ஞானிகள் பேசுகிறோம்

1K Posts • 223K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
3K views 7 days ago AI indicator
*குரு சரித்திரம்* அத்தியாயம்-1 புதிய தொடர் பதிவு முன்னுரை:தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதிக சக்தி பெற்றவர். அவரைப் பற்றி விவரங்கள் மற்றும் அவரை ஆராதிப்பது போன்றவை மராட்டிய மற்றும் கர்நாடக மானிலங்களில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. அதற்குக் காரணமும் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே. எங்கெல்லாம் மராட்டிய மக்கள் அதிகம் வசிப்பார்களோ அங்கெல்லாம் தத்தர் வழிபாடு அதிகம் உள்ளன. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல தத்தர் வழிபாடும், அவருடைய சக்தியும் பிற மாநிலங்களிலும் பரவலாயிற்று. 'தத்த பரம்பரா' என்பதில் ஸ்ரீபாதவல்லபா மற்றும் ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஆகிய இரு சத்புருஷர்களும் மிக முக்கியமாக மற்றும் மேன்மையானவர்களாக கருதப்படுபவர்கள். ஏன் ஷீரடி சாயி கூட தத்தரின் அவதாரமே என்கிறார்கள். இந்த நிலையில் மக்கள் மிக அதிகமாக போற்றிப் படிக்கும் குரு போதனைகள் அதாவது 'குருசரிதம்' என்ற புத்தகம் தத்தரின் பக்தர்களினால் வேத புத்தகமாகவே படிக்கப்பட்டு வருகிறது. அதைப் பாராயணம் செய்வதினால் தத்தாத்திரேயர் அருள் கிடைத்து புத்திர பாக்கியம், செல்வம், வளமான வாழ்க்கை என அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பரவலான நம்பிக்கை. குரு சரித்திரம் என்பது சுமார் 600 அல்லது 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த மூல புத்தகம் சமஸ்கிருதம் மற்றும் மராட்டிய மொழிகளில் இரு மொழிகளைக் கலந்து எழுதப்பட்டு உள்ளதாக கூறுவார்கள். இந்த புத்தகம் பல பாகங்களாக எழுதப்பட்டு உள்ளது. ஞான காண்டம், கர்ம காண்டம் மற்றும் பக்தி காண்டம் என மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள இந்த புத்தகம் ஸ்ரீ நரசிம்ஹ சாஸ்வதி ஸ்வாமிகளின் சீடரான ஒரு சித்தர் ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் பெருமைகளை அவருடைய ஒரு பக்தரான நமத்ஹரகா என்பவருக்கு விளக்கிக் கூறியதான கதையை உள்ளடக்கி எழுதப்பட்டு உள்ளது. இனி குரு சரிதாவை படிப்போம்: அத்தியாயம் - 1 நமத்ஹரகா எனும் அந்தணர் ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்தார். அவர் அந்தணர் அல்ல, துவஜகுலா எனும் குலத்தில் பிறந்தவர் என்றும் ஒரு கதை உண்டு. அவர்களும் பிராமணர்களைப் போல பூணூல் தரிப்பவர்களே ஆவார்கள். ஆகவே தமது சமய முறைக்கு ஏற்ப எட்டு வயதிலேயே பூணூல் அணிந்து கொண்டவர். நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்த அவர் தானும் அவருடைய சீடராக வேண்டும் என்ற எண்ணத்துடன் குருவைத் தேடி அலையத் துவங்கினார். அவருக்கு தம்முடைய குரு எங்கிருப்பார் என்பது தெரியவில்லை. அப்போது ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள் கர்நாடகத்தில் இருந்த கனகபுரா எனும் ஊரில் இருந்தார். அதைக் கேள்விப்பட்டவர் உடனடியாக