🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
556 views
17 hours ago
#💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் .யு.போப் பிறந்த தினம் இன்று!* *'இந்தக் கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்திய ஜி.யு.போப் பிறந்த தினம் இன்று.* ♦ *1839இல் பைபிள் நூல் கழகத்தில் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தமிழ் தவிர தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.* ♦ *சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவு பிள்ளை, இராமானுஜ கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.* ♦ *வேற்று மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய உயர்சாதியினர் தங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென அடம்பிடித்தனர். போப் உறுதியாக தெளிவாக கூறினார், ‘இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம்’ என்றார். இவரது கருத்து ஏற்கப்படவில்லை.16 வருடம் உழைத்த நற்செய்தி தொண்டர் கழகத்திடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். பின்பு தஞ்சையிலிருந்து உதகமண்டலம் சென்றார்.* ♦ *உதகையில் இருக்கும்போது, சிறைத்தண்டனை பெற்றிருந்த குற்றவாளிகளை தேடிச்சென்று பேசி, அவர்களுக்கு உதவும் வகையில் ஆதரவாகப் பேசியவர். அங்குள்ள மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தார் பின்னர் அங்கு சிறந்த பள்ளியையும் உருவாக்கிய பெருமை இவரைச்சாரும். உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ‘மறை நூற் புலவர்’எனும் பட்டம் அளித்தார்.* ♦ *1886ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.* ♦ *‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு டாக்டர் ஜி.யு.போப். ஆங்கில நாட்டில் பிறந்தும், கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தும்கூட திருவாசகத்தாலும் தமிழாலும் ஈர்க்கப்பட்டு அதில் கரைந்தவர் போப்.* ♦ *தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். ஐக்கிய நாடுகள் சபையில் எழுதப்பட்டுள்ள வாசகமான கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.*