#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#❤அல் இக்லாஸ்❤(ஏகத்துவம்) #way to jannah🤲💜💫 #இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
_*தமிழகத்தில் வரக்கூடிய 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்*_
_*அன்று பிறை தென்பட்டால் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆகும்.*_
_*எனவே, குர்பானி கொடுக்கக்கூடியவர்கள் நகம் முடி வெட்ட நினைப்பவர்கள் இன்றும், நாளைக்குள் வெட்டிக் கொள்ளவும்*_பிறை தென்பட்டு விட்டால் நகமோ அல்லது முடியோ வெட்டக்கூடாது.
“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி); ஆதாரம்: நஸயீ (4361)
“(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம்.”
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் 3997
மேற்கண்ட நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் அனைத்தும் குர்பானி கொடுக்க இருப்பவரைக் குறித்தே வருகின்றன. எனவே, குடும்பத்தின் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பதால் அவர் தான் மேற்கண்ட சட்டங்களுக்கு உட்பட்டவராகின்றார்.
மேற்கண்ட நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் அனைத்தும் யார் சார்பாக குர்பானி கொடுக்கப்படுகின்றதோ அதாவது, குடும்ப உறுப்பினர்களைக் குறித்து வரவில்லை!
எனவே, “துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்ற சட்டம் குர்பானி கொடுப்பவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பொருந்தாது.
அவ்வாறு குர்பானி கொடுக்க இருப்பவரின் குடும்ப உறுப்பினர்களும் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரையில் முடி, நகம் களைவது கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினர்களுக்கு கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால், அது போன்ற கட்டளைகளைப் பார்க்க முடியவில்லை!