தனது குருவை தேடியவாறு ஒரு சிறு மூட்டையில் தனக்குத் தேவையான பொருட்களை தலையில் எடுத்து வைத்துக் கொண்டு எங்கு போகின்றோம் என்பது கூடத் தெரியாமல் நெடிய பயணத்தைத் துவக்கினார். நடந்து கொண்டே சென்றவர் வழி நெடுக தனது குருநாதரை அடையாளம் காட்டுமாறு தன் மனதில் தோன்றிய தெய்வங்களை வேண்டிக் கொண்டே சென்று கொண்டு இருந்தார். தெய்வமே, மும்மூர்த்திகளின் அவதாரமே, அனைவருக்கும் கருணைக் காட்டுபவரே, உமது பாதங்களை தரிசித்த மட்டிலேயே அனைத்து பாபங்களும் விலகும் என்கிறார்களே, நான் ஒரு அனாதை, எனக்கு வேறு யாருமே இல்லை. பசியால் அழும் குழந்தை அழுது கொண்டே இருக்கட்டும் என்று எந்த தாயாவது மௌனமாக அதைப் பார்த்துக் கொண்டு இருப்பாளா? அது போலத்தான், எனக்கு அன்னை, பிதா, தெய்வம், உற்றார், உறவினர் என இந்த அனாதைக்கு அனைவருமாக உள்ள நீங்களே இத்தனை நாளாகியும் இந்த ஆதரவற்ற அனாதைக்கு காட்சி தராமல் ஏன் ஏமாற்றுகிறீர்கள்? நான் செய்த பிழைதான் என்ன? நான் என்னை அறியாமலேயே தவறு ஏதும் செய்திருந்தால் என்னை மன்னித்து விட்டு, எனக்கு காட்சி தர வேண்டும் என மனப்பூர்வமாக உம்மை வேண்டுகிறேன். உம்மை தரிசிக்காவிடில் நான் இல்லாமல் போய்விடுவேனே. உம்மைக் காண, உங்கள் எண்ணங்களோடு உம்மைக் தேடிக் கொண்டு நடக்கும் என் மனக் குறையை விரைவில் தீர்த்து வையுமையா" என கண்களில் நீர் ஓட குருநாதரை நினைத்து அழுதபடி மனம் ஒடுங்கிப் போனவர் ஒருநாள் களைப்படைந்து வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருந்தபோது அப்படியே உறங்கி விட்டார். அப்படி ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தவர் கனவில் ஒரு மகான் அவருக்குக் காட்சி தந்தார். அவரைக் கனவிலே கண்டவர் கனவிலேயே அவரை பூஜித்து, அவர் கால்களில் விழுந்து, விழுந்து வணங்கினார். அந்த மஹான் வேறு யாரும் அல்ல, அவர் தேடிப்போய் கொண்டு இருந்த அதே ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள்தான்! நமத்ஹரகாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!! தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #ஞானிகள் பேசுகிறோம்
29 likes
47 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
713 views 6 days ago AI indicator
*குரு சரித்திரம்-10* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-10 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் "சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின் அவர் வேறு அவதாரம் எதுவும் எடுக்கவில்லையா? அவர் வேறு மகிமைகளை சூஷ்ம உலகில் இருந்து செய்யவில்லையா? இவற்றையும் எனக்கு கூறுவீர்களா" என்று கேட்டார். அதற்கு சித்த முனிவர் கூறினார் "நமத்ஹரகா, ஸ்ரீ பாத வல்லபா மறைந்து விட்டாலும் சூஷ்ம உலகில் இருந்தபடி அவர் பல மகிமைகளை செய்துள்ளார். அதனால்தான் குருபுரம் புனித ஷேத்திரமாக கருதப்படுகிறது. அவருடைய பாதுகைகள் இந்த ஊரில் உள்ளதினால் இங்குதான் அவர் இன்னமும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் இங்கு வந்தாலே அனைத்து பாபங்களும் விலகும் என்றும் கூறுகிறார்கள். அவருடைய பாதுகை எத்தனை மகிமை வாய்ந்தது என்பதை எடுத்துக் காட்டும் இந்தக் கதையைக் கேள்" என்று கூறிவிட்டு அந்தக் கதையை கூறத் துவங்கினார். 