#AANMEEGA thagavul.. வாஸ்து சக்திகள் மற்றும் குசா சக்திகள் பெருக.*
*நம்முடைய இல்லத்தில் வாஸ்து சக்திகள் பெருகவும், தீய சக்திகள் அண்டாது விலகவும், குசா சக்திகள் இல்லத்தில் குடி கொள்ளவும் சித்த பிரான்கள் எண்ணற்ற நடைமுறைப் பழக்க வழக்கங்களை அளித்துள்ளனர்.*
*எந்த அளவிற்கு அந்த நற்பழக்கங்களை நமது வாழ்க்கையில் மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நற்சக்திகள் நமது இல்லத்தில் குடியேறி அமைதியான ஆனந்தமயமான வாழ்க்கையை வாழலாம் என்பது உறுதி.*
*அவை*
1. மாலையில் விளக்கு வைத்த பின் தலை வாரக் கூடாது.
2. தலை வாரிய முடியை குப்பையில் சேர்க்கக் கூடாது, முடியைச் சுற்றி வீட்டு மூலை முடுக்குகளில் எறியக் கூடாது. வெளியே எறிதலும் தவறு. உதிரும் முடிகளை தனியே எடுத்து வைத்து அவ்வப்போது ஓடும் நதிகள், கடல்களில் சேர்த்தலே முறை. இதுவே இலட்சுமி கடாட்சம் பெறும் அடிப்படை பூஜையாகும்.
3. மாலையில் விளக்கு ஏற்றும்போது கொல்லைக் கதவை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதலே உத்தமம்.ப்ளாட்டுகளில் குடி இருப்போர் கொல்லைப் பக்கம் இருக்கும் ஜன்னல், கதவுகளை சார்த்தி விட்டு விளக்கு ஏற்றுதல் நலம்.
4. வீட்டில் அழுக்குத் துணிகள், தேவையில்லாத குப்பைகளை சேர விடக் கூடாது. வீட்டில் எந்தத் திசையில் அழுக்குத் துணிகள், குப்பைகள் சேருகின்றனவோ அந்தத் திசையில் தோஷங்கள் பெருகும்.அதனால் அந்தத் திசையிலிருந்து நமக்கு வர வேண்டிய நற்பலன்கள் வராது என்பதை நினைவில் கொள்ளவும்.
5. கீழ்க்கண்ட வாஸ்து துதிகள் சிறப்பான எண் கணித சூத்திரத்தின் அடிப்படையில் சித்தர்களால் அருளப்பட்டவை.தரிசன சகாய க்ஷேம க்ருபா மூர்த்தி
ஸ்ரீவாஸ்து தேவாய நமஹ நீள்நெடுங்கால் கொண்டு புவியோடு வானமும்
தலையோடு அளந்த பெருமாள் அவதார வாஸ்து தேவா நமஹ
முதல் துதி 26 அட்சரங்களைக் கொண்டு (2+6) எட்டு திக்குகளையும், இரண்டாம் துதி 42 அட்சரங்களைக் கொண்டு (4+2) சுக்கிர சக்திகளையும் குறிக்கும்.
6. திருக்கோயில்களில் செவ்வாய்க் கிழமைகளில் நான்கு தீபங்களையும், வெள்ளிக் கிழமைகளில் ஆறு தீபங்களையும் ஏற்றி வந்தால் திக்கு தோஷங்கள் நீங்கும்.
7. தலை முடி மட்டும் அல்லாது உடலில் உள்ள சிறு முடிகள், நகத் துண்டுகள் போன்றவை தரையில் விழுந்தாலும், குப்பையில் சேர்ந்தாலும் வாஸ்து தோஷங்கள் ஏற்படும்.
8. தினமும் சுவாமி படங்களைத் துடைத்து சுத்தம் செய்தலால் இத்தகைய தோஷங்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம்.
9. பட்டை லிங்கம் எழுந்தருளிய கோயில்களில் அந்தக் குறிப்பிட்ட லிங்கத்தில் அமைந்துள்ள பட்டைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் திக்கு தோஷங்கள் தீர வழி பிறக்கும்.
*பொதுவாக, எட்டு அல்லது 16 தீபங்களை, எட்டு, பதினாறு திசைகளில் பட்டை லிங்கக் கோயில்களில் ஏற்றி வழிபடுதல் நலம். சிறப்பாக*
*சமயபுரத்தில் உள்ள ஸ்ரீபோஜேஸ்வரர் ஆலயம், ஐயர்மலை திருத்தலம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருக்கோயில் (திருவானைக் கோவில், திருச்சி) போன்ற திருத்தலங்கள் திக்கு வழிபாடுகளுக்கு உகந்தவை.*
*நன்றி : அகஸ்திய விஜயம் இதழ்.*