ரவிசங்கர் ராஜா, ஆரணி
871 views • 28 days ago •
*ஒரு வருடம் மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்* *கண்ட பலனை* *வழங்கும் மகிமை மிக்க* *வைகாசி மாத மூன்றாம்* *பிறை சந்திர தரிசனம்*!
இன்று(18-5-26) வைகாசி மாத மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதால் ஒரு வருடம் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் கண்ட பலன் கிடைக்கும்.
மூன்றாம் பிறை சந்திர தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் ,கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் .
மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காண்பதை சிவன் பார்வதி தரிசனம் என பலரும் குறிப்பிடுவது உண்டு.
எனினும் மூன்றாம்
பிறை சந்திர தரிசனம் காண்பதை ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமி தரிசனம் காண்பது என்பதை சரியானதாகும்.
சிவனின் தலையில்
புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள்.
சந்திரனுக்குரியவரும்
ஸ்ரீ ஹரியே ஆவார்.
மாலை வேளைக்கும், மேற்கு திசைக்குரிய சனிஸ்வரருக்கும் உரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார்.
செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் .
காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும்.
ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை கழிந்த மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும்.
மூன்றாம் பிறை தரிசனம் காணவேண்டிய முறைகள்:
ஒரு தாம்பள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் மேல் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி
வணங்க வேண்டும்.
அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்.
அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும்.
உங்களது தேவையை கேட்க வேண்டும்.
இந்த தேவையை கேட்கும் முன் மூன்றாம் பிறை
நாளன்று காலையில் இருந்து மாலைக்குள் ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும்.
இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார்.
இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள்.
பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள்.
தவறாக புரிந்து கொண்டவர்கள்
காட்டிய வழி இன்றும் பின்பற்றபட்டு வருகிறது.
கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தர்ம பலம்,மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.
சூரியனிடமும்,
சந்திரனிடமும் வேறு
எந்த தெய்வத்திடமும்
நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும்.
அதுவே யாசகம் பெறுவது எனப்படும்.
ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார்.
எனவே இந்த கையேந்துவதை இறைவனிடத்தில்
ஒரு தவறான கண்ணேட்டத்தில்
காணக்கூடாது.
நம்மிடம் இல்லாத ஒன்றையோ,நமது தேவையையோ நாம் இறைவனிடம் கேட்பதால் நாமும் பிச்சை எடுப்பவர்தான்.
பிச்சை என்பதை தவறானதாக கருதக்கூடாது.
சிவபெருமான் கூட
அனு தினமும் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சையாக இடுவார்.
இதை படி அளப்பது என்பார்கள்.
எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது கையேந்தி வேண்டுங்கள்.
செல்வ சந்தோஷ வளம் கிட்டும்.
சந்திர தரிசனம் செய்யும் பொழுது “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மனதார
கூற வேண்டும்.
மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும்.
பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு,
தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும்.
இது போல் குறைந்தது மூன்று மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தை தொடர்ந்து காணபது நலம்.
இதை ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திர நிலையில் இருப்பவனும் தரித்திர நிலை மாறி உயர்ந்த செல்வத்தை பெறுவான் .
இது உறுதி, அனுபவ வெற்றி .
மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது .
எனினும் கவலை வேண்டாம்,
மாலை 6 1/2 மணி முதல்
7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து மேலே கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்.
பிறை தரிசனம் செய்யும் போது நிதானமான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும்.
அவசர வேலையை வைத்துக் கொண்டோ ஏதோ ஒப்புக்காகவோ, கோபதாபங்களோடோ பிறை தரிசனம் செய்ய கூடாது.
குறிப்பாக அழுகையுடன் பிறையை காண கூடாது.
என்ன மனநிலையில்
நாம் பிறையை காண்கிறோமோ, அதுவே வரமாக பெருகி நமக்கு கிடைக்கும்.
எனவே நல்ல மனதோடு நமது தேவைகளை கேட்க வேண்டும்.
அசைவ உணவை
விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட
இந்த பிறை தரிசனத்தை காண்பதற்காக 30 நாட்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்து வருகிறாரகள்.
இந்த பிறைதரிசன நாள் திங்கள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.
அதே போல் சித்திரை. மாதத்தில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.
அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்.
ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும் .
திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்.
திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும்.
சூழ்நிலையால் காண முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம்.
இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை.
யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு கையேந்தி வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும் .
ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என வெதும்பக் கூடாது .
நமக்கு கர்ம பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறைவன் அதை
முதலில் சரிசெய்வார்.
பின்பு யோகத்தை அருளுவார்.
எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும்.
சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும்.
கர்ம வினை பாவம் நிறைந்தவராக இருந்தால் 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும்.
யாருக்கு எவ்வளவு வினைகள் இருக்கிறது என யாருக்கும் தெரியாது .
எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து மூன்றாம் பிறை சந்திர தரிசனம் காணுங்கள்.
அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் . 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் ##🙏சந்திர தரிசனம் #🌙சந்திர தரிசனம்🔯
13 likes
10 shares