பக்தி கதைகள்

1K Posts • 703K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
912 views 18 days ago AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் நம்மை நேசிப்பவர்களுக்காக வாழ வேண்டும்... ஆயிரம் துன்பங்களை தந்தாலும் எதிரிக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும் 💪 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே🥰🥰🙏🙏 சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் #மணிவாசகர். நம் குறிக்கோள் எதுவோ, அதில் மட்டுமே நம் கவனம் முழுவதும் இருக்க வேண்டும். நம் முயற்சி முழுவதும் அந்த குறிக்கோளை நோக்கியே பயணம் செய்ய வேண்டும். கவனத்தை வேறெங்கும் சிதற விடாமல், நம் மனம், மெய், மொழி, சித்தம் என அனைத்தும் அந்த குறிக்கோளில் குவிந்தால், நம் இலக்கை எளிதாக அடையலாம். இவ்வுலகை நன்றாக புரிந்து கொண்ட எவர்க்கும் இறைவன் திருவடி அருளைப் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும். ஏனெனில், வேறு எவையும் நிலையில்லாதவை. தாற்காலிகமானவை. அவற்றை விலக்கி இறைவனின் திருவடி பேற்றைப் பெருவதே குறிக்கோளாகும். #பாடல் "வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே" #உயிருண்ணிப்பத்து, #திருவாசகம். #பொழிப்புரை நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன். #திருச்சிற்றம்பலம் #புறம் #பேசுதலை #பற்றி....... நாம் மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது, நம்மை அறியாமலேயே, அங்கு நம்முடன் இல்லாத ஒருவரைப் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம். இது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது. ஏனென்றால், ‘புறம்’ பேசவில்லை என்றால் பேச்சு சுவாரஸ்யம் இல்லாமல் ஆகி விடுகிறது! இந்த சொல்லைக் கேட்கும்போதே நடுங்குகிறது... புறம் பேசுவதற்கு முக்கியமான காரணங்களை பற்றி பார்ப்போம் 1)பொறாமை... மக்கள் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத நேரத்தில் பேசுவதற்கு முக்கிய காரணங்களில் பொறாமையும் ஒன்று. பொறாமை என்றால், ஒருவரது வெற்றிகளையும், நன்மைகளையும் பார்த்து ஏங்குவது. அதனால், ஒருவரைப் பார்த்து பொறாமைப் படும் ஒருவர், அவரைப் பற்றி குறை கண்டுபிடிக்கத் தொடங்கி, அந்த குறைகளை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பிப்பார். 2)எரிச்சல்... நமக்கு ஒருவர் தவறிழைத்திருந்தால், அதை மறந்து, அவரை மன்னிப்பதை விட்டு, அவரைப் பற்றி தீயவைகள் அனைத்தையும் பேசிக் கொண்டிருப்போம். இது ஒரு திருப்தியைத் தரும், ஆனால், நம் மனதில் சூழும் இருளைக் கவனிக்கத் தவறி விடுவோம். 3)கேளிக்கை... சிலர், யாரோ ஒருவருடைய குறையைப் பற்றி அவர் இல்லாத போது பேசி மற்றவர்களைச் சிரிக்க வைப்பார்கள். இது அவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் பேசப்பேச மக்கள் அதிகமாகச் சிரிப்பார்கள். 4)இன்பம்... சிலர் இருக்கிறார்கள், அவர்கள் மற்றவர்களுடைய குறையைப் பற்றி விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். இது பெரும்பாலும், வீணாக்குவதற்கு நிறைய நேரம் இருப்பவர்களால் தான் செய்யப்படும். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால், அவர்களுக்கு தாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்று தெரியாது, அவர்களுடைய சொற்களின் விளைவால் அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியாது. 