saravanan
484 views
10 hours ago
◄•───✧ உ ✧───•► 🙏 ஶ்ரீ வாமன புராணம் 🙏 (Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam), #irav vanakkam பாகம்_09 நர நாராயணர்..!! பஹுருசன் என்ற பிராமணனுக்கும் அவள் மனைவி அகிம்சை ஆகியோருக்கும் ஹரீ, கிருஷ்ணன், நர நாராயணர்களென்று நான்கு புத்திரர்கள். சியவன மகரிஷி எதிரில் நைமிசாரணிய மகத்துவமும், சரசுவதி நதியில் நீராடவும் நைமிசாரணியத்துக்கு நர நாராயணர்கள் சென்று, அங்குத் தவம் செய்ய ஆரம்பித்தனர். பிரகலாதன் அவர்களை அணுகி தவம் செய்யும் உங்களுக்கு வில், அம்பு எதற்கு? நீங்கள் உண்மையில் தவம் செய்ய வந்தவர்களா? அல்லது போலியா? என்று கேட்டான். அப்போது நரன் சக்திக்கேற்ற பொருளை அருகில் வைத்திருப்பதில் தவறேதுமில்லை அல்லவா! என்றான். பிரகலாதன் கோபமடைந்து தருமநெறியில் ஒழுகும் நான் இங்கே இருக்கையில் பிராமணர்கள் வில், அம்பு கொள்வதோ? என்று கேட்டான். அதற்கு நரன் ஆம்! உலகில் எங்களை வெல்பவர் யாரும் இல்லை என்று கூற பிரகலாதன் எப்படியாவது நர, நாராயணர்களைத் தான் வெல்லப் போவதாகக் கூறித் தன் பரிவாரங்களைத் தூரத்தில் இருக்குமாறு பணித்தான். மேலும் தன் ராச்சியத்திற்குத் தன் பெரிய தந்தை இரணியாக்ஷனின் மகனான அந்தகாசுரனை அரசனாக்கித் தான் வில்லும், அம்பும் ஏந்தி நர, நாராயணர்களிடம் போர் தொடுத்தான். பல ஆண்டுகள் நிகழ்ந்த போரில் வெற்றி யார் பக்கம் என்று நிச்சயிக்க முடியாமல் இருக்கச் சிவபெருமானின் அறிவுரைப்படி பிரகலாதன் போரை நிறுத்தி நர நாராயணர்களைத் துதி செய்து தன் நகரம் ஏகினான். நர, நாராயணர்களின் தவத்தைக் கண்டு அச்சமுற்ற தேவேந்திரன் அதைக் கெடுக்க ரம்பையையும், மன்மதனையும் அனுப்பினான். அவர்கள் என்ன செய்தும் நரநாராயணர்களை ஒன்றும் செய்யவில்லை. அப்போது அவர்கள் தங்கள் தொடையைத் தேய்த்து ஓர் அப்சரசைத் தோற்றுவித்து அவளை இந்திரனுக்குப் பரிசாக அனுப்பினர். (தொடை-ஊரு). இவ்வாறு ஏற்பட்ட அவளுக்கு ஊர்வசி என்று பெயர். தொடரும்...✍ 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🙏 ஶ்ரீ, ராம ஜெயம் 🌷