"அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணினால், அவற்றை உங்களால் எண்ணி முடிக்க முடியாது"
[அல்குர்ஆன் சூரா இப்ராஹீம் 14:34]
நாம் எண்ணாத நிஃமத்கள் ஏராளம்
கண் பார்வை, மூச்சு காற்று, தண்ணீர், நிம்மதியான தூக்கம், பாதுகாப்பு, இஸ்லாம் என்ற வழிகாட்டல். இவை இல்லாமல் வாழும் மனிதர்களை பார்க்கும் போதுதான் நம்மிடம் இருப்பதின் மதிப்பு புரியும்.
நமக்கு கீழே பார்த்தால் நன்றியுணர்வு வரும், நமக்கு மேலே பார்த்தால் பேராசை வரும்.
நபி ஸல் கூறினார்கள்: "உங்களை விட கீழ் நிலையில் உள்ளவரை பாருங்கள். உங்களை விட மேல் நிலையில் உள்ளவரை பார்க்காதீர்கள். அதுதான் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை அற்பமாக எண்ணாமல் இருக்க சிறந்த வழி"
[ஸஹீஹ் முஸ்லிம் 2963]
"நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக அதிகமாக்குவேன்"
[சூரா இப்ராஹீம் 14:7]
அல்ஹம்துலில்லாஹ் என்பது வெறும் வார்த்தை இல்லை. அது ரிஸ்கின் சாவி.
நாம் நினைப்பது தான் பிரச்சினை
நம்மிடம் இல்லாததை பற்றியே யோசித்து, இருப்பதை மறந்து விடுகிறோம். ஒரு கையை இழந்தவனுக்கு இன்னொரு கை இருப்பதே பெரிய நிஃமத். ஆனால் இரண்டு கை உள்ள நமக்கு அது சாதாரணமாக தெரிகிறது.
இன்று காலை கண் விழித்தது முதல் இதுவரை அல்லாஹ்விடம் கேட்காமலேயே எத்தனை நிஃமத்களை அனுபவித்திருக்கிறீர்கள்? இதயம் துடிக்கிறது, நுரையீரல் சுவாசிக்கிறது, சிறுநீரகம் வேலை செய்கிறது. இதற்கெல்லாம் நாம் பில் கட்டுகிறோமா?
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️