5)தற்பெருமை... தங்களைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொண்டு, அதனால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இல்லாத போது அவர்களைப் பற்றி மற்றவர் மனதில் எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்க அம்மாதிரி செய்வார்கள். இது மிகவும் அநியாயமானதும், நேர்மையற்றதும் ஆகும். இனி புறம் பேசுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போமா! 1)நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்ப்போம்! சில சமயங்களில், யாருடனாவது புறம் பேசுவது நமக்கு ஆர்வமாக இருக்கும். இந்த சூழ்நிலையில், நம்மை வைத்துப் பாருங்கள். அதே போல், நம்மைப் பற்றி யாராவது பேசினால், நமக்கு எப்படி இருக்கும்? இதை நினைவு படுத்திக்கொண்டால், நம்மை புறம் பேசுவதிலிருந்து காப்பதுடன், நாம் பணிவாகவும், பெருந்தன்மையுடனும் இருக்கத் தூண்டும். 2)நன்மையைக் எடுத்துக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வோம்! இது தான் புறம் பேசுவதிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மிகச் சிறந்த வழி, மேலும், நாம் ஒரு குழுவில் இருக்கும்போது, விளைவு இன்னும் நன்றாக இருக்கும். அவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்களோ அவரைப் பற்றிய நல்லவைகளை நாம் சொல்வதன் மூலம் அவர்களைத் தடுக்கலாம். அது அவர்கள் மனதில் குற்ற உணர்வைக் கூட ஏற்படுத்தக் கூடும். மேலும், யாரையாவது பற்றி நாம் புறம் பேச விரும்பினால், அவர்களுடைய நற்குணங்களைப் பற்றி நினைப்போம். இது அவர்களைப் பற்றிய தீய எண்ணங்களை நம்முடையடைய மனதிலிருந்து நீக்கும். 3)அமைதியாக இருப்போம்! ‘மௌனம் பொன் போன்றது’ என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால், எப்போதாவது ஏன் என்று யோசித்ததுண்டா? ஏனென்றால், மௌனம், நம்மை தீமையானவற்றைப் பேசுவதிலிருந்து காக்கும். இது தான் நம் இதயங்களைத் தூய்மையாக வைத்திருக்க சிறந்த வழி! 4)குறைகளற்றவர்கள் எவருமில்லை! புறம் பேசுவதற்கு முன், நாம் 100% குறைகளற்றவர்களாக இருக்கிறோமா? என்று பார்த்துக் கொள்வோம். இல்லையென்றால், ஒரு பேனாவை எடுத்து, நம்முடைய குறைகளை எழுதி, அந்த பட்டியலைப் பார்த்து, அவைகளைத் திருத்தக் கூடிய வழிகளைப் பற்றி யோசித்தால்.... இறுதியில் நம்மை புறம் பேசுவதிலிருந்து தடுத்து விடும். 5)தவிர்த்து விடுவோம்! புறம் பேசுவதில் ஆர்வமுள்ள குழுக்களில் பங்கேற்பதையும், அந்த இடங்களுக்குச் செல்வதையும் முடிந்தவரை தவிர்ப்போம். ஏனென்றால், சூழ்நிலைகள் நம் மீது ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். நல்ல விஷயமான இதை அடுத்தவரை கடைப்பிடி என்று சொல்லுவதை தவிர்த்து இன்று முதல் நாம் கடைப்பிடிக்க போகிறோம் என்று சொல்வோம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத மனம் தான். மன அழுத்தத்தை நினைத்து உங்களைச் சோர்வாக வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் நல்லவற்றை நினைத்து சுவாசியுங்கள். மன வருத்தமின்றி வாழ்வதற்கு இது போதுமென உங்களுக்குத் தோன்றுகிற வரை ஓடுங்கள். பிறகு நின்று விடுங்கள். இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக வாழப் பழகுங்கள். கோயில் திருப்பதிகம் பாடல் எண் : 5 ************** குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே பொழிப்புரை: ************** முடிவில்லாத செழிப்பான ஒளி மலையே! வேதமாகிய மறையின் பொருளாகி என்னுடைய மனத்தின்கண் வந்து, நிலை பெற்ற தலைவனே! கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல