#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✡️ஜோதிட பரிகாரங்கள் வருடம் சித்திரை மாதம் 16ம் நாள் 29-ஏப்ரல்-26 புதன்கிழமை பிரதோஷ நாளில்
பனியால் மூடப்பட்ட கயிலை வளர் பரமேஸ்வரனை அன்னை உமையாள் சமேத பரமனை
பிரதோஷ நாயகனை பக்தி பொங்கி நிரம்பிய மனதோடு புனித வில்வ தளம் கொண்டு பூஜித்து இப்பிறவியில் நல் வாழ்வு அளித்து
பந்தம் நண்பர்களோடு களித்தபின் இறுதியில் பரமனிடமே அடைக்கலம் ஆகிட அருளிட வேண்டி போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
நான்மறை கற்றவர்கள் போற்றிடும் பக்த வத்சலனே போற்றி, பணிந்திடும் அடியவர்க்கு அடைக்கலமே போற்றி
அடியேனின் அல்லல்களை களைந்து ஆதரவு அளித்தோனே போற்றி ஒப்பில்லா மணி ஒளிர்வாய் போற்றி
கடைந்த கடலில் எழுந்த ஆலகாலம் விடம் உண்டு அடியார்களை காத்தவனே போற்றி நீல கறை கண்டனே போற்றி
கங்கை நதி, பிறை மதி, கொன்றை மலர் சூடிய திருமுடி கொண்டாய் போற்றி, வானவர்கள் போற்றும் ஈஸா போற்றி
மதம் பிடித்து கொல்ல வந்த கரியின் தோலை கிழித்து அணிந்தாய் போற்றி கொல்புலி தோலாடை அழகா போற்றி
பாச கயிறு வீசி பக்தனை இழுத்து செல்ல முயன்ற காலனை உதைத்து காத்தவனே போற்றி விருஷபாரூடா போற்றி
மலையான் பெற்ற மடந்தை மணாளா போற்றி நிலையாக என்நெஞ்சில் எப்போதும் அமர்ந்து அருள்வாய் போற்றி
அரன் அரி காணமுடியாத முடி அடி கொண்ட தீப்பிழம்பே போற்றி ஆலமர நிழலில் அறம் சொன்னாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றை கண்ணுடையாய் போற்றி இலையார்ந்த மூவிலை வேலை கையில் ஏந்தியவன் போற்றி
மான் மழு கொழுந்து எரியும் தீ கையில் ஏந்தி அருள்பவனே போற்றி, வெண்மை திருநீறு பூசிய மேனியனே போற்றி
🪷🪷🪷
#📅பஞ்சாங்கம்✨