'முன் ஒரு காலத்தில் வெளியூரில் இருந்த பிராமணர் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் சம்பாத்தியம் பெரியதாகிக் கொண்டே வந்ததினால் ஒவ்வொரு வருடமும் அவர் குருபுரத்துக்கு வந்து இங்குள்ள ஸ்ரீ பாத வல்லபா ஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அப்படி இருந்து வருகையில் ஒரு வருடம் அவருடைய வியாபாரத்தில் அதிக அளவு லாபம் கிடைத்து இருந்ததினால் இரண்டு நாட்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டு பையில் நிறைய பணத்தை எடுத்துக் கொண்டு குருபுரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அதை சில திருடர்கள் தெரிந்து கொண்டார்கள். ஆகவே பணத்துடன் குருபுரத்துக்கு அவர் வந்து கொண்டு இருந்தபோது வழியில் அவரை வழிமறித்து கழுத்தை அறுத்து அவரைக் கொன்றப் பின் அவரிடம் இருந்தப் பணத்தை திருடிக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் சூஷ்ம வடிவில் அங்கிருந்த ஸ்ரீ பாத வல்லபா அதை பார்த்து விட்டார். தனது கையில் ஒரு சூலாயுதத்தை ஏந்திக் கொண்டு அந்த திருடர்களை துரத்திச் சென்று பிடித்து அவர்களை அந்த சூலத்தினாலேயே குத்திக் கொன்றார். அதில் ஒருவன் குத்தப்படும் முன்னர் அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டு தன்னை விட்டு விடுமாறு கதறினான். கொள்ளை அடித்த பணத்தையும் அவரிடமே கொடுக்க அவர் அவன் மீது இரக்கம் கொண்டு கருணைக் காட்டி அவனைக் கொல்லாமல் விட்டார். அவனிடம் சிறிது வீபுதியைக் கொடுத்து அதை அந்த பிராமணரின் அறுந்த தலையில் தடவிய பின் அதை அவனது உடலோடு சேர்த்து வைக்குமாறு கூறியதும் அவனும் ஓடிச் சென்று அவர் கூறியதை செய்தான். என்ன அதிசயம். அடுத்த ஷணம் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த பிராமணன் மயக்கம் தெளிந்து எழுவது போல உயிர் பெற்று எழுந்தான். உயிர் பெற்று எழுந்தவன் அவன் எதிரில் நின்று கொண்டு இருந்த திருடனிடம் தான் எங்கு இருக்கிறேன், தன்னை சுற்றி என்ன நடந்தது, தன்னை யாரோ தாக்கி விட்டுப் போனார்களே, அவர்கள் யார் என்றெல்லாம் கேட்டார். அந்த திருடனும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவருக்குக் கூறிவிட்டு யாரோ முன்பின் தெரியாதவர் கையில் சூலத்துடன் வந்து தம் நண்பர்களைத் தாக்கிக் கொன்று தன்னை கருணைக் காட்டி கொல்லாமல் விட்டு விட்டார் என்றும், அவரே இறந்த அந்த பிராமணனை பிழைக்க வைக்க வீபுதியை தந்தார் என்றும், அதை தடவிய பின் அறுந்து கிடந்த தலையையும், உடம்பையும் ஒன்றாக வைத்ததும் உயிர் பிழைத்து எழுந்து வந்து விட்ட உண்மையையும் கூற அந்த பிராமணனும் தனக்கு உயிர் பிச்சைக் கொடுத்தது ஸ்ரீ பாத வல்லாபாவே என்பதைப் புரிந்து கொண்டார். ஸ்வாமியின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டழுத பின் அந்த திருடனுக்கு காட்சி தந்து அவனிடம் வீபுதி கொடுத்து என்பதை அனுப்பியது