அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
ஆயிரம்
துன்பங்கள் வந்தாலும்
நம்மை
நேசிப்பவர்களுக்காக
வாழ வேண்டும்...
ஆயிரம்
துன்பங்களை தந்தாலும்
எதிரிக்கு முன்
வாழ்ந்து காட்ட வேண்டும் 💪
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே🥰🥰🙏🙏
சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்
#மணிவாசகர்.
நம் குறிக்கோள் எதுவோ, அதில் மட்டுமே நம் கவனம் முழுவதும் இருக்க வேண்டும். நம் முயற்சி முழுவதும் அந்த குறிக்கோளை நோக்கியே பயணம் செய்ய வேண்டும். கவனத்தை வேறெங்கும் சிதற விடாமல், நம் மனம், மெய், மொழி, சித்தம் என அனைத்தும் அந்த குறிக்கோளில் குவிந்தால், நம் இலக்கை எளிதாக அடையலாம். இவ்வுலகை நன்றாக புரிந்து கொண்ட எவர்க்கும் இறைவன் திருவடி அருளைப் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும். ஏனெனில், வேறு எவையும் நிலையில்லாதவை. தாற்காலிகமானவை. அவற்றை விலக்கி இறைவனின் திருவடி பேற்றைப் பெருவதே குறிக்கோளாகும்.
#பாடல்
"வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே"
#உயிருண்ணிப்பத்து, #திருவாசகம்.
#பொழிப்புரை
நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.
#திருச்சிற்றம்பலம்
#புறம் #பேசுதலை #பற்றி.......
நாம் மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது, நம்மை அறியாமலேயே, அங்கு நம்முடன் இல்லாத ஒருவரைப் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம்.
இது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.
ஏனென்றால், ‘புறம்’ பேசவில்லை என்றால் பேச்சு சுவாரஸ்யம் இல்லாமல் ஆகி விடுகிறது! இந்த சொல்லைக் கேட்கும்போதே நடுங்குகிறது...
புறம் பேசுவதற்கு முக்கியமான காரணங்களை பற்றி பார்ப்போம்
1)பொறாமை...
மக்கள் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத நேரத்தில் பேசுவதற்கு முக்கிய காரணங்களில் பொறாமையும் ஒன்று.
பொறாமை என்றால், ஒருவரது வெற்றிகளையும், நன்மைகளையும் பார்த்து ஏங்குவது.
அதனால், ஒருவரைப் பார்த்து பொறாமைப் படும் ஒருவர், அவரைப் பற்றி குறை கண்டுபிடிக்கத் தொடங்கி, அந்த குறைகளை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பிப்பார்.
2)எரிச்சல்...
நமக்கு ஒருவர் தவறிழைத்திருந்தால், அதை மறந்து, அவரை மன்னிப்பதை விட்டு, அவரைப் பற்றி தீயவைகள் அனைத்தையும் பேசிக் கொண்டிருப்போம்.
இது ஒரு திருப்தியைத் தரும், ஆனால், நம் மனதில் சூழும் இருளைக் கவனிக்கத் தவறி விடுவோம்.
3)கேளிக்கை...
சிலர், யாரோ ஒருவருடைய குறையைப் பற்றி அவர் இல்லாத போது பேசி மற்றவர்களைச் சிரிக்க வைப்பார்கள்.
இது அவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
ஏனென்றால், அவர்கள் பேசப்பேச மக்கள் அதிகமாகச் சிரிப்பார்கள்.
4)இன்பம்...
சிலர் இருக்கிறார்கள், அவர்கள் மற்றவர்களுடைய குறையைப் பற்றி விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
இது பெரும்பாலும், வீணாக்குவதற்கு நிறைய நேரம் இருப்பவர்களால் தான் செய்யப்படும்.
இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால், அவர்களுக்கு தாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்று தெரியாது, அவர்களுடைய சொற்களின் விளைவால் அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியாது.
5)தற்பெருமை...
தங்களைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொண்டு, அதனால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் இல்லாத போது அவர்களைப் பற்றி மற்றவர் மனதில் எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்க அம்மாதிரி செய்வார்கள். இது மிகவும் அநியாயமானதும், நேர்மையற்றதும் ஆகும்.
இனி புறம் பேசுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போமா!
1)நம்மை அவர்களிடத்தில்
வைத்துப் பார்ப்போம்!
சில சமயங்களில், யாருடனாவது புறம் பேசுவது நமக்கு ஆர்வமாக இருக்கும். இந்த சூழ்நிலையில், நம்மை வைத்துப் பாருங்கள். அதே போல், நம்மைப் பற்றி யாராவது பேசினால், நமக்கு எப்படி இருக்கும்? இதை நினைவு படுத்திக்கொண்டால், நம்மை புறம் பேசுவதிலிருந்து காப்பதுடன், நாம் பணிவாகவும், பெருந்தன்மையுடனும் இருக்கத் தூண்டும்.
2)நன்மையைக் எடுத்துக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வோம்!
இது தான் புறம் பேசுவதிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மிகச் சிறந்த வழி, மேலும், நாம் ஒரு குழுவில் இருக்கும்போது, விளைவு இன்னும் நன்றாக இருக்கும். அவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்களோ அவரைப் பற்றிய நல்லவைகளை நாம் சொல்வதன் மூலம் அவர்களைத் தடுக்கலாம். அது அவர்கள் மனதில் குற்ற உணர்வைக் கூட ஏற்படுத்தக் கூடும். மேலும், யாரையாவது பற்றி நாம் புறம் பேச விரும்பினால், அவர்களுடைய நற்குணங்களைப் பற்றி நினைப்போம். இது அவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை நம்முடையடைய மனதிலிருந்து நீக்கும்.
3)அமைதியாக இருப்போம்!
‘மௌனம் பொன் போன்றது’ என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்...
ஆனால், எப்போதாவது ஏன் என்று யோசித்ததுண்டா? ஏனென்றால், மௌனம், நம்மை தீமையானவற்றைப் பேசுவதிலிருந்து காக்கும். இது தான் நம் இதயங்களைத் தூய்மையாக வைத்திருக்க சிறந்த வழி!
4)குறைகளற்றவர்கள் எவருமில்லை!
புறம் பேசுவதற்கு முன்,
நாம் 100% குறைகளற்றவர்களாக இருக்கிறோமா? என்று பார்த்துக் கொள்வோம். இல்லையென்றால், ஒரு பேனாவை எடுத்து, நம்முடைய குறைகளை எழுதி, அந்த பட்டியலைப் பார்த்து, அவைகளைத் திருத்தக் கூடிய வழிகளைப் பற்றி யோசித்தால்.... இறுதியில் நம்மை புறம் பேசுவதிலிருந்து தடுத்து விடும்.
5)தவிர்த்து விடுவோம்!
புறம் பேசுவதில் ஆர்வமுள்ள குழுக்களில் பங்கேற்பதையும், அந்த இடங்களுக்குச் செல்வதையும் முடிந்தவரை தவிர்ப்போம். ஏனென்றால், சூழ்நிலைகள் நம் மீது ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
நல்ல விஷயமான இதை அடுத்தவரை கடைப்பிடி என்று சொல்லுவதை தவிர்த்து இன்று முதல் நாம் கடைப்பிடிக்க போகிறோம் என்று சொல்வோம்
ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி அவர்களின்
கட்டுப்பாட்டில் இல்லாத மனம் தான்.
மன அழுத்தத்தை நினைத்து உங்களைச் சோர்வாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களைச் சுற்றி இருக்கும் நல்லவற்றை நினைத்து சுவாசியுங்கள்.
மன வருத்தமின்றி வாழ்வதற்கு
இது போதுமென உங்களுக்குத் தோன்றுகிற வரை ஓடுங்கள்.
பிறகு நின்று விடுங்கள்.
இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக வாழப் பழகுங்கள்.
கோயில் திருப்பதிகம்
பாடல் எண் : 5
**************
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே
பொழிப்புரை:
**************
முடிவில்லாத செழிப்பான ஒளி மலையே! வேதமாகிய மறையின் பொருளாகி என்னுடைய மனத்தின்கண் வந்து, நிலை பெற்ற தலைவனே! கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல என் சித்தத்தின் கண் பாய்கின்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! ஆன்ம நாதனே! நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய். இனிமேல் உன்னை யான் வேண்டிக் கொள்வது என்ன இருக்கிறது?
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும்
அன்னைப்பத்து
பாடல் எண் : 4
****************
ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும் .
பொழிப்புரை:
****************
தாயே! ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடை யாகிய புலித்தோலும், பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே? என்று நின் மகள் சொல்வாள்; மேலும், தாயே! வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் மனம் வாடுகின்றது; இது என்ன காரணம்? என்று சொல்லுவாள்.
உங்களது முயற்சிகளின்,
தோல்விகளை எல்லாம்,
போரடிக்காமல்,
கேலி செய்பவர்களுக்கு,
உங்கள் முயற்சிகளின்,
வலியின் ஆழத்தை,
புரிந்து கொள்வது,
சற்று கடினம்தான்...
🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள்