடுத்த பிறவியில் சச்சன சாருகராக பிறந்தார் கரங்கள் வெட்டப்படும் தண்டனை பெற்றார், கொலையுண்ட அந்த பசு அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்தாள், புலையன் அவள் கணவனாக பிறந்தார்.பசுவாகிய பெண், முற்பிறவியில் தன்னைக் கொன்றவனைக் கொன்றாள். ஆதாலால் இவை முன் பிறவியின் தீவினையால் விளைந்தவை. நாமும் இந்த பிறவியில் ஐந்தறிவு படைத்த வாயில்ல ஜீவன்கள் ஆகிய மாடு, யானை, குரங்கு, ஆடு, நாய், பூனை, காகம், புறா, போன்றவற்றை வதைப்பதை தவிர்ப்போம் #ஆன்மீக தகவல்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 ; இறையருள் பெறுவோம் நாம் தொந்தரவு செய்யாத வரை நஞ்சுடைய பாம்பும் நண்பன் தான் சீறும் சிங்கமும் தோழன் தன் நன்றி… *** ஜெய் பண்டரிநாதா ஜெய் ***