கருணைக் கடலான ஸ்ரீ பாத வல்லாபாவே அவனுக்கும் புரிய வைக்க அவனும் ஆனந்தம் அடைந்து தான் செய்த தவற்றுக்கு வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதற்குப் பின்னர் அவனும் அந்த பிராமணனுக்கு துணையாக குருபுரம் சென்றான். அங்கு சென்றதும் இருவரும் ஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டப் பின், அந்த பிராமணன் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும்போது அவருக்கு உதவியாக இருந்தான். இப்படியாக ஸ்ரீ பாத வல்லபா அங்கு சூஷ்மமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்" என்று கூறிய பின்னர் குருபுரம் கதையை கூறி முடித்தார் (இத்துடன் அத்தியாயம் 10 முடிந்தது). தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
11 likes
6 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
609 views 7 days ago AI indicator
*குரு சரித்திரம்-9* புதிய தொடர் பதிவு அத்தியாயம்-9 நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார். "சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து எனக்கும் கூறுவீர்களா?" என ஆவலுடன் கேட்க சித்த முனிவர் மீண்டும் கூறலானார். "நமத்ஹரகா ஒரு காலத்தில் குருபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கிருந்த நதியில் தினமும் ஒரு வண்ணான் வந்து துணிகளை துவைத்து எடுத்துச் செல்வது வழக்கம். அப்போது ஸ்ரீ பாத வல்லபா அவர்களும் அந்த ஊரில் இருந்தார்கள். அந்த வண்ணானுக்கு ஸ்வாமிகளிடம் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதினால் அவருக்கு எந்த விதத்திலாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆகவே ஸ்வாமிகள் நதியில் குளிக்கச் செல்கையில் தானும் அவர் பின்னால் சென்று அவர் குளித்தவுடன் அவரது துணிகளை துவைத்துக் கொடுப்பான். அது மட்டும் அல்லாமல் அவருடைய குடிலுக்கும் சென்று அவர் சமையல் பாத்திரங்களை துலக்கிக் கொடுப்பதும், குடிலை பெருக்கி சுத்தப்படுத்திக் கொடுப்பதையும் ஒரு வாழ்க்கை முறையாகவே வைத்து இருந்தான். ஸ்ரீ பாத வல்லபா அவர்களுக்கு எந்த ஜாதி துவேஷமும் இல்லை என்பதினால் அந்த வண்ணான் செய்து வந்த பணிவிடைகளை மனதார ஏற்றுக் கொண்டார். இப்படியாக அந்த வண்ணான் காலம் அவருக்கு பல பணிவிடைகளை செய்து வந்தபோது ஒரு நாள் அந்த நதியில் ஒரு முஸ்லிம் மன்னன் தனது படையினருடன் நூற்றுக்கணக்கான கப்பல்களில் அந்த வழியே பயணம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டான். அந்த மன்னனின் கழுத்திலும், உடம்பிலும் ஆபரணங்கள் மின்னின. அவ்வப்ப்போது படைவீரர்கள் வந்து அவருக்கு ஏதேதோ பணிவிடை செய்தவண்ணம் இருந்தார்கள், உண்பதற்கு பல்வேறு பழங்கள் மற்றும் உணவுகளையும் கொண்டு வந்து தந்தார்கள். அதைக் கண்ட வண்ணான் மனதில் நினைத்தான் ஆஹா மன்னன் என்றால் இப்படித்தான் சேவகம் செய்வார்கள் போலும்! இத்தனை சுகமாக இருக்க அருள் புரியும் எந்தக் கடவுளை அந்த மன்னன் வணங்கித் துதிக்கிறான் என்று தெரியவில்லையே' அன்று தனக்கு பணிவிடைகளை செய்ய வந்த வண்ணானின் மனதில் இருந்த