என் சித்தத்தின் கண் பாய்கின்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! ஆன்ம நாதனே! நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய். இனிமேல் உன்னை யான் வேண்டிக் கொள்வது என்ன இருக்கிறது? செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் அன்னைப்பத்து பாடல் எண் : 4 **************** ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுஎன்னே அன்னே என்னும் . பொழிப்புரை: **************** தாயே! ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடை யாகிய புலித்தோலும், பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே? என்று நின் மகள் சொல்வாள்; மேலும், தாயே! வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் மனம் வாடுகின்றது; இது என்ன காரணம்? என்று சொல்லுவாள். உங்களது முயற்சிகளின், தோல்விகளை எல்லாம், போரடிக்காமல், கேலி செய்பவர்களுக்கு, உங்கள் முயற்சிகளின், வலியின் ஆழத்தை, புரிந்து கொள்வது, சற்று கடினம்தான்... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள்
20 likes
16 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 18 days ago AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் சிவ காலை வணக்கம் கோயில் திருப்பதிகம் பாடல் எண் : 4 *************** உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக் குறிகினேற் கினியென்ன குறையே பொழிப்புரை: ************** கற்று உணர்ந்த, பெரிய முனிவரும், தேவருடன், ஏனையோரது உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் அருமையான பொருளே! ஒப்பில்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே! பிறப்புப் பிணியைப் போக்கி உய்விக்கின்ற மருந்து போன்றவனே! செறிந்த இருளில் தெளிவாய்க் காணப்பட்ட தூய ஒளியே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே! குணங்கள் இல்லாத ஆனந்தமே! உன்னை அடைந்த எனக்கு இனி என்ன குறை உள்ளது? #நீங்கள் #கடவுள்_இருக்கிறார் #என்று #உணர்ந்த_தருணம் #எது...!? - ஓர் தம்பியின் வினா .. ஏதோ நடந்தால் கடவுள் இருக்கிறார் !! ஏதோ நடக்கவிட்டால் கடவுள் இல்லை !! என்பது தேவையை மட்டுமே பார்பவர்கள் கண்ணோட்டம் தான் .. ஆனால் நான் !! நானாய் இருக்க !! என்ன நடக்கிறது என்று கூட எனக்கு தெரியாது .. நான் என்று சுட்டி காட்டும் இவ்வுடலுக்குள் ஏது ?? எப்போது ?? எப்படி ?? எந்த நேரத்தில் எந்த மாதிரி இயங்குது என்றும் எனக்கு தெரியாது .. அதில் என்னுடைய ஒவ்வொரு நொடியும் என் இருப்பதை இந்த உடலோடு தக்கவைக்க .. எதை உள்வாங்க !! வெளியேற்ற !! தக்கவைக்க !! என்று என்னை மீறிய எனக்குள் எனக்கான இயக்கப்படும் போது .. நானே என்னுள்ளே " இருதயமே !! சிறுநீரகமே !! இயங்காதே " என்று ஆணையிட்டால் கூட என் உடல் என்று வெளியே பிதற்றி கொள்ளும் இந்த உடல் கெடுக்காதே இயங்கிக்கொண்டே என் இருப்பை தக்கவைத்து கொண்டே இருக்கும்போது .. அப்போது என்னுள்ளே என்னை மீறி ஒன்று உள்ளது என்று உள் கடந்து உணர .. அங்கே என்னை மீறிய பேராற்றலாய் என்னுள்ளே கடந்து இருக்கும் ஒன்று .. என்னை மீறி என்னை நானாக வைத்துக்கொண்டு இருக்கின்றது என்ற மெய் புரியும் .. அது வேண்டும் ?? இது வேண்டாம் ?? அது நடக்கவேண்டும் ?? இது மாற வேண்டும் !! இப்படியெல்லாம் நடந்தால் கடவுள் உண்டு !! இல்லை என்றால் கடவுள் இல்லை !! போன்ற பொய் எல்லாம் கடந்து .. எது நடந்தாலும் அதை அனுபவிக்க நான் நானாக