திருநீற்றுச் சுவடு
540 views
1 days ago
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள் ... 🙏 தீர்த்தங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்... கோவில்களில் உள்ள குளங்களை தீர்த்தம் என்று சொல்வார்கள். இந்த தீர்த்தங்களிலிருந்து தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் எடுக்கப்படும். சில கோவில்களில் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பார்கள். தீர்த்தங்களை மூன்று வகையாக பிரிப்பார்கள். அவை பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், மானுட தீர்த்தம் எனப்படும். பிரம்ம தீர்த்தம் என்பது கடவுளாலேயே உருவாக்கப்பட்டது. உப்பு நீர் மிக்க கடற்கரை ஸ்தலமான திருச்செந்தூரில், தன் வீரர்களின் தாகம் தீர்ப்பதற்காக நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டி முருகப்பெருமான், தன் வேலைக் குத்தி உருவாக்கிய தீர்த்தம் நாழிக்கிணறு எனப்படுகிறது. கும்பகோணத்தில் சிவபெருமான் உருவாக்கிய தீர்த்தம் மகாமக குளம். சூரிய பகவானுக்கு பிடித்த தீர்த்தங்கள் சூரிய தீர்த்தங்கள் எனப்படும். இவை காளஹஸ்தி, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், சீர்காழி, சிதம்பரம், திருவையாறு கோயில்களில் உள்ளன. அரசர்களும், சிவ பக்தர்களும் உருவாக்கிய குளங்கள் மானுட தீர்த்தம் எனப்படும். இவைதான் அதிக கோவில்களில் உள்ளன. திருவாரூர் தியாகராஜர் கோயில் முன்புள்ள பத்ம குளம் இதில் முக்கியமானது, மிகப்பெரிய பரப்பளவு கொண்டது, இதை கமலாலயம் என்பர்... இன்றைக்கு பல தீர்த்தங்கள் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றின் அருமை அளப்பரியது. 🙏 அதன் பெருமை தெரியாமல் பக்தர்களே குப்பைகளை அதனுள் போட்டு பாழ்படுத்துகிறார்கள். தீர்த்தங்கள் ஆன்மீகத்தின் உயிர் அவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை...🙏