அந்த ஏக்கத்தை ஸ்வாமிகள் புரிந்து கொண்டார். அவனிடம் அவர் கேட்டார் 'குழந்தாய் (பெரியவர்கள் தம்மைவிட சிறியவர் எத்தனை வயதானாலும் அவர்களை உரிமையோடு குழந்தாய், மகனே, அம்மணி மற்றும் மகளே என்றே அழைப்பார்கள். இந்தப் பழக்கத்தை சாதாரணமாக அனைவரும் கடைபிடித்தார்கள்), உனக்கும் அந்த மன்னனைப் போல அத்தனை சுகபோகமாக வாழ ஆசையாக உள்ளதா?' வண்ணன் கூறினான் 'ஸ்வாமி, உங்களுக்கு சேவகம் செய்வதை பெரும் பாக்கியமாக நான் கருதினாலும், உள்ளுக்குள்ளே நான் ஏழை என்ற ஏக்கம் என்னை விட்டு அகலாமல் உள்ளது. அதனால்தான் இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டால் என்னை அறியாமல் என் மனதிலும் ஆசை துளிர் விட்டு விடுகிறது. அதற்கு நீங்கள் என்னை மன்னித்து விட வேண்டும்'. அதைக் கேட்ட ஸ்வாமிகள் அவனுக்கு ஆறுதல் கூறினார். 'குழந்தாய் இதில் உன் தவறு ஏதும் இல்லை. இது இயற்கை ஆகும். உன்னுடைய நல்ல குணத்தினால் நீ என்னிடம் மறைக்காமல் உன் மனதில் இருந்ததை கூறி விட்டாய். கவலைப் படாதே. நீ அடுத்த ஜென்மத்தில் பீதார் எனும் நகரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து அந்த நாட்டின் மன்னனாக இருப்பாய். அப்போது நானும் உன்னை வேறு அவதாரத்தில் வந்து சந்திப்பேன். கவலைப்படாதே. உன்னுடைய இந்த ஜென்ம அனைத்து ஆசையும் அடுத்த ஜென்மத்தில் நிறைவேறும்' என்று கூறி அவனை ஆசிர்வதித்தார். அப்போது அந்த வண்ணான் பணிவாக அவரிடம் கேட்டான் 'ஸ்வாமி நீங்கள் எனக்குத் தந்த இந்த ஆசிகளே எனக்கு போதுமானது. ஆனால் ஒருவேளை நான் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் அருள்புரிந்தபடி முஸ்லிம் மன்னனாக ஆகிவிட்டாலும், உங்களுக்கு எந்த விதத்திலாவது பணிவிடை செய்யும் நிலையில்தான் இருக்க வேண்டும். அப்போது இந்த ஜென்மத்தின் வாழ்வை நான் அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கும் நீங்கள் அருள் புரிய வேண்டும்'. அவன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீ பாத வல்லபா அவனிடய கூறினார் 'குழந்தாய், நீ நிச்சயம் அடுத்த ஜென்மத்திலும் எனக்கு சேவகம் செய்யும் வாழ்க்கையுடன் இருப்பாய். அப்போது உனக்கும் பூர்வ ஜென்ம வாழ்கை, அதாவது இந்த ஜென்ம வாழ்கை நினைவில் இருக்கும் வகையில் நீயும் இருப்பாய்'. விரைவில் அந்த வண்ணானும் இறந்து போனான். பீதார் நகரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து மன்னனாகவும் ஆகிவிட்டான். அதற்கு இடையில் குருபுரத்தில் தங்கி இருந்த ஸ்ரீ பாத வல்லபா அவர்களும் நதியின் உள்ளே அப்படியே மறைந்து விட்டார். அவர் நடந்து சென்று போய் அங்கிருந்து கரையில் விட்டுச் பாதுகைகளையே சென்ற இன்றும் குருபுரத்தில் உள்ள ஆலயத்தில் பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். அந்த இடம் இன்றும் புனித ஷேத்திரமாக கருதப்பட்டு வருகிறது (இத்துடன் அத்தியாயம் -9 முடிந்தது). தொடரும். 🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #தெய்வீக சிந்தனைகள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
18 likes
11 shares