இருத்தாலே பிரதானம் .. அந்த பிரதனத்தை நான் கேட்க்காதே, நினைக்காதே கூட .. அதியற்புதங்களை நிகழ்வித்து சாத்தியப்படுத்தி கொண்டு இருக்கிறது கடவுள் தானே .. கடவுள் என்பது கட - உன் - உள் உணர்ந்து கொள் என்பதே அது .. இதில் கடவுள் இருக்கிறார் என்று எப்போது உணருவீர்கள் என்றால் ?? நான் என்னை நானாக பார்க்கும் போது எல்லாம் உணர்வது தானே மெய் .. சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எத்தனையோ ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எல்லாம் இருக்கும் அனுப்பவிக்க முடியாது வாழ்க்கையில் போராடி பாருங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொறுத்து பாருங்கள் வேதனைகள் முடிவு பெறும்! ஏனெனில் இவ்வுலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை...!!! பொறுமை கொண்டவன் வாழ்வில் சிறப்பான் பொறாமை கொண்டவன் வாழ்வையே இழப்பான் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உங்களது மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்கிட நீங்கள் தினமும் கூற வேண்டிய #கந்தபுராணம் #மேன்மை #கொள் #சைவ #நீதி #விளங்குக என்கிற #பாடல் பற்றிய #சிறப்பு #பதிவு ! #கச்சியப்ப #சிவாச்சாரியார் அருளிச் செய்தது #கந்த #புராணம். அதில் வரும் #வாழ்த்துப் #பாடல் இது. #பாடல் வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் #பொருள் #விளக்கம் வான் முகில் = வானில் உள்ள மேகங்கள் வழாது பெய்க = குற்றம் இல்லாமல் பெய்க. அதிகமாகவும் பெய்யக் கூடாது. குறைவாகவும் பெய்யக் கூடாது. காலம் அல்லாத நேரத்தில் பெய்யக் கூடாது. வழுவாமல் பெய்க. மலிவளம் சுரக்க = மலி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. மிகுதல். நிறைதல். நெருங்குதல். புணர்ச்சியின் மகிழ்தல். செருக்குதல். விம்முதல். பரத்தல். விரைதல். நிறைய வளங்கள் வேண்டும். அது எல்லோருக்கும் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். மிகுதியாக வேண்டும். வளங்களினால் பெருமை பட வேண்டும். மன்னன் கோன் முறை அரசு செய்க = மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும். கொடுங்கோலனாக இருக்கக் கூடாது. குறைவு இலாது உயிர்கள் வாழ்க = அனைத்து உயிர்களும் ஒரு குறைவும் இன்றி வாழ வேண்டும். நான் மறை அறங்கள் ஓங்க = நான்கு வேதங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் ஓங்கி வளர வேண்டும். நல்தவம் வேள்வி மல்க = நல்ல தவமும், வேள்விகளும் நிறைய வேண்டும் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் = சிறந்த சைவ நீதி உலகெல்லாம் பரவ வேண்டும் அது என்ன #சைவநீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் #முன்னோர்கள். மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும். எவ்வளவு ஒரு உயர்ந்த மனம். இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்/பாடுங்கள் உங்களது மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா? இல்லையா?என்பதை பாருங்கள். #திருச்சிற்றம்பலம் எந்த தவறை நீ எங்கு கண்டாலும் அது உன்னிடத்தில் இருந்தால் அதை நீ திருத்திக் கொள்… நிராகரிப்பு என்பது நிரந்தரமல்ல........ உன் தரம் உயரும் போது உன்னை கொண்டாடும் உலகம் இது.........!! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் இப்போது நடந்து விட்டது 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள்
33 likes
47 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
