ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.2K views
21 days ago
AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:10* கோரம் பாதஸகஸ்ரகம் பிரகடயன்னாசாஸு பாஸாம் பதிர் த்வாந்தம் நோ புனராந்தரம் சமயிதும் சக்நோதி சைலாத்மஜே த்வத்பாதத்விதயேன கோமலதரேணானேன சேத: ஸ்பிருசா ஜந்தூனாம் பகிரந்தரந்ததமஸம் கிருந்தஸ்யநந்தம் சிவே ஹிமவானுடைய புத்திரியே! சூரியன் திசைகளிலும் ஆயிரக்கணக்கான அதிசக்தி வாய்ந்த (பாதங்களால்) கிரணங்களால் கூட ஜனங்களுடைய உள்ளிருக்கும் (அஞ்ஞானமாகிற) இருட்டைப் போக்க சக்தியற்றவனாக யிருக்கிறான். ஆனால் மங்கள அம்பிகையே! உன்னுடைய, பரம மிருதுவான துவான, மனத்தினால் எப்போதும் தியானிக்க வேண்டிய இரு ஸ்ரீபாதங்களாலும் நீயோ ஜனங்களுடைய புறத்தேயும், அகத்தேயும் இருக்கும் முடிவற்ற அந்தகாரத்தை நிர்மூலமாக விரட்டி விடுகிறாய். * *தன்னை, தேகத்துடன் இணைத்துக் கொள்வது புறத்தே உள்ள இருட்டு தான் ஸச்சிதானந்த ஸ்வரூபமாகிய ஆத்மா இன்றி வேறில்லை என்ற அனுபவத்தை அடையாமலிருத்தல் அகத்தின் இருட்டு. விதயை கைவரப் பெற்ற பின் அவித்யையானது, சூர்யனைக் கண்ட அந்தகாரத்தைப் போல் விலகி ஓடி விடுகிறது. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 10ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