859 views 26 days ago AI indicator
*அரிச்சந்திர புராணம்* *கதி இழக்கினும்* *கட்டுரை இழக்கிலேம்* அரிச்சந்திர புராணம். கல் மனதையும் கரைய வைக்கும் கதை. கண்ணில் நீர் தளும்பாமல் படிக்க முடியாது. என்ன ஆனாலும் சரி, உண்மை பேசுவதை விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறான் அரிச்சந்திரன். அவன் மனைவியும் அவனுக்கு உறு துணையாக இருக்கிறாள். நாட்டை இழந்தான். சொத்து சுகங்களை இழந்தான். மனைவியை ஒரு அந்தணனுக்கு விற்றான். மகன் போனான். மனைவிமேல் கொலைப் பழி விழுந்தது. அவளை தெருவில் இழுத்துக் கொண்டு கொலை களத்திற்கு கொண்டு போனார்கள். அவளை சிரச் சேதம் பொறுப்பும் அரிச்சந்திரனிடம் கொடுக்கப் பட்டது. கௌசிக முனிவன் அப்போது வந்து சொல்கிறான் " அரிச்சந்திரா, ஒரே ஒரு பொய் சொல். நீ எனக்கு அரசை தரவில்லை என்று ஒரு பொய் சொல். நீ இழந்த அத்தனையும் உனக்குத் திருப்பித் தருகிறேன் " என்றான். அரிச்சந்திரன் ஒத்துக் கொள்ளவில்லை. அவன் மனைவியும் அதற்கு ஒப்பவில்லை. இருவரும் கௌசிக முனிவனிடம் கூறினார்கள்..... "எம் அரசை இழந்தோம்... எங்கள் பிள்ளையை இழந்தோம்...எங்கள் சொத்து சுகம் எல்லாம் இழந்தோம். இனி எங்களுக்கு என்று இருக்கிறது என்று நினைக்க ஒன்றே ஒன்று தான் இருக்கிறது . அது நல்ல கதி அல்லது சொர்க்கம். அதையும் இழந்தாலும் பரவாயில்லை சொன்ன சொல்லை இழக்க மாட்டோம் " என்று கூறினார்கள். அதை கேட்ட முனிவன் மதி இழந்து, சொல்ல சொல் இல்லாமல் மறைந்தான். பாடல் பதி இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும் கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார் மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான். பொருள் பதிஇ ழந்தனம் = அரசை இழந்தோம் பாலனை இழந்தனம் = பிள்ளையை இழந்தோம் படைத்த நிதி இழந்தனம் = நாங்கள் கொண்ட நிதியை இழந்தோம் இனி நமக்குளதென நினைக்கும் = இனி எங்களுக்கு உள்ளது என்று நினைக்கும் கதி இழக்கினும் = நல்ல கதியை இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார் = சொன்ன சொல் தவற மாட்டோம் என்றார் மதி இழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான் = மதி இழந்து, சொல்ல வார்த்தை இல்லாமல் கௌசிகன் மறைந்தான். இந்த பாடல் சொல்லும் செய்தி என்ன ? செய்யும் செயல் சரியானது என்று முடிவு பண்ணிவிட்டால் எத்தனை தடை வந்தாலும், எவ்வளவு இன்னல் வந்தாலும் உறுதியாக இருக்க வேண்டும். அரிச்சந்திரன் உண்மை சொல்வது சரியானது என்று முடிவு செய்து விட்டான். ஒரு இம்மி அளவும் பின் வாங்க வில்லை. ஆனது ஆகட்டும் என்று தான் சரி என்று நினைத்த வழியில் இறுதி வரை சென்றான். சின்ன சின்ன துன்பங்கள், தடைகள் வந்தாலும் துவண்டு போகிறோம். எடுத்த காரியத்தை கை விட்டு விடுகிறோம். சிறு தோல்விகள் நம்மை சோர்வடையச் செய்து விடுகின்றன. நம்மால் முடியாது என்று பின் வாங்கி விடுகிறோம். அது கூடாது. பதினாலு வருடம் காட்டுக்குப் போ என்றால் சிரித்துக் கொண்டே போனான் இராமன். பதிமூன்று வருடம் வனவாசம்,ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் - சரி என்று போனார்கள் பாண்டவர்கள். செய்யும் செயலில் உறுதி வேண்டும். சவால்களை கண்டு துவளக் கூடாது என்று உரமூட்ட வந்தவை இந்த கதைகள் சொல்லித்தாருங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும். 🚩🕉🪷🙏🏼 #அரிச்சந்திரன் கதை #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பக்தி கதைகள் #புராண கதைகள்
11 